தியாக தீபமே
விடுதலைத் தீயே....
அன்னை மடியில்
நீ நடந்த தடங்கள் அழியவில்லை..!
அன்னை மண்ணில்
நீ பதித்த போராட்டச் சுவடுகள்
கருவறைகளாகி
சாதனைகளாய் பிரசவிக்கின்றன...!
நீ சுமந்த விடுதலைக் கனவு
நனவாகும் நாள் தொலைவில் இல்லை..
நீ நேசித்த தலைவன் வழி
மக்கள் நடத்தும்
களம் சொல்லுது கதை...!
நாளைய உலகில்
உன் உயிரினும் மேலாம் மக்கள்
உன் நினைவோடு
விடுதலை கொண்ட சுதந்திர புருசராய்.....
நீயே காண்பாய் விண்ணிருந்து....!
உன் ஆன்மக் கனவு ஈடேறும்
இப்போ
தூங்கு அண்ணா தூங்கு
நிம்மதியாய் தூங்கு...!
என்றும் எம் அவதார புருசனாய்
நீயும் வாழ்வாய்
தூங்கு அண்ணா தூங்கு
நிம்மதியாய் தூங்கு...!
ஆக்கம் குருவிகள் - 11-09-2004
Monday, September 18, 2006
திலீபன் அழைப்பது சாவையா..இந்தச் சின்ன வயதில் அது தேவையா..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment