Wednesday, November 26, 2008

வாழ்த்தடா வாழ்த்து.. வாழ்த்தும் போதே வீரம் வரும்.



அண்ணன் என்று சொல்லடா
தமிழ் மன்னன் என்று சொல்லடா
பிரபாகரன் எனும்
தமிழ் வீரனை..!

அவன் பேச்சில் ஒரு மூச்சடா
மூச்சில் கூட தமிழடா
தமிழ் மானம் காக்கும் வீரம்
அவன் தோள்களில்..!

படை நடத்தும் சிங்களம்
பதறிப் போகும் பாரடா
அண்ணன் படையின் வீரம்
மாழ்வதில்லை கேளடா..!

சண்டைக்களத்தில் அவன் வாழ்வடா
சாவுக்கும் அஞ்சாத வீரன்டா
தமிழ் மானம் அவன் உயிரடா
சயனைட் காவும் தோழன்டா..!

அண்ணன் தலைமையில்
வேங்கைகள் பாரடா..
தமிழீழத்தின் மலர்வடா
வெறும் கைகளில் இல்லையடா
உணர்ந்தும் நீயும் நில்லடா
அண்ணன் வழியில் கரங்கோர்த்தே..!

வாழ்த்தடா வாழ்த்து
அண்ணனை வாழ்த்து
54வது அகவையில் வாழ்த்து
வாழ்த்தும் போதே
வீரம் வரும்...
விழித்தெழுந்து நடவடா
அண்ணன் பாதையில்
தாய் மண்ணை மீட்க..!


நன்றி யாழ் இணையம்.

Thursday, June 19, 2008

தொலைந்த கவிதைகள் சில கிடைத்தன.

2004 டிசம்பர் திங்களில் தாக்கிய சுனாமி தொடர்பாக எழுதிய கவிதை http://kuruvikal.yarl.net சிதைவடைந்ததோடு தொலைந்து போனது. அத்தோடு சேர்த்து பல கவிதைகளும் தொலைந்து போயின.

இப்போ சுனாமி பற்றி கவிதை ஒன்றும் இன்னும் சில கவிதைகளும் பிறதளங்களில் இருந்து மீடக்கப்பட்டுள்ளன. அத்தளங்கள் பெருந்தன்மையோடு எழுதியவரின் பெயர் குறிப்பிட்டு ஆக்கங்களை பிரசுரித்திருந்தால் இவற்றை மீட்க முடிந்துள்ளது.

நன்றி நெருடல் இணையத்தள நண்பர்களே.

------------

கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!

கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!
படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!

கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!

மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!

அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!

குருவிகள்.

நெருடலில் கவிதையைக் காண இங்கு அழுத்துங்கள்.

-----------------

வாழ்க்கையில்... வனா, வாவன்னா.

வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!

வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!

வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....!

கொழுவியாரின் புண்ணியத்தில் மீட்க்கப்பட்ட கவிதைகளில் ஒன்று.

கொழுவியாரின் வலைப்பூவில் காட்சியளிக்கும் தொலைந்து போன கவிதைகளில் சில. இங்கு அழுத்திப் பார்க்கலாம்.

நன்றி கொழுவியாரே..!

இதுவரை மீட்கப்பட்ட 67 மேலதிக கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. கவிதைகளை மீட்டுத் தந்தது அன்புத் தங்கை வெண்ணிலா. நன்றிகள் வெண்ணிலாத் தங்கையே.

Wednesday, May 21, 2008

பிரிகேடியர் பால்ராஜ் ஓர் களச்சரித்திரம்.



வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்





பிரிகேடியர் பால்ராஜ்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.

இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.

முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.

இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.

பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

மூலம் இங்கு.

Wednesday, May 14, 2008

பெரியாரும் நாகம்மையும் விண்ணுலக வாழ்வில்.

பெரியார்: நாகம்மை என்னடி காரியம் செய்தாய்? இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவே இல்லையடி

நாகம்மை: வாருங்கள் நாதா.. இப்பதான் என்னைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியதோ..?! உயிருடன் இருக்கிறாளா என்று பார்க்க வந்தீர்கள் போல.

பெரியார்: போடி முட்டாள் பெண்ணே. உன்னைத் தானேடி நான் காதலிக்கிறேன். கலியாணம் செய்திருக்கிறேன். பிறகெதற்கு இப்படி தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.

நாகம்மை: நாதா.. நான் உங்களின் பாதங்களே சரண் என்று உங்களையே நம்பி வாழ்பவள்.

பெரியார்: போடி பேதைப் பெண்ணே. நீயதெற்கு என்னை சரணடைய வேண்டும். முட்டாள் பார்பர்னன் போல பேசாதே.

நாகம்மை: நாதா.. என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். நான் நீங்களே கதி என்று வாழும் பேதைதான் நாதா. அதற்காய் பெருமைப்படுபவள்.

பெரியார்: சிறுமையாய் காரியங்கள் செய்து கொண்டு பெருமைப்படுவதாய் சொல்லாதே நாகம்மை.

நாகம்மை: என்ன நாதா சொல்கிறீர்கள்?

பெரியார்: என்னை நீ நம்பி இருந்தால் இப்படியெல்லாம் பகுத்தறிவில்லாமல் பேசுவாயா..?!

நாகம்மை: நாதா.... எது பகுத்தறிவில்லை எங்கிறீர்கள்..?!

பெரியார்: இப்படி என்னிடம் சரண் அது இது என்று பேசாதே. அது பார்பர்னன் கோவிலில் சிலைக்கு முன் பேசுவதை ஞாபகமூட்டுகிறது. உன் மேலான காதலை அது தகர்த்துவிடுகிறதடி. என் காதல் "மூட்ட" மாத்தாதேடி.

நாகம்மை: என்ன நாதா சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள். நானோ உங்களின் அன்புக்காய் ஏங்குகிறேன். நீங்களோ.. பார்பர்னனைத் திட்டுவதையே குறியாய் கொண்டு இருக்கிறீர்கள் என்ன ஆச்சுது உங்களுக்கு..?!

பெரியார்: அது ஒன்றுமில்லையடி... காந்தி அடிகளைப் பார்த்துப் பேசி காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றப் போனேன். அந்தாள் கராரா இருந்திட்டாரு. அந்தக் கோபத்தில அவர் மதிக்கும் இராமரைப் பழிவாங்க பார்பர்னனை இழுத்து வைச்சுப் பேசினாத்தானே எனக்கு மனசு அடங்கும். அதுதானடி..!

நாகம்மை: நாதா.. நான் உங்களின் மேல் காதலோடு இருக்கும் இவ்வேளையிலாவது உந்த பார்பர்ன நச்சரிப்பை விடுவீர்களா..??!

பெரியார்: என்னடி நாகம்மை.. பகுத்தறிவில்லாமல் பேசுகிறாய். காதல் என்னடி காதல். பகுத்தறிவால் அதற்கு விளக்கம் சொல்லு பார்க்கலாம். அது ஒன்றும் இலகுவான விடயமில்லையடி.

நாகம்மை: நாதா.. உங்கள் பகுத்தறிவும் வியாக்கியாணமும் என்னோடு வேண்டாம் நாதா. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

பெரியார்: என்னடி சொன்னாய் நாகம்மை. நான் தமிழரைக் கைவிட்டாலும்.. தமிழைக் கைவிட்டாலும்.. என் பகுத்தறிவையும் நான் பேசும் வியாக்கியாணத்தனத்தையும் விடமாட்டேண்டி. அவை தாண்டி என்னை உலகுக்கு காட்டிட்டு நிற்குது பெரியார் என்று. அவை என் கன்னட இரத்தத்தில் பிறந்ததடி.

நாகம்மை: ஓ அந்தக் கன்னட இரத்தத்தால் தான் என்னைக் காதலிப்பதாகக் கொஞ்சிக் குலவிவிட்டு.. மணியம்மையிடம் மாட்டீனீர்களோ..??!

பெரியார்: ஐயகோ.. அந்த விசயம் உனக்கு எப்படித் தெரியுமடி. நீ இறந்த பின் தானே மணியைக் கலியாணம் செய்தேன். என் பகுத்தறிவுப்படி இறந்தவர்களுக்கு பூலோகத்தில் நடக்கும் விடயம் தெரியாதேடி. எப்படிடி கண்டுபிடித்தாய் அதை.

நாகம்மை: கண்ணாடியும் போட்டுக் கொண்டு தாடியும் வளர்த்துக் கொண்டு கலியாணம் என்பது பெண்களுக்குக் கூடாது என்று சொல்லித் திரியும் போது எனக்கு ஒரு சந்தேகம் வந்திச்சுது. இருந்தாலும் நீங்கள் பால் மணம் மாறா பச்சிளம் பாலகியை தள்ளாடும் வயதில் மணப்பீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை நாதா. மணியம்மை என்றொரு சக்களத்தி வருவாள் என் வாழ்வில் என்றும் நினைக்கவே இல்லை.

பெரியார்: பகுத்தறிவில்லாமல் பேசாதடி நாகம்மை. தள்ளாடும் வயதில் கைத்தடிக்குப் பதிலாக மணியம்மையை மணந்தேண்டி. என்னைத் தாங்கிச் செல்ல.

நான் ஒன்றும் பார்பர்னனின் முருகன் போல வள்ளி தெய்வையானையை மணக்கவில்லையேடி. ஒரே நேரத்தில் இரண்டு பொண்டாட்டி வைச்சிருக்கல்லையேடி. உன்னை மேல்லோகம் அனுப்பிட்டுத்தான் மணியை மணந்தேன்.

நாகம்மை: அப்படியா நாதா. அப்போ மணியம்மை பெண்ணல்ல உங்கள் கைத்தடி எங்கிறீர்களா..?!

பெரியார்: நாகு என்ர விசரை கிளப்பாத. பார்பர்னன் போல எரிச்சல் வாற மாதிரி இப்படி முட்டாள் தனமாகப் பேசி.

நாகம்மை: எது நாதா முட்டாள் தனம். பெண்கள் ஆண்களுக்கு அடிமையில்லை. பெண்கள் திருமணம் முடிப்பதாலும் பிள்ளை பெறுவதாலும் ஆண்களுக்கு அடிமையாகிறார்கள் என்றீர்களே..! அப்படிச் சொல்லிவிட்டு மணியம்மையை மறு மணம் முடித்தீர்களே. அது உங்களையே நீங்கள் ஆணில்லை என்று சொல்வதை போலல்லவா இருக்கிறது. அதை உணராமல் நீங்கள் செய்ததை நீங்களே அறியாமல் பேசுகிறீர்களே அதை விடவா நான் பேசுவது முட்டாள் தனம் என்கிறீர்கள்.

பெரியார்: என்னடி கேட்டாய். என்னைப் பார்த்தா கேட்டாய் இக்கேள்வி. பார்பர்னன் கூடக் கேட்காத கேள்வியடி இது. நான் ஆம்பிளையடி. வாய்க்கு வந்தபடி ஆயிரம் சொல்லி இருப்பன் மேடைகளில். அதையெல்லாம் பெரியாரின் "பொன் வாக்குகள்" என்று எடுக்கச் சொன்னனா தமிழர்களிடம்.

நாகம்மை: தமிழர்கள் முட்டாள் தானுங்க. அதாலதான் அவர்களின் மொழியையே காட்டுமிராண்டி மொழி என்றீர்களே. அதைக் கூட பொருட் படுத்தாமல் எருமை மாட்டில் மழை பெய்த கணக்கா உங்களை தூக்கி வைத்துக் கொண்டாடினார்களே. அவர்களைப் பார்த்து நீங்கள் இப்படிக் கேட்கத்தான் செய்வீர்கள் நாதா.

பெரியார்: அது தமிழர்களின் பகுத்தறிவில்லாத நிலை. அந்தப் பேதைத் தனத்தை அவர்களிடம் வளர்க்க நான் பகுத்தறிவு என்று பேசி பட்ட கஸ்டம் தெரிந்தால் இப்படி எல்லாம் கதைக்க மாட்டாய் நாகம்மை.

நாகம்மை: தெரியும் தெரியும். அதுதான் கற்சிலை மேலுள்ள கோபத்தில் என் கற்பைக் கூட கவனிக்காமல் எனக்கு விபச்சாரப் பட்டம் சூட்டி உங்களின் ஆண்மையை நிரூபித்தவராய்சே நீங்கள்.

பெரியார்: (நாகம்மையை முறாய்தபடி)... என்னடி கட்டிய புருசன் என்று பார்க்காமல் எதிர்த்துப் பேசுகிறாய். தெரியும் தானே என்னை எதிர்த்து நியாயம் பேசிய அண்ணாவையே திராவிடக் கழகத்தை விட்டு அடித்து விரட்டியவன் நான்.

நாகம்மை: ஆனால் அது என்னிடம் வாய்க்காது நாதா. நீங்கள் எனக்கே துரோகம் செய்தவராச்சே.

பெரியார்: எதடி துரோகம். ஒரு ஆம்பிளை தன்ர விருப்பத்துக்கு எத்தனை பெண்களையும் கலியாணம் முடிக்கலாமடி. அது பகுத்தறிவு. உன்னை நான் வேறு ஆம்பிளையள கலியாணம் முடிக்க வேண்டாம் என்று தடுத்தனானா..??!

நாகம்மை: நாதா.. உங்களுக்கு பகுத்தறிவுப் பித்துப் பிடித்திவிட்டது போலும். அதுதான் ஜேர்மனிக்குப் போய் வெள்ளைக்காரிகளோடு நிர்வாண நடனம் ஆடிவிட்டு வந்து ரம்பையும் ஊர்வசியும் சொர்க்கத்தில் கடவுள் முன் ஆடலாம் நான் ஆடக்கூடாதோ என்று கேட்டீர்கள் போல.

பெரியார்: நாகம்மை.. விட்டால் நீயே பார்பர்னனுக்கு குறிப்பிடுத்துக் கொடுப்பாய் போலிருக்கே என்னை எதிர்த்துப் பேச. பார்ப்பர்னன் மற்ற தமிழர்களைப் போல ஏமாளியல்ல. அவன் புத்திசாலி. சிறு துரும்புச் சீட்டுக் கிடைத்தாலே போதும் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான். அதனால் தான் அவனை என்னிடமும் மற்ற தமிழர்களிடத்தும் நெருங்க விடாமல் சாதி எதிர்ப்பென்று பிராமண சாதித் தீயை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறேன்.

நாகம்மை: தெரியுமே.. காதலித்த எனக்கே கணக்கு விட்டவராச்சே நீங்கள். உங்கள நம்பிற தமிழர்களுக்கு என்னென்ன செய்வீர்கள் என்று தெரியாதா என்ன.

பெரியார்: தமிழர்கள் முட்டாள்களடி.. அவர்கள் செம்மறியாட்டுக் கூட்டம். சொன்னபடி சிந்தனையில்லாமல் கேட்டு நடக்குங்கள். ஆனால் நீ என்ர பலவீனத்தையே வைச்சு என்னையே கலாய்கிறாயடி. உன்னோட கவனமாத்தான் இருக்க வேணும்.

நாகம்மை: பின்ன கள்ளைக் குடிக்காதே என்று தென்னை மரத்தைத் தறிப்பீங்க.. அடுத்த நாளே கள்ளச்சாரயத்தை விட கள்ளு மேல் என்று தறிச்ச இடத்தில இன்னொரு தென்னையை நாட்டூவீங்க. இப்படி முன் பின் யோசனை புத்தி இல்லாமல் பேசுற உங்களை எல்லாம் "பெரியார்" "பகுத்தறிவுவாதியுன்னு" சொல்லிட்டு திரியுற தமிழர்கள் முட்டாள் தானுங்களே.

பெரியார்: உரத்துப் பேசாத நாகு. நாங்க இஞ்ச விண்ணுலோகத்தில பேசிக்கிறது பூலோகத்திற்கும் கேட்டிடப் போகுது. கேட்டிச்சு தமிழர்கள் என் சிலைக்கு செருப்பால அடிப்பார்கள். கடவுள் சிலைக்கு பூமாலை போடுவார்கள். அப்புறம் பார்பர்னன் அவர்களை நெருங்கி தமிழை, தமிழரை வளர்க்க அறிவுரை சொல்லிடுவான். அது கர்நாடகத்தின் எழுச்சியை வீழ்ச்சியாக்கிடும்டி. தமிழ தேசியம் என்ற பூதத்தை திராவிடம் என்ற புட்டிக்குள்ள அடச்சு வைச்சுதாலதான்.. இந்திய தேசியம் இப்ப தமிழ்நாட்டில் இருக்குது. அது யாரால என்னால தானடி. அதைப் புரிஞ்சுக்கோ. நான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவன்னு சொல்லிக்கிறாங்க. ஆனா தமிழரின் தமிழர் தேசக் கனவை சிதைத்து.. தென்னிந்தியாவை இணைச்சவனே நான் தானடி.

நாகம்மை: சரி சரி நீங்களே உங்களை புளுகினது காணும். வாங்கோ காந்தி அடிகள் கரே ராம் நிகழ்ச்சி நடத்தப் போறாராம். ஒருக்கா போய் இராம தரிசனம் செய்திட்டு வரும்.

பெரியார்: சரி நட. அப்படியே நான் மணியம்மைக்கு ஒரு மணியோடர் அனுப்பிட்டு வாறன். கைச்செலவுக்கு காசில்லை என்றால் அவள் எங்க போவாள். என்னைப் போல பார்பர்னனின் காசிக்குப் போக.. காசியும் இல்ல இஞ்ச விண்ணுலகத்தில.

நாகம்மை: எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு. என்னிடமே சக்களத்திக்கு காசு அனுப்பப் போறன் என்றீங்கள். அதுசரி பார்பர்னனைத் திட்டிக் கொண்டே அவனுடன் நட்பு வைச்சு ரகசியமாய் காய் நகர்த்திய காய் அல்லவா நீங்கள்.

பெரியார்: ஏதோ கிழட்டு வயசில செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடத்தானடி. பார்பர்னன் அதுதான் பூலோகத்தில யாகம் என்று செய்யுறான் நான் இதை இங்க செய்யுறன்.

நாகம்மை: நாதா.. போதும் உங்கள் ரோதணை. திரும்பத் தொடங்காதீங்க. உந்த பார்பர்ன புராணத்தை. பூலோகத்தில இணையத்தளங்களில வலைப்பூக்களில உங்கட உந்தப் புராணம் தானாம் இப்ப கிட்.

பெரியார்: அப்படியாடி. என்ன தான் இருந்தாலும் என்ர சிஷ்ய கோடிகள்.. பார்பர்ன சாமிமாரின் சிஷ்ய கோடிகளை விட திறமைசாலிகள் தான்.

நாகம்மை: ஆமா.. ஆசை தோசை அப்பளம் வடை. விட்டால் உங்களைப் பற்றியே புளுகிட்டு.. எனக்கு பகுத்தறிவு இல்லை எண்டுவியள். நடவுங்கோ. கெதியா கரே ராம் நிகழ்ச்சி முடியப் போகுது.

- முற்றும்.

(இணையத்தில் எடுத்தது.)

Thursday, March 20, 2008

நேருவின் பேரனிடம் நீதி கேட்டவள்...



தெந்தமிழீழத் தாயவள்
செருக்களம் போயினள்
உடலினில் குண்டு சுமந்தல்ல..
வயிற்றினில் பசி சுமந்து..
நெஞ்சினில்
புதல்வர் தம் உணர்வோடு..!

தமிழீழ விடுதலைக்காய்
மாமாங்கம் தனில்
மங்கை அவள்
தனித்து நின்று
துணிந்து திறந்தாள்
சாத்வீகப் போர்க்களம்.

காந்திய தேசத்தின்
ஆக்கிரமிப்பு இராணுவம்
தமிழீழ மகளிர் தம்
மானம் குதறுகையில்
பொங்கினள் பூபதி அம்மா
நேருவின் பேரனிடம்
நீதி கேட்டு..!

தாயவள் பசியினில் துடிக்கையில்
நேருவின் பேரன்
நெஞ்சினில் களிப்புடன்
தமிழின அழிப்பினில்
கழித்தனன் காலத்தை டில்லியில்..!

நாட்கள் கழிகையில்
பொங்கிய பூவவள்
பூகம்பமாய் சிதறினள்
சாவினில் சரித்திரம் படைத்திட்ட
தமிழீழத் தாயவளாய்
மின்னினள் தமிழீழ வானில்.

அன்னையவள் இட்ட
சுதந்திரத் தீயினில்
பூவையர் திரண்டனர்
புலிகளாய்..!
தமிழீழ தேசத்தின்
ஒளி விளக்குளாய்..!

விடுதலைப் பயணம்
இன்னும் முடியவில்லை...
தொடரும் ஆதிக்கக் கரங்களின்
அடங்காத வெறிக்கு
முடிவு வரும்..!
முடித்து வைப்போம்
அன்னையவள் கனவினை..!
சத்தியம் செய்வோம்
அம்மா பூபதி
நினைவினை மனதினில்
சுமந்துமே..!


இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்திறந்த தெந்தமிழீழத் தாய் அன்னை பூபதி அவர்களின் 20ம் ஆண்டு நினைவுக் கவிதை யாழ் இணையத்தில் இருந்து...

Wednesday, January 09, 2008

கிட்டு மாமா


விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கேணல் கிட்டு.

வெடியோசை எழுந்தது
எங்கள் நெஞ்சோசை அழிந்தது
களத்தோடு களமாடி
கோட்டைக்குள் அடித்தெழுந்த
அந்தப் புயலும் ஓய்ந்தது...!
தங்க தமிழீழ வேங்கையது
வங்கக் கடல் நடுவே சரிந்தது...!

அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!

குரலோசை எழுந்தது - அது
அவன் புகழோசை சொன்னது
விடியலின் தாய் மகன்
விடிவெள்ளியான கதை
முடிவின்றிச் சொன்னது....!
தர்மம் வெல்லும் என்பது
காலத்தின் கோலம் என்றது
சரியாகி நின்றது
எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள்
அலையலையாய் சுமந்தது...!


- தேசப்பிரியன்

இணையத்தில் பெற்ற கவிதை. மூலம் இங்கு.