tag:blogger.com,1999:blog-188596902024-03-08T03:41:55.559+00:00தேடற்சரம்கவிதைகள் மற்றும் பிற.kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-18859690.post-64346201791928415102015-05-15T06:31:00.002+01:002015-05-15T06:31:54.632+01:00முள்ளிவாய்க்கால் பேய்கள் வாழும் பூமியில் இருந்து ஓர் உயிர் பேசுகிறது..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLohyphenhyphen_2NOUsknWXebNGtlo4A-UryX_ahyCbR9YDhMUEZCbNdJNO1ISP5KKYPlanhBv5chqXSozMW5U875hKyXGWqlbzYn-6Nk8RDrw150P4DeOM5PH9IRbzLMOTM1UhassfEp4jw/s1600/mulli.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLohyphenhyphen_2NOUsknWXebNGtlo4A-UryX_ahyCbR9YDhMUEZCbNdJNO1ISP5KKYPlanhBv5chqXSozMW5U875hKyXGWqlbzYn-6Nk8RDrw150P4DeOM5PH9IRbzLMOTM1UhassfEp4jw/s320/mulli.jpg" width="320" /></a></div>
<em><strong>முள்ளிவாய்க்கால்</strong></em><br />
<em><strong>காற்றிடை வாழும்</strong></em><br />
<em><strong>உயிர் பேசியது..</strong></em><br />
<br />
<em><strong>உலோகத் துகள்களிடை</strong></em><br />
<em><strong>உடல் துகள்களாகி சிதறி நிற்க</strong></em><br />
<em><strong>காற்றுக் கூட அவதிப் பட்டது</strong></em><br />
<em><strong>அகதியாகி </strong></em><br />
<em><strong>சன்னங்களிடை தன் இடம் பிடிக்க.</strong></em><br />
<br />
<em><strong>இட நெருக்கடியில்</strong></em><br />
<em><strong>உயிர்கள் உரசிக் கொண்டன</strong></em><br />
<em><strong>செல்லுமிடம்</strong></em><br />
<em><strong>சொர்க்கமோ நரகமோ</strong></em><br />
<em><strong>திசைகள் தெரியாமல்</strong></em><br />
<em><strong>சன்னங்களில் அவை</strong></em><br />
<em><strong>படுத்துறங்கின.</strong></em><br />
<br />
<em><strong>ஊழியக் காலமோ</strong></em><br />
<em><strong>கலி காலமோ</strong></em><br />
<em><strong>அல்ல அல்ல..</strong></em><br />
<em><strong>தமிழர் அழிப்புக் காலமாய்</strong></em><br />
<em><strong>அது நிகழ்ந்து கொண்டிருந்தது..!</strong></em><br />
<br />
<em><strong>சாத்திரங்கள் பொய்த்து வீழ்ந்தன</strong></em><br />
<em><strong>சதா மரண ஓலங்கள்</strong></em><br />
<em><strong>உலகை ஆளும் அலைகளின்</strong></em><br />
<em><strong>ஊளைகளை தாண்ட வழியின்றி</strong></em><br />
<em><strong>களைத்தே மெளனித்தன.</strong></em><br />
<em><strong>உலக மானுட மனச்சாட்சி</strong></em><br />
<em><strong>கண்ணை மூடி மூச்சிழுத்துக் கிடந்தது...!</strong></em><br />
<br />
<em><strong>மீண்டும்.. காற்றிடை வாழும்</strong></em><br />
<em><strong>உயிர் பேசிக் கொண்டது..</strong></em><br />
<br />
<em><strong>அந்தக் கொடுமையின்</strong></em><br />
<em><strong>தாண்டவம் கண்டு</strong></em><br />
<em><strong>ஆண்டுகள் ஆறு கடந்தாயிற்று..</strong></em><br />
<em><strong>ஆன்ம அமைதிக்கு கூட</strong></em><br />
<em><strong>அங்கு வழியில்லை.!</strong></em><br />
<br />
<em><strong>உரிமை தேடிய</strong></em><br />
<em><strong>சக மனித அழிவினில்</strong></em><br />
<em><strong>சரித்திரம் படைத்திட்டதாய்</strong></em><br />
<em><strong>அமைதி காத்திட்டதாய்</strong></em><br />
<em><strong>சமாதானம் சாந்தி அடைந்திட்டதாய்</strong></em><br />
<em><strong>எழும் சலசலப்புகள் அடங்கவில்லை.</strong></em><br />
<br />
<em><strong>புழுதி கிளம்பும் மண்ணில்</strong></em><br />
<em><strong>எழுந்து நிற்கும்</strong></em><br />
<em><strong>வெற்றிக் கோபுரங்களின் உச்சியில் </strong></em><br />
<em><strong>பேய்கள் வாழ்வது தெரியாமல்</strong></em><br />
<em><strong>உலகம் உறங்கிக் கொள்கிறது.!</strong></em><br />
<br />
<em><strong>கண்ணிமைப் பொழுதினில்</strong></em><br />
<em><strong>அழிந்து போன</strong></em><br />
<em><strong>தன் உடலைத் தேடும்</strong></em><br />
<em><strong>உயிர்கள் அங்கு..</strong></em><br />
<br />
<em><strong>தன் உடல் அழிப்புக்கான</strong></em><br />
<em><strong>நீதியைத் தேடி </strong></em><br />
<em><strong>பேய்களாகி</strong></em><br />
<em><strong>அந்தக் கோபுரங்களில்</strong></em><br />
<em><strong>வீடு கட்டி வாழ்கின்றன..</strong></em><br />
<em><strong>எத்தனை கண்கள் </strong></em><br />
<em><strong>காணும் அவை...!</strong></em><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcIYR_I1j41abhu5xYzUcrrxrcpguJYbZzsWmd8GgJOozgBj2qHLWwJyhhJSQeKOYBn-oGMO0jHP1PX1H6-uDjrHOq0P8e8J35vQYPGrmJ0lyuR05Enr5mX64wZRj42giKc-AOiw/s1600/mulli2.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcIYR_I1j41abhu5xYzUcrrxrcpguJYbZzsWmd8GgJOozgBj2qHLWwJyhhJSQeKOYBn-oGMO0jHP1PX1H6-uDjrHOq0P8e8J35vQYPGrmJ0lyuR05Enr5mX64wZRj42giKc-AOiw/s320/mulli2.png" width="286" /></a></div>
<br /></div>
kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18859690.post-62924572399211613002008-11-26T07:48:00.004+00:002008-11-26T09:23:34.847+00:00வாழ்த்தடா வாழ்த்து.. வாழ்த்தும் போதே வீரம் வரும்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvHQ5gN-SV3EtENCIt8rCukVBnqFa1zqA6tymNxtfORfyJ75azVJrrye2gVVFz-mhQVllJ_y6CTXEbRPMm-12bt64dqfMYKbI4XXpgOUWPl50HPpxCuvMWD6XdjuTA0MH9VvGPLQ/s1600-h/Thalaivar-54-(1).jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 166px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvHQ5gN-SV3EtENCIt8rCukVBnqFa1zqA6tymNxtfORfyJ75azVJrrye2gVVFz-mhQVllJ_y6CTXEbRPMm-12bt64dqfMYKbI4XXpgOUWPl50HPpxCuvMWD6XdjuTA0MH9VvGPLQ/s200/Thalaivar-54-(1).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5272870435721889314" /></a><br /><br /><strong>அண்ணன் என்று சொல்லடா<br />தமிழ் மன்னன் என்று சொல்லடா<br />பிரபாகரன் எனும்<br />தமிழ் வீரனை..!<br /><br />அவன் பேச்சில் ஒரு மூச்சடா<br />மூச்சில் கூட தமிழடா<br />தமிழ் மானம் காக்கும் வீரம்<br />அவன் தோள்களில்..!<br /><br />படை நடத்தும் சிங்களம்<br />பதறிப் போகும் பாரடா<br />அண்ணன் படையின் வீரம்<br />மாழ்வதில்லை கேளடா..!<br /><br />சண்டைக்களத்தில் அவன் வாழ்வடா<br />சாவுக்கும் அஞ்சாத வீரன்டா<br />தமிழ் மானம் அவன் உயிரடா<br />சயனைட் காவும் தோழன்டா..!<br /><br />அண்ணன் தலைமையில்<br />வேங்கைகள் பாரடா..<br />தமிழீழத்தின் மலர்வடா<br />வெறும் கைகளில் இல்லையடா<br />உணர்ந்தும் நீயும் நில்லடா<br />அண்ணன் வழியில் கரங்கோர்த்தே..!<br /><br />வாழ்த்தடா வாழ்த்து<br />அண்ணனை வாழ்த்து<br />54வது அகவையில் வாழ்த்து<br />வாழ்த்தும் போதே<br />வீரம் வரும்...<br />விழித்தெழுந்து நடவடா<br />அண்ணன் பாதையில்<br />தாய் மண்ணை மீட்க..!</strong><br /><br /><em>நன்றி யாழ் இணையம்.</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18859690.post-57612021125503524102008-06-19T15:49:00.006+01:002008-06-22T22:27:13.526+01:00தொலைந்த கவிதைகள் சில கிடைத்தன.2004 டிசம்பர் திங்களில் தாக்கிய சுனாமி தொடர்பாக எழுதிய கவிதை http://kuruvikal.yarl.net சிதைவடைந்ததோடு தொலைந்து போனது. அத்தோடு சேர்த்து பல கவிதைகளும் தொலைந்து போயின.<br /><br />இப்போ சுனாமி பற்றி கவிதை ஒன்றும் இன்னும் சில கவிதைகளும் பிறதளங்களில் இருந்து மீடக்கப்பட்டுள்ளன. அத்தளங்கள் பெருந்தன்மையோடு எழுதியவரின் பெயர் குறிப்பிட்டு ஆக்கங்களை பிரசுரித்திருந்தால் இவற்றை மீட்க முடிந்துள்ளது.<br /><br />நன்றி நெருடல் இணையத்தள நண்பர்களே.<br /><br />------------<br /><br /><strong><em>கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...! </em></strong><br /><br />கடலிடை ஒரு குழப்பம் <br />கலைந்தது அமைதி <br />கறுவி எழுந்தவள் பேசினால் <br />"சுனாமி" அலைகளால்..! <br />சில மணித்துளிகளில் <br />கரை தொட்டவள் <br />ஆடினாள் ஊழியக்கூத்து..! <br />படுக்கையில் உறங்கியோரும் <br />பள்ளி போனோரும் <br />பசியினில் தவித்தோரும் <br />பண்டிகை கண்டோரும் <br />பாதையில் பயணித்தோரும் <br />பார்த்திருக்க பரிதவிக்க <br />பாதியில் போயினர் <br />பரலோகம்...! <br />கட்டியணைத்தபடி <br />கட்டுக்கலைந்தபடி <br />கட்டுடல் சிதைந்தபடி <br />கரையெங்கும் பிணக்கோலம்..! <br /> <br />கண் முன்னே காவியங்கள் <br />அலையோடு அள்ளுப்பட <br />கைகள் இருந்தும் <br />கருவி இருந்தும் <br />கையாலாகாதவர்களாய் உறவுகள்..! <br />பாசப்பிணைப்புக்கள் அறுபட <br />அன்புறவுகள் முறிபட <br />கதறி அழக்கூட அவகாசம் இன்றி <br />பாவிகளான பந்தங்கள் <br />அப்படி ஒரு அலங்கோலம்..! <br /> <br />மங்காத மனித அவலமொன்று <br />மாநிலத்தில் ஆரங்கேறி <br />ஆண்டு ஒன்றுமானது..! <br />அருவி கண்ட விழிகள் <br />அடங்கவில்லை இன்னும்...! <br />நெஞ்சுக்குள் நின்றாடும் <br />நினைவுகள் <br />அழியாத கோலங்களாய் தொடருது..! <br />அடுத்த விநாடி <br />வாழ்வுக்கு என்ன வழி...??? <br />விடை தேடும் மனிதர்கள் <br />இன்னும் அநாதைகளாய்...! <br /> <br />அள்ளிக் கொடுத்ததுவும் <br />கிள்ளிக் கொடுத்ததுவும் <br />கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும் <br />ஏமாற்றியதுவும் <br />பொருளும் பவிசும் <br />போனதுக்கு ஈடாகுமோ...??! <br />கொட்டிக் கொடுத்தது கூட <br />கைக்கெட்டா நிலை..! <br />கொட்டாவிகள் மலிவாக <br />மனதுக்குள் உள்ள வலிக்கு <br />மருந்தென்ன.... <br />அங்கலாய்ப்பு..!!! <br />இன்னும் எத்தனை ஆண்டுகள் <br />அவலத்தின் வலி... <br />தீருமோ அது...???! <br />கூத்தடித்த கடலே விடை கொடு...! <br /><br /><em>குருவிகள்.</em><br /><br /><a href="http://www.nerudal.com/content/view/715/66/">நெருடலில் கவிதையைக் காண இங்கு அழுத்துங்கள்.</a><br /><br />-----------------<br /><br /><strong><em>வாழ்க்கையில்... வனா, வாவன்னா.</em></strong><br /><br />வாழ்வெனும் வீதியில் பயணம்<br />வழக்கங்கள் மாறா விதிகள்<br />வழமையானால் இல்லை அவதிகள்<br />வழமைக்கு மாறாய் விதிகள்<br />வடிவமைத்து வடிவாய் வாழினும்<br />வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!<br />வழமை நாம் விரும்பினும்<br />வழமைகள் மாற்றி<br />வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்<br />வந்தவை தரும் விபத்துக்கள்<br />வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்<br />வருமுன் காப்போம் விதிகள்...!<br /><br />வந்த விதி வழி அப்பாவியாய்<br />வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்<br />வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்<br />வகை வகையாய் விபத்துக்கள்<br />வந்தவை எதுவும் புதிதல்ல<br />வருந்தவும் அங்கு இடமில்லை<br />வருந்த உன்னில் எதுவுமில்லை<br />வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்<br />வாடா உன் முகம் என்றும் வேண்டும்<br />வரமது தந்திடு அரு மலரே...!<br /><br />வசந்தம் வந்த வேளையில்<br />வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்<br />வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்<br />வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே<br />வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை<br />வரும் என் கை உன்னை நாடியே..!<br />வரும் மரணம் கூட<br />வழி மறிக்கா<br />வகையான அன்பு வழி<br />வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை<br />வருத்தமின்றி வா<br />வகையாய் குதூகலிப்போம்<br />வான வீதியில் வாழ்ந்திடும்<br />வண்ணச் சிட்டுக்களாய்....!<br /><br />கொழுவியாரின் புண்ணியத்தில் மீட்க்கப்பட்ட கவிதைகளில் ஒன்று.<br /><br /><a href="http://koluvithaluvi.blogspot.com/2005/06/blog-post_06.html">கொழுவியாரின் வலைப்பூவில் காட்சியளிக்கும் தொலைந்து போன கவிதைகளில் சில. இங்கு அழுத்திப் பார்க்கலாம்.</a><br /><br />நன்றி கொழுவியாரே..!<br /><br /><a href="http://kuruvikal.wordpress.com/">இதுவரை மீட்கப்பட்ட 67 மேலதிக கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. கவிதைகளை மீட்டுத் தந்தது அன்புத் தங்கை வெண்ணிலா. நன்றிகள் வெண்ணிலாத் தங்கையே.</a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18859690.post-7235927752629670242008-05-21T05:03:00.004+01:002008-05-21T07:15:03.342+01:00பிரிகேடியர் பால்ராஜ் ஓர் களச்சரித்திரம்.<a href="http://www.puthinam.com/d/p/2008/MAY/20080521001.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.puthinam.com/d/p/2008/MAY/20080521001.jpg" border="0" alt="" /></a><br /><br /><em>வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்</em><br /><br /><a href="http://www.puthinam.com/d/p/2008/MAY/20080521004.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.puthinam.com/d/p/2008/MAY/20080521004.jpg" border="0" alt="" /></a><br /><br /><embed src="http://www.youtube.com/v/t7SagNnqGs4&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="250" height="150"></embed><br /><br /><em>பிரிகேடியர் பால்ராஜ்.</em><br /><br /><br />தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.<br /> <br />தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.<br /><br />வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.<br /><br />இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.<br /><br />இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.<br /><br />1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.<br /><br />முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.<br /><br />தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.<br /><br />வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.<br /><br />1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.<br /><br />மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.<br /><br />இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.<br /><br />யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.<br /><br />1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.<br /><br />யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.<br /><br />வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.<br /><br />தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.<br /><br />அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர். <br /><br />2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.<br /><br />போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். <br /><br />பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.<br /><br />அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.<br /><br /><a href="http://www.puthinam.com/full.php?2b1Voqe0dAcYA0ecKA4e3b4g6DX4d3f1e2cc2AmI3d424OO2a030Mt3e">மூலம் இங்கு.</a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18859690.post-40136151661276146882008-05-14T11:49:00.015+01:002008-05-15T11:52:55.235+01:00பெரியாரும் நாகம்மையும் விண்ணுலக வாழ்வில்.<em>பெரியார்:</em> நாகம்மை என்னடி காரியம் செய்தாய்? இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவே இல்லையடி<br /><br /><em>நாகம்மை: </em>வாருங்கள் நாதா.. இப்பதான் என்னைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியதோ..?! உயிருடன் இருக்கிறாளா என்று பார்க்க வந்தீர்கள் போல.<br /><br /><em>பெரியார்:</em> போடி முட்டாள் பெண்ணே. உன்னைத் தானேடி நான் காதலிக்கிறேன். கலியாணம் செய்திருக்கிறேன். பிறகெதற்கு இப்படி தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.<br /><br /><em>நாகம்மை:</em> நாதா.. நான் உங்களின் பாதங்களே சரண் என்று உங்களையே நம்பி வாழ்பவள்.<br /><br /><em>பெரியார்:</em> போடி பேதைப் பெண்ணே. நீயதெற்கு என்னை சரணடைய வேண்டும். முட்டாள் பார்பர்னன் போல பேசாதே.<br /><br /><em>நாகம்மை:</em> நாதா.. என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். நான் நீங்களே கதி என்று வாழும் பேதைதான் நாதா. அதற்காய் பெருமைப்படுபவள்.<br /><br /><em>பெரியார்: </em>சிறுமையாய் காரியங்கள் செய்து கொண்டு பெருமைப்படுவதாய் சொல்லாதே நாகம்மை.<br /><br /><em>நாகம்மை:</em> என்ன நாதா சொல்கிறீர்கள்?<br /><br /><em>பெரியார்:</em> என்னை நீ நம்பி இருந்தால் இப்படியெல்லாம் பகுத்தறிவில்லாமல் பேசுவாயா..?!<br /><br /><em>நாகம்மை:</em> நாதா.... எது பகுத்தறிவில்லை எங்கிறீர்கள்..?!<br /><br /><em>பெரியார்: </em>இப்படி என்னிடம் சரண் அது இது என்று பேசாதே. அது பார்பர்னன் கோவிலில் சிலைக்கு முன் பேசுவதை ஞாபகமூட்டுகிறது. உன் மேலான காதலை அது தகர்த்துவிடுகிறதடி. என் காதல் "மூட்ட" மாத்தாதேடி.<br /><br /><em>நாகம்மை:</em> என்ன நாதா சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள். நானோ உங்களின் அன்புக்காய் ஏங்குகிறேன். நீங்களோ.. பார்பர்னனைத் திட்டுவதையே குறியாய் கொண்டு இருக்கிறீர்கள் என்ன ஆச்சுது உங்களுக்கு..?!<br /><br /><em>பெரியார்: </em>அது ஒன்றுமில்லையடி... காந்தி அடிகளைப் பார்த்துப் பேசி காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றப் போனேன். அந்தாள் கராரா இருந்திட்டாரு. அந்தக் கோபத்தில அவர் மதிக்கும் இராமரைப் பழிவாங்க பார்பர்னனை இழுத்து வைச்சுப் பேசினாத்தானே எனக்கு மனசு அடங்கும். அதுதானடி..!<br /><br /><em>நாகம்மை: </em>நாதா.. நான் உங்களின் மேல் காதலோடு இருக்கும் இவ்வேளையிலாவது உந்த பார்பர்ன நச்சரிப்பை விடுவீர்களா..??!<br /><br /><em>பெரியார்:</em> என்னடி நாகம்மை.. பகுத்தறிவில்லாமல் பேசுகிறாய். காதல் என்னடி காதல். பகுத்தறிவால் அதற்கு விளக்கம் சொல்லு பார்க்கலாம். அது ஒன்றும் இலகுவான விடயமில்லையடி.<br /><br /><em>நாகம்மை:</em> நாதா.. உங்கள் பகுத்தறிவும் வியாக்கியாணமும் என்னோடு வேண்டாம் நாதா. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.<br /><br /><em>பெரியார்: </em>என்னடி சொன்னாய் நாகம்மை. நான் தமிழரைக் கைவிட்டாலும்.. தமிழைக் கைவிட்டாலும்.. என் பகுத்தறிவையும் நான் பேசும் வியாக்கியாணத்தனத்தையும் விடமாட்டேண்டி. அவை தாண்டி என்னை உலகுக்கு காட்டிட்டு நிற்குது பெரியார் என்று. அவை என் கன்னட இரத்தத்தில் பிறந்ததடி.<br /><br /><em>நாகம்மை:</em> ஓ அந்தக் கன்னட இரத்தத்தால் தான் என்னைக் காதலிப்பதாகக் கொஞ்சிக் குலவிவிட்டு.. மணியம்மையிடம் மாட்டீனீர்களோ..??!<br /><br /><em>பெரியார்: </em>ஐயகோ.. அந்த விசயம் உனக்கு எப்படித் தெரியுமடி. நீ இறந்த பின் தானே மணியைக் கலியாணம் செய்தேன். என் பகுத்தறிவுப்படி இறந்தவர்களுக்கு பூலோகத்தில் நடக்கும் விடயம் தெரியாதேடி. எப்படிடி கண்டுபிடித்தாய் அதை.<br /><br /><em>நாகம்மை:</em> கண்ணாடியும் போட்டுக் கொண்டு தாடியும் வளர்த்துக் கொண்டு கலியாணம் என்பது பெண்களுக்குக் கூடாது என்று சொல்லித் திரியும் போது எனக்கு ஒரு சந்தேகம் வந்திச்சுது. இருந்தாலும் நீங்கள் பால் மணம் மாறா பச்சிளம் பாலகியை தள்ளாடும் வயதில் மணப்பீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை நாதா. மணியம்மை என்றொரு சக்களத்தி வருவாள் என் வாழ்வில் என்றும் நினைக்கவே இல்லை.<br /><br /><em>பெரியார்: </em>பகுத்தறிவில்லாமல் பேசாதடி நாகம்மை. தள்ளாடும் வயதில் கைத்தடிக்குப் பதிலாக மணியம்மையை மணந்தேண்டி. என்னைத் தாங்கிச் செல்ல.<br /><br />நான் ஒன்றும் பார்பர்னனின் முருகன் போல வள்ளி தெய்வையானையை மணக்கவில்லையேடி. ஒரே நேரத்தில் இரண்டு பொண்டாட்டி வைச்சிருக்கல்லையேடி. உன்னை மேல்லோகம் அனுப்பிட்டுத்தான் மணியை மணந்தேன்.<br /><br /><em>நாகம்மை:</em> அப்படியா நாதா. அப்போ மணியம்மை பெண்ணல்ல உங்கள் கைத்தடி எங்கிறீர்களா..?!<br /><br /><em>பெரியார்: </em>நாகு என்ர விசரை கிளப்பாத. பார்பர்னன் போல எரிச்சல் வாற மாதிரி இப்படி முட்டாள் தனமாகப் பேசி.<br /><br /><em>நாகம்மை: </em>எது நாதா முட்டாள் தனம். பெண்கள் ஆண்களுக்கு அடிமையில்லை. பெண்கள் திருமணம் முடிப்பதாலும் பிள்ளை பெறுவதாலும் ஆண்களுக்கு அடிமையாகிறார்கள் என்றீர்களே..! அப்படிச் சொல்லிவிட்டு மணியம்மையை மறு மணம் முடித்தீர்களே. அது உங்களையே நீங்கள் ஆணில்லை என்று சொல்வதை போலல்லவா இருக்கிறது. அதை உணராமல் நீங்கள் செய்ததை நீங்களே அறியாமல் பேசுகிறீர்களே அதை விடவா நான் பேசுவது முட்டாள் தனம் என்கிறீர்கள்.<br /><br /><em>பெரியார்:</em> என்னடி கேட்டாய். என்னைப் பார்த்தா கேட்டாய் இக்கேள்வி. பார்பர்னன் கூடக் கேட்காத கேள்வியடி இது. நான் ஆம்பிளையடி. வாய்க்கு வந்தபடி ஆயிரம் சொல்லி இருப்பன் மேடைகளில். அதையெல்லாம் பெரியாரின் "பொன் வாக்குகள்" என்று எடுக்கச் சொன்னனா தமிழர்களிடம்.<br /><br /><em>நாகம்மை:</em> தமிழர்கள் முட்டாள் தானுங்க. அதாலதான் அவர்களின் மொழியையே காட்டுமிராண்டி மொழி என்றீர்களே. அதைக் கூட பொருட் படுத்தாமல் எருமை மாட்டில் மழை பெய்த கணக்கா உங்களை தூக்கி வைத்துக் கொண்டாடினார்களே. அவர்களைப் பார்த்து நீங்கள் இப்படிக் கேட்கத்தான் செய்வீர்கள் நாதா.<br /><br /><em>பெரியார்:</em> அது தமிழர்களின் பகுத்தறிவில்லாத நிலை. அந்தப் பேதைத் தனத்தை அவர்களிடம் வளர்க்க நான் பகுத்தறிவு என்று பேசி பட்ட கஸ்டம் தெரிந்தால் இப்படி எல்லாம் கதைக்க மாட்டாய் நாகம்மை.<br /><br /><em>நாகம்மை:</em> தெரியும் தெரியும். அதுதான் கற்சிலை மேலுள்ள கோபத்தில் என் கற்பைக் கூட கவனிக்காமல் எனக்கு விபச்சாரப் பட்டம் சூட்டி உங்களின் ஆண்மையை நிரூபித்தவராய்சே நீங்கள்.<br /><br /><em>பெரியார்:</em> (நாகம்மையை முறாய்தபடி)... என்னடி கட்டிய புருசன் என்று பார்க்காமல் எதிர்த்துப் பேசுகிறாய். தெரியும் தானே என்னை எதிர்த்து நியாயம் பேசிய அண்ணாவையே திராவிடக் கழகத்தை விட்டு அடித்து விரட்டியவன் நான்.<br /><br /><em>நாகம்மை:</em> ஆனால் அது என்னிடம் வாய்க்காது நாதா. நீங்கள் எனக்கே துரோகம் செய்தவராச்சே.<br /><br /><em>பெரியார்: </em>எதடி துரோகம். ஒரு ஆம்பிளை தன்ர விருப்பத்துக்கு எத்தனை பெண்களையும் கலியாணம் முடிக்கலாமடி. அது பகுத்தறிவு. உன்னை நான் வேறு ஆம்பிளையள கலியாணம் முடிக்க வேண்டாம் என்று தடுத்தனானா..??!<br /><br /><em>நாகம்மை:</em> நாதா.. உங்களுக்கு பகுத்தறிவுப் பித்துப் பிடித்திவிட்டது போலும். அதுதான் ஜேர்மனிக்குப் போய் வெள்ளைக்காரிகளோடு நிர்வாண நடனம் ஆடிவிட்டு வந்து ரம்பையும் ஊர்வசியும் சொர்க்கத்தில் கடவுள் முன் ஆடலாம் நான் ஆடக்கூடாதோ என்று கேட்டீர்கள் போல.<br /><br /><em>பெரியார்:</em> நாகம்மை.. விட்டால் நீயே பார்பர்னனுக்கு குறிப்பிடுத்துக் கொடுப்பாய் போலிருக்கே என்னை எதிர்த்துப் பேச. பார்ப்பர்னன் மற்ற தமிழர்களைப் போல ஏமாளியல்ல. அவன் புத்திசாலி. சிறு துரும்புச் சீட்டுக் கிடைத்தாலே போதும் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான். அதனால் தான் அவனை என்னிடமும் மற்ற தமிழர்களிடத்தும் நெருங்க விடாமல் சாதி எதிர்ப்பென்று பிராமண சாதித் தீயை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறேன்.<br /><br /><em>நாகம்மை:</em> தெரியுமே.. காதலித்த எனக்கே கணக்கு விட்டவராச்சே நீங்கள். உங்கள நம்பிற தமிழர்களுக்கு என்னென்ன செய்வீர்கள் என்று தெரியாதா என்ன.<br /><br /><em>பெரியார்:</em> தமிழர்கள் முட்டாள்களடி.. அவர்கள் செம்மறியாட்டுக் கூட்டம். சொன்னபடி சிந்தனையில்லாமல் கேட்டு நடக்குங்கள். ஆனால் நீ என்ர பலவீனத்தையே வைச்சு என்னையே கலாய்கிறாயடி. உன்னோட கவனமாத்தான் இருக்க வேணும்.<br /><br /><em>நாகம்மை:</em> பின்ன கள்ளைக் குடிக்காதே என்று தென்னை மரத்தைத் தறிப்பீங்க.. அடுத்த நாளே கள்ளச்சாரயத்தை விட கள்ளு மேல் என்று தறிச்ச இடத்தில இன்னொரு தென்னையை நாட்டூவீங்க. இப்படி முன் பின் யோசனை புத்தி இல்லாமல் பேசுற உங்களை எல்லாம் "பெரியார்" "பகுத்தறிவுவாதியுன்னு" சொல்லிட்டு திரியுற தமிழர்கள் முட்டாள் தானுங்களே.<br /><br /><em>பெரியார்:</em> உரத்துப் பேசாத நாகு. நாங்க இஞ்ச விண்ணுலோகத்தில பேசிக்கிறது பூலோகத்திற்கும் கேட்டிடப் போகுது. கேட்டிச்சு தமிழர்கள் என் சிலைக்கு செருப்பால அடிப்பார்கள். கடவுள் சிலைக்கு பூமாலை போடுவார்கள். அப்புறம் பார்பர்னன் அவர்களை நெருங்கி தமிழை, தமிழரை வளர்க்க அறிவுரை சொல்லிடுவான். அது கர்நாடகத்தின் எழுச்சியை வீழ்ச்சியாக்கிடும்டி. தமிழ தேசியம் என்ற பூதத்தை திராவிடம் என்ற புட்டிக்குள்ள அடச்சு வைச்சுதாலதான்.. இந்திய தேசியம் இப்ப தமிழ்நாட்டில் இருக்குது. அது யாரால என்னால தானடி. அதைப் புரிஞ்சுக்கோ. நான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவன்னு சொல்லிக்கிறாங்க. ஆனா தமிழரின் தமிழர் தேசக் கனவை சிதைத்து.. தென்னிந்தியாவை இணைச்சவனே நான் தானடி. <br /><br /><em>நாகம்மை:</em> சரி சரி நீங்களே உங்களை புளுகினது காணும். வாங்கோ காந்தி அடிகள் கரே ராம் நிகழ்ச்சி நடத்தப் போறாராம். ஒருக்கா போய் இராம தரிசனம் செய்திட்டு வரும்.<br /><br /><em>பெரியார்:</em> சரி நட. அப்படியே நான் மணியம்மைக்கு ஒரு மணியோடர் அனுப்பிட்டு வாறன். கைச்செலவுக்கு காசில்லை என்றால் அவள் எங்க போவாள். என்னைப் போல பார்பர்னனின் காசிக்குப் போக.. காசியும் இல்ல இஞ்ச விண்ணுலகத்தில.<br /><br /><em>நாகம்மை: </em>எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு. என்னிடமே சக்களத்திக்கு காசு அனுப்பப் போறன் என்றீங்கள். அதுசரி பார்பர்னனைத் திட்டிக் கொண்டே அவனுடன் நட்பு வைச்சு ரகசியமாய் காய் நகர்த்திய காய் அல்லவா நீங்கள்.<br /><br /><em>பெரியார்: </em>ஏதோ கிழட்டு வயசில செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடத்தானடி. பார்பர்னன் அதுதான் பூலோகத்தில யாகம் என்று செய்யுறான் நான் இதை இங்க செய்யுறன்.<br /><br /><em>நாகம்மை: </em>நாதா.. போதும் உங்கள் ரோதணை. திரும்பத் தொடங்காதீங்க. உந்த பார்பர்ன புராணத்தை. பூலோகத்தில இணையத்தளங்களில வலைப்பூக்களில உங்கட உந்தப் புராணம் தானாம் இப்ப கிட்.<br /><br /><em>பெரியார்: </em>அப்படியாடி. என்ன தான் இருந்தாலும் என்ர சிஷ்ய கோடிகள்.. பார்பர்ன சாமிமாரின் சிஷ்ய கோடிகளை விட திறமைசாலிகள் தான்.<br /><br /><em>நாகம்மை:</em> ஆமா.. ஆசை தோசை அப்பளம் வடை. விட்டால் உங்களைப் பற்றியே புளுகிட்டு.. எனக்கு பகுத்தறிவு இல்லை எண்டுவியள். நடவுங்கோ. கெதியா கரே ராம் நிகழ்ச்சி முடியப் போகுது.<br /><br />- முற்றும்.<br /><br /><em>(இணையத்தில் எடுத்தது.)</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18859690.post-55731337192599733152008-03-20T12:06:00.005+00:002008-12-10T12:08:25.610+00:00நேருவின் பேரனிடம் நீதி கேட்டவள்...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7wpG2A_YlnCx3xcHcEUVZVQpqKT-xgqhkXUZI4Wwgg7cJQ_3AaY_DNsEv8aHwZEop2RV1waWwW1ZNzulMLvJWetHy6PDv65uX-OKOXSJDPKQ9rn7M-lkhAfFfn95m3h78H5vfbA/s1600-h/annai_poopathi001.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7wpG2A_YlnCx3xcHcEUVZVQpqKT-xgqhkXUZI4Wwgg7cJQ_3AaY_DNsEv8aHwZEop2RV1waWwW1ZNzulMLvJWetHy6PDv65uX-OKOXSJDPKQ9rn7M-lkhAfFfn95m3h78H5vfbA/s200/annai_poopathi001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5179794960857516242" /></a><br /><br /><strong><em>தெந்தமிழீழத் தாயவள்<br />செருக்களம் போயினள்<br />உடலினில் குண்டு சுமந்தல்ல..<br />வயிற்றினில் பசி சுமந்து..<br />நெஞ்சினில்<br />புதல்வர் தம் உணர்வோடு..!<br /><br />தமிழீழ விடுதலைக்காய்<br />மாமாங்கம் தனில்<br />மங்கை அவள் <br />தனித்து நின்று<br />துணிந்து திறந்தாள்<br />சாத்வீகப் போர்க்களம்.<br /><br />காந்திய தேசத்தின்<br />ஆக்கிரமிப்பு இராணுவம்<br />தமிழீழ மகளிர் தம்<br />மானம் குதறுகையில்<br />பொங்கினள் பூபதி அம்மா<br />நேருவின் பேரனிடம்<br />நீதி கேட்டு..!<br /><br />தாயவள் பசியினில் துடிக்கையில்<br />நேருவின் பேரன்<br />நெஞ்சினில் களிப்புடன்<br />தமிழின அழிப்பினில்<br />கழித்தனன் காலத்தை டில்லியில்..!<br /><br />நாட்கள் கழிகையில்<br />பொங்கிய பூவவள்<br />பூகம்பமாய் சிதறினள்<br />சாவினில் சரித்திரம் படைத்திட்ட<br />தமிழீழத் தாயவளாய் <br />மின்னினள் தமிழீழ வானில்.<br /><br />அன்னையவள் இட்ட <br />சுதந்திரத் தீயினில்<br />பூவையர் திரண்டனர்<br />புலிகளாய்..!<br />தமிழீழ தேசத்தின்<br />ஒளி விளக்குளாய்..!<br /><br />விடுதலைப் பயணம்<br />இன்னும் முடியவில்லை...<br />தொடரும் ஆதிக்கக் கரங்களின்<br />அடங்காத வெறிக்கு<br />முடிவு வரும்..!<br />முடித்து வைப்போம்<br />அன்னையவள் கனவினை..!<br />சத்தியம் செய்வோம்<br />அம்மா பூபதி<br />நினைவினை மனதினில்<br />சுமந்துமே..!</em></strong><br /><br /><em>இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்திறந்த தெந்தமிழீழத் தாய் அன்னை பூபதி அவர்களின் 20ம் ஆண்டு நினைவுக் கவிதை யாழ் இணையத்தில் இருந்து...</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18859690.post-80711038034939284182008-01-09T10:52:00.002+00:002008-12-10T12:08:25.815+00:00கிட்டு மாமா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQeMG0QQhcvqsoUIxGHc-yWM3XsOaw9vYtGud7-roKT0au4rqsJAwxxVB8d1cokEYOQZx_w-LyzRtJZRWL8GH3I316ZooP0P3WTP7bio478IkvmXz5NGWUoTGZze-W_EdiYmC0Zw/s1600-h/kiddu.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQeMG0QQhcvqsoUIxGHc-yWM3XsOaw9vYtGud7-roKT0au4rqsJAwxxVB8d1cokEYOQZx_w-LyzRtJZRWL8GH3I316ZooP0P3WTP7bio478IkvmXz5NGWUoTGZze-W_EdiYmC0Zw/s200/kiddu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5153428221862885282" /></a><br /><em>விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கேணல் கிட்டு.</em><br /><br /><strong>வெடியோசை எழுந்தது <br />எங்கள் நெஞ்சோசை அழிந்தது <br />களத்தோடு களமாடி <br />கோட்டைக்குள் அடித்தெழுந்த <br />அந்தப் புயலும் ஓய்ந்தது...! <br />தங்க தமிழீழ வேங்கையது <br />வங்கக் கடல் நடுவே சரிந்தது...! <br /><br />அசோகச் சக்கரத்தின் <br />அகோரத் தாண்டவம் - எங்கள் <br />மாமாவின் உடல் கிழித்தது...! <br />ஆதிக்க வெறி பிடித்த <br />அகிம்சா தேசமது <br />அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! <br />தமிழீழ அன்னையவள் <br />கொடிதனைச் சுமந்தவன் <br />ஆழி தன் அலையோடு <br />மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! <br /><br />குரலோசை எழுந்தது - அது <br />அவன் புகழோசை சொன்னது <br />விடியலின் தாய் மகன் <br />விடிவெள்ளியான கதை <br />முடிவின்றிச் சொன்னது....! <br />தர்மம் வெல்லும் என்பது <br />காலத்தின் கோலம் என்றது <br />சரியாகி நின்றது <br />எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள் <br />அலையலையாய் சுமந்தது...!</strong><br /><br /><em>- தேசப்பிரியன்</em><br /><br />இணையத்தில் பெற்ற கவிதை.<a href="http://vannithendral.net/home/index.php?option=com_content&task=view&id=100&Itemid=36"> மூலம் இங்கு.</a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18859690.post-86618321218471928502007-12-20T09:20:00.000+00:002007-12-20T14:11:38.440+00:00ஈ வெ ராமசாமியும் கொள்கைகளும் திருகுதாளங்களும்.ஈ வெ ராமசாமி (பெரியார் எனப்படுபவர்) வட இந்திய ஆரியரை எதிர்க்க திராவிடம் பேசினார் எங்கிறீர்கள்.. இன்று தமிழக திராவிட கழகங்கள் வட இந்திய ஆரியக் கட்சிகளுடன் ஒத்துழைத்து தமிழருக்கு எதிராகச் செயற்படவில்லையா..???! அதேபோன்றே ராமசாமி காந்திஜியிடம் அரசியல் நடத்த பேரமும் பேசியவர். இதுதான் திராவிட வாதத்தின் ஆரிய எதிர்ப்பின் தார்ப்பரியமா..???! இப்படி சொந்த மக்களையே ஏமாற்றி அடுத்தவருக்கு அடிபணிந்து பிழைப்பு நடத்த ஏன் ஒரு திராவிடக் கொள்கை. அது எனியும் நமக்கு அவசியம் தானா..??! தமிழன் என்ற இன உணர்வை ஊட்டவல்ல தமிழ் தேசிய எழுச்சிதான் இன்றைய உலகில் தமிழரின் இருப்புக்கு அவசியாமனது..!<br /><br />சந்திரகாசனை (தந்தை செல்வாவின் உறவினர்) யாரும் ஈழத்தமிழ் பற்றாளர் என்று இனங்காண்பதில்லை. காரணம் அவரின் செயற்பாடுகள்.. நேரடியாக ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு எதிராக அமைந்திருப்பதால். நேரடியாக அன்றி எத்தனை பேர் ஈழத்தமிழர் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களை எல்லாம் அவதானிக்கிறமா.. அப்படியானவர்களை இனங்காண்கிறமா.. இனங்காட்டத்தான் முடிகிறதா.. இல்லையே..??! அவ்வளவுக்கு ரகசியமாகவும் திரைமறைவிலும் மற்றவர்கள் எளிதில் உணராத படிக்கும் நடந்து கொள்கின்றனர்.<br /><br />ஈ வெ ராமசாமி தனது பத்திரிகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டதும்.. அதை ஈழ ஆதரவு என்று காட்ட முனைகிறீர்கள். அதைவிட அவர் ஏதும் செய்யவில்லை. மா பொ சி போன்றவர்களை சத்தியசீலன் ( ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர்) சந்திக்க முற்பட்ட போது அவர்கள் உங்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்றாலும்.. எமது ஆதரவைக் கொண்டு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். காரணம் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் இந்திய மத்திய அரசின் பலமும் அதன் தமிழர் விரோதப் போக்கையும் தெளிவாக..! அதை அவர்கள் மறைக்காமல் செயற்பட்டனர். இன்று வரை அதுதான் நிலை. இந்தியா தனது நலனுக்கு வெளியில் எம்மை ஆதரிக்கவே இல்லை..!ஆனால் ராமசாமி என்ன செய்தார்.. எதையும் ஆழமாக சிந்திக்கத் தெரியாத ராமசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டு.. தனது அரசியலை கவனித்தாரே அன்றி அதன் பின் விளைவுகள்.. அதன் மூலம் தோன்ற இருக்கும் நெருக்கடிகள் என்பன குறித்து சிந்தித்தாரா..??!<br /><br /> எம் ஜி ஆர் போன்றவர் தலைவர்கள் செய்த உதவிகள் பற்றி இன்று (அண்மையில் இறக்க முன்னர்) அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அளவுக்கு ரகசியமாக இருந்துள்ளன..! ஏன் அவர்கள் பகிரங்கமாக தங்கள் உதவிகளைச் செய்யவில்லை. காரணம் அவர்களுக்கு அவர்கள் இருந்த அரசியல் புறச்சூழல் பற்றிய தெளிவிருந்தது. ஆனால் ராமசாமிக்கு.. அப்படி எதுவுமே கிடையாது. கடவுள் சிலையை செருப்பால் அடித்தால் கடவுளைக் கைவிடுவான் என்பது சிலையில் கடவுளை காண்பவனைக் காட்டிலும் மோசமான நிலை..!மக்கள் மனங்களில் உள்ள ஒரு கொள்கை தொடர்பில் ஒரு மாற்றத்தை சரியான விளக்கங்களுக்கு அப்பால் வெறும் கேலித்தனமான செயற்பாட்டால் ஏற்படுத்த முடியாது. இந்த எளிமையான உண்மையைக் கூட புரியக் கூடிய அறிவு ஈ வெ ராமசாமியிடம் இருக்கவில்லை..!<br /><br />இந்துமதத்துக்கும் மூடநம்பிக்கைக்கும் வெகுலாவகமா முடிச்சுப் போடிறீங்கள். ஆனால் மூடநம்பிக்கைகளில் அதிகம் ஈடுபட்டவர்கள்.. முனியையும்.. ஐயனாரையும்.. வைரவரையும் வணங்கிய பழங்குடி மக்கள் தான். அதனால் தான் அவ்வழிபாட்டு முறைகளையும் இந்து மதம் உள்வாங்கி அதற்கு ஆன்மீக விளக்கமளித்து மக்களிடம் மூடநம்பிக்கைகளைக் களைய முனைந்தது. காரணம் அவர்களின் மூடநம்பிக்கைக்கு மதமல்ல காரணம்..அறியாமையே. கல்வி அறிவற்ற தன்மையே. கல்வி அறிவால் இந்துமதம் (சைவம்) கொண்டுள்ள ஆன்மீக மெய்யியல் அறிவைப் புகட்ட முடிகின்ற போது மனிதன் தன்னிலை மட்டுமன்றி இந்தப் பிரபஞ்சத்தின் தன்மை குறித்தும் அறிகின்ற போது அவன் அறியாமை இருளில் இருந்து விடுபடுகின்ற போது மூடநம்பிக்கைகளும் பேராசைகளும் அவனை விட்டுக் கழன்று விடுகின்றன. அப்போது அவனிடம் தெளிவும் மனிதாபிமானமும் அன்பும் மிகும்..! அத்தோடு அறிவியல் அறிவும் வழங்கப்படும் போது அவன் சிறந்த சிந்தனைவாதியாக நவீன உலகின் படைப்பாளியாக புதிய புதிய கண்டுபிடிப்புக்களுக்கான முன்னோடியாக திகழ வழிபிறக்கும்..!<br /><br />அதைவிடுத்து.. சிலைக்கு சோடா புட்டியால் அடித்தால் அறியாமை விலகாது. கடவுள் சிலைக்குப் போட்டியாக பதிலாக ராமசாமிக்கு 95 அடியில் சிலை வைத்தால் கல்வி அறிவு எழாது. மாறாக குரோதமும் கோபமுமே வளர்க்கப்படும். சாதி அழிக்கின்றன் என்ற சிலர் இங்கு எத்தனை தடவைகள் சாதிப் பெயர்களையும் சாதிகளையும் உச்சரித்திருப்பார்கள். காரணம் அவர்கள் ராமசாமி வாரிசுகளாகவே மாறிவிட்டதால். இதைத்தான் ராமசாமி என்ற கன்னடனும் செய்தது. பிராமணன் பிராமணன் என்று கொண்டே... அந்த ஒரு மக்கள் குழுமத்தின் மீது தனக்குள்ள வெறுப்பை என்னென்ன வழியில் வெளிக்காட்டி தன்னை பிரபல்யம் அடையச் செய்யலாமோ அதை செய்தார். அதன் மூலம் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமிழர்களின் அரசியல் தளத்தைப் பலவீனமாக்கி அதில் தான் எங்கு இலாபம் பெறலாம் என்று தான் ராமசாமி அதிகம் அக்கறை செய்தாரே தவிர.. தமிழக மக்களின் அறியாமையை விலக்கி.. அறிவை வளர்த்து ஒற்றுமையை ஓங்கச் செய்து.. மூடநம்பிக்கைகளை களையச் செய்ய முற்படவில்லை.<br /><br />இந்துமதம் அறியாமையை வளர்க்கின்ற மதமல்ல. இந்து ஒரு கலாசாரமாக உலகில் மிளிர்கிறது. எத்தனையோ பல்கலைக்கழகங்களில் இந்துமதமும் இந்துக்கலாசாரமும் போதிக்கப்படுகின்றன. அந்தளவுக்கு அதற்குள் மெய்யியல் மற்றும் வரலாற்று அறிவியல் கலந்திருக்கிறது. ஆனால் ராமசாமியைப் போல கண்ணை மூடிக்கொண்டு ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ.. அறிவிலித்தனமான வாதங்களை முன் வைத்து மொத்த மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அதுவே மூடநம்பிக்கையின் மூலம் என்பது மோசமான நிலை..! ஆய்ந்து அறியும் தன்மையற்ற நிலை..!<br /><br />மூடநம்பிக்கைக்கு மதம் அல்ல காரணம். மனித அறியாமையே காரணம். மனித அறியாமைக்குக் காரணம் கல்வி அறிவின்மை. கல்வி அறிவின்மைக்குக் காரணம் அரச சலுகைகளுடன் கூடிய கல்வியை அல்லது இலவசக் கல்வியைக் கூட சரிவர பெற இல்லாத ஆர்வமும் வழங்க முற்படாமையும்..! அடிப்படைக் கல்வி அறிவற்ற ராமசாமிக்குள்ளும்.. ஒரு அறியாமை இருந்திருக்கிறது என்பதை.. அவர் தன் கருத்துக்களைச் சொல்லிய விதத்தில் காண முடிகிறது.<br /><br />ராமசாமியை திராவிடக் கட்சிகள் தான் "தந்தை" "பெரியார்" எங்கின்றனர். காந்திஜிக்கு வழங்கப்படும் மரியாதை இந்திய மண்ணில் ஏன் அண்டை மாநிலங்களில் கூட ராமசாமிக்கு கிடையாது. ஏன்..?? அவரின் சொந்த மாநிலமான கர்நாடகத்தில் அவருக்கு ஒரு சிலை இருக்கோ தெரியாது..! கர்நாடகத்தில் ஒரு கட்சி கூட "ராமசாமியின்" புகழ்பாட இல்லை..! திராவிடக் கொள்கை பேசி கன்னடன் என்று தன்னை இனங்காட்டி கன்னட விசுவாசத்தை வெளிப்படுத்திக் கூட ராமசாமி கன்னட தேசத்தில் மதிக்கப்படவில்லை. காரணம் என்ன..??! ராமசாமியின் கோமாளித்தனக் கொள்கைகளும் போலிப் பேச்சுக்களும்.. பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத கீழ்த்தரமான பண்பாடற்ற பழக்கங்களுமே..! இப்படியான ஒருவர் தமிழர்களுக்கு "தந்தை" "பெரியார்" என்று இனங்காட்டப்படுவது திராவிடக் கட்சிகளுக்கு அரசியல் நடத்த உதவலாம்.. தமிழர்கள் மத்தியில் உள்ள பிளவுகளை போக்க உதவாது.<br /><br />ராமசாமியை பிராமண சமூகம் வெறுக்கக் காரணம் என்ன..??! பிராமண சமூகம் என்பதை தமிழர்கள் என்று இனங்காணாத அந்த நிலையே..! பிராமண சமூகம் சரி இதர சமூகங்களும் சரி சாதியச் சாயங்களால் பிளவுபடுத்தப்பட்டிருப்பினும்.. இனத்தால் மொழியால் கலாசாரத்தால் தேசத்தால் பண்பாட்டால் தமிழர்களே..! அந்த வகையில் அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்க ஏன் முற்படவில்லை. தமிழ் தேசியம் அதைச் செய்யும்..! திராவிடக் கொள்கைகள் நிச்சயம் அதற்கு இடமளிக்காது. காரணம் திராவிடம் சாதி இல்லை இல்லை என்று கொண்டே சாதியை வளர்த்ததும் அரச ஆட்சி மட்டத்துக்கு சாதியைக் கொண்டு வந்ததுமே அதனால் சாத்தியப்பட்டது.<br /><br />மூடநம்பிக்கைகளை அகற்ற கல்வி அறிவை ஊட்டி அறிவை தெளிவை வளர்க்க வேண்டுமே தவிர அறியாமை உள்ள மக்களிடம் குரோதத்தை கோபத்தை வன்முறையைத் தூண்டி.. சொந்த இனத்தின் இன்னொரு சமூகத்தின் மீது கொலை வெறியை வெறுப்புணர்வை ஊட்டுவதல்ல சமூக அக்கறை.. சமூகப் புரட்சி..! அந்தவகையில் ராமசாமி அரசியலுக்காக தனது செல்வாக்குக்காக தமிழர்களை பிளவுபடுத்த கையில் எடுத்ததே பிராமண எதிர்ப்பும் பார்பர்னிய ஆரிய மாயைகளின் உச்சரிப்பும்..!<br /><br />அறியாமையைப் போக்கி அறிவியலை வளர்த்து கல்வி அறிவுடன் ஆன்மீக அறிவையும் ஊட்டி மெய்யியல் அறிவையும் பெறும் ஒரு சமூகம் எப்போதும் தளம்பலற்ற.. உயர்சியை ஒற்றுமையை சந்திக்கும் என்பதற்கு யூதர்கள் நல்ல உதாரணம். <br /><br />தமிழர்கள் அதை உணர்வதும் ராமசாமி போன்ற சந்தர்ப்பவாத உளறல் கோமாளிகளின் கொள்கைகைகளை தூக்கி எறிஞ்சிட்டு.. தங்கள் அறியாமை திரை விலக்கி.. தங்கள் தனித்துவத்தை இழக்கச் செய்யும் திராவிட மாயைப் போர்வைக்குள் இருந்து வெளிவந்து தமிழ் தேசிய எழுச்சியுடன் தமிழ் தேசிய உணர்வுடன் கூடிய தமிழர்களாக உலகில் பரிணமிக்க சிந்திக்க வேண்டும். <br /><br />ஆரியரை எதிர்ப்போம் என்று கூறிக் கொண்டே ஆரியர்களாக தாங்கள் வரையறுப்பவர்களின் கொள்கைக்கும் பிழைப்புக்கும் முண்டுகொடுக்கும் திராவிட கழகங்களின் கொள்கைகள் தமிழின மொழி அழிப்பைப் பற்றிய அக்கறை அற்றவை என்பதை இன்று தமிழர்கள் நன்கே உணர்ந்துள்ளனர்..! இதுதான் ஈ வெ ராமசாமியின் கொள்கைகள் செய்த அறுவடை..!<br /><br />தமிழகம் இந்திய தேசியத்தால் தனது தமிழ் தேசிய உணர்வை இழந்து நிற்க மூல காரணமே திராவிடக் கழகங்கள் என்றால் மிகையல்ல..! தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தமது தவறுகளைத் தொடர்கின்றனர். இதற்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..!<br /><br />பாதையைப் பற்றிப் பேசனும் என்றால் எதற்கையா இராமரைப் பற்றிப் பேசுறீங்க...! இராமரே இல்லை என்பவர்கள் திரும்பத் திரும்ப அதை நிரூபிக்க வேண்டியதில்லை. தங்களின் அறிவார்த்த அணுகுமுறையைச் செய்ய வேண்டும். வெறுமனவே வார்த்தை ஜாலங்களால் அரசியல் செய்யலாம் அறிவியலை அணுக முடியாது. கப்பற் பாதை அமைப்புக்கு சாத்தியமான முன்னோடியாக அமையத்தக்க அடிப்படை அறிவியல் ஆய்வென்று கூறி ஒரு காத்திரமான ஆய்வை மேற்கொண்டு பாலம் இராமருடையதல்ல என்பதையும் நிறுவி, இதர பிற எதிர்ப்புக்களுக்காக முன்வைக்கப்படும் காரணங்களையும் முறியடிக்க வாய்ப்பிருந்தும்.. அறிவியல் இருந்தும்...அதை செய்ய நிரூபிக்க தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு திராணி இல்லை. ஆனால் தமிழக முதல்வர் கேட்கிறார் இராமர் எந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்று. காலங்காலமா இராமரே இல்லை என்று சொல்லுறவர் இப்படி வினவுவது எவ்வளவு அறிலித்தனமானது மட்டுமன்றி விசமத்தனமானதும் கூட..! இப்படிப்பட்ட மு... முக்கள் தான் தமிழரின் தலைவர்கள்..! இவர்கள் தாம் ராமசாமியின் வாரிசுகள்..! இவ்வாறான தலைவர்கள் உலகில் சுய சிந்தனைமிக்க, அறிவியற் சமூகமாக, சுயாதியபத்திய ஆட்சியுரிமையுள்ள, தமிழன் என்ற இன அடையாளம் தாங்கி மிளிர இடமளிப்பரா..??!<br /><br /><em>மின்னஞ்சல் வழி கிடைத்த கட்டுரை.</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18859690.post-21118572241882535702007-12-16T10:15:00.001+00:002008-05-15T12:12:46.203+01:00வேலி போடலையோ வேலி...<strong><em>சீமைக் கிளுவைக்குள்<br />சீவியம் செய்தவள்<br />சீமைக்குப் புறப்பட்டாள்<br />சீறி எழுந்த <br />சிறீலங்கன் எயார் லைன்ஸில்..!<br /><br />கூலி கொடுத்து<br />தாலி வாங்கி<br />வேலி போட்டனள்<br />நாணி நின்றவள்<br />கூனி நிற்பாள் என்று..!<br /><br />மாதம் பத்து<br />சும்மா இருந்தவள்<br />சுமந்தனள்<br />சுமைகளோடு<br />சுதந்திரக் கனவு..!<br /><br />தாலி பிரித்து<br />வேலி தாண்டி<br />நடப்பது பகற் கனவு<br />கண்டனள் ஏங்கினள்..<br />படிதாண்டிப் பத்தினியும்<br />பரத்தையானதில்..!<br /><br />சீமையில்<br />சீதனம்<br />சீர் தனம்<br />சீ சீ.. என்பதில்<br />சிந்திக்க இருக்கு<br />சில சுயநலம்..<br />அதில்<br />அடங்கி இருக்கு<br />பலவீனம்..<br />பண வீக்கம்..!<br /><br />சீமைச் சிறப்புக்குள்<br />சீரழியும் இயற்கைக்குள்<br />சீமைக்கிளுவைகள்<br />சீர் பெறுமா..??!<br />விடை தேட<br />ஆணும் பெண்ணும் எங்கே..??!<br />கலந்தடிக்கிறார்<br />போதையில் இங்கே..! </em></strong><br /><br />சுட்டுப் போட்டது யாழ்.கொம் இல் இருந்து.kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18859690.post-49799578760070395872007-11-26T06:20:00.000+00:002008-12-10T12:08:26.017+00:00தமிழீழ அன்னையவள் சேயினை வாழ்த்துவம் வாரீர்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4R7BPfzAOU1wMSeaYM6K2U7NtChk1i01khnyTCkwpOWDx7W5MGCRZAM_o76EevFqnhpOQs6XyoFznhYCLb6k9Kj281fo5pOi3rTrOdsgr3LoLGbrdUNJ-1D3NRGAGsXu4pnyHqQ/s1600-h/thalaivar530.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4R7BPfzAOU1wMSeaYM6K2U7NtChk1i01khnyTCkwpOWDx7W5MGCRZAM_o76EevFqnhpOQs6XyoFznhYCLb6k9Kj281fo5pOi3rTrOdsgr3LoLGbrdUNJ-1D3NRGAGsXu4pnyHqQ/s200/thalaivar530.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5137030678096389394" /></a><br /><br /><strong>செந்தனல் பொங்கும் விழிகள்..<br />செருமி நிமிரும் <br />அவன் நெஞ்சின் உறுதி..!<br />செம்மை தம் வாழ்வு<br />செந்தமிழ் மண்ணின் விடுதலை<br />சேயவன் சிந்தனை..!<br />செல்லம் அவன்<br />எங்கள் ஈழத்தாயின் <br />மூத்த மகன்..!<br />அண்ணன் பிரபாகரன்<br />வாழிய என்றும்<br />மக்களின் மனங்களில்<br />வெற்றி எனும் முரசம் முழங்க..!</strong><br /><br /><em>பட உதவி: பதிவு.கொம்</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18859690.post-20685824420188063092007-11-21T12:21:00.000+00:002008-12-10T12:08:26.358+00:00வீர தீபம் கார்த்திகை 27<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCgERs7f6qPAatSbewfhHcyAab9yp_1TCW5IVA-AFygXf28ZNeY05BE6C47zajb4Kp8Qnc2PO0n2NKUpPMtwblDngk-nwFyMoWTshQ2LWAof9tNxZaGU4k-r6Vo_A3TtHuFucRYw/s1600-h/maveerar2006-kuruvikal.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCgERs7f6qPAatSbewfhHcyAab9yp_1TCW5IVA-AFygXf28ZNeY05BE6C47zajb4Kp8Qnc2PO0n2NKUpPMtwblDngk-nwFyMoWTshQ2LWAof9tNxZaGU4k-r6Vo_A3TtHuFucRYw/s400/maveerar2006-kuruvikal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5135269028540457954" /></a><br /><br /><strong>தீவினில் ஒரு தீபம் <br />அது வீர தீபம் <br />உடல்தனை உருக்கி <br />உயிரினை அளித்து <br />மூட்டிய தீபம் <br /><br />கார்த்திகை மாதம் <br />மலர்ந்திடும் மலரும் <br />காட்டினில் சிறுத்தையும் <br />வளவினில் செம்பகமும் <br />வீதியில் வாகையும் <br />வணங்கிடும் தீபம் <br />அது வீர தீபம் <br /><br />மக்களின் மனங்களில் <br />மலர்ந்திடும் நினைவுகள் <br />சொரிந்திடும் விழினீரில் <br />உருகியே தாழ்ந்திடும் தீபம் <br />அது வீர தீபம் <br /><br />விடியலின் ஒளிதேட <br />இருளோடு கலந்திட்ட <br />தமிழீழ மைந்தரவர் <br />ஏற்றிய தீபம் <br />அது வீர தீபம் <br /><br />காற்றோடு சாயினும் <br />மழையோடு மாழினும் <br />தமிழீழ மண்ணிலது <br />அணையாத தீபம் <br />அது வீர தீபம் <br /><br />வேங்கைகள் உயிரது <br />வேள்வியில் கலந்திட்ட <br />வேளையில் பிறந்திட்ட <br />மாவீர தீபம் <br />அது வீர தீபம் <br /><br />அழியாத நினைவோடு <br />நெஞ்சினில் வாழ்ந்திடும் <br />வீரர்கள் உருவினில் <br />ஏற்றிடும் தீபம் <br />அது வீர தீபம் <br /><br />வையகம் உள்ளவரை <br />ஒளிர்ந்திடும் தீபம் <br />கார்த்திகை மாசத்து <br />மாவீரர் தீபம் <br />அது எங்கள் வீரர் தீபம். <br /><br />கரங்கள் கூப்பியே <br />நினைவுகள் ஒருக்கியே <br />காற்றும் மெளனிக்க <br />காவியம் படைந்த <br />நாயகர் நினைவோடு <br />விழி சொரியும் பூ வைத்து <br />ஏற்றுவோம் <br />காத்திகை தீபம் <br />அது வீர தீபம் <br /><br />விடியலில் என்றும் <br />ஒளிரட்டும் <br />விடி வெள்ளியாய் <br />கார்த்திகை 27 இல் <br />கடமை மறவாது <br />ஏற்றும் தீபம் <br />அது வீர தீபம்.</strong><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6VlcB9Dptqok-WaELnor_3dcNK5hB1GXPmJaaX1xOi8Ppx6hsH2YSqRQmt4crjz04r7W3FdwvTd8NIKODubSqVvWpVCE4zBG_QJQgFItgE9By9uP1PW_hB0pB_mhOQ-K4ukLbgA/s1600-h/HeroDay98.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6VlcB9Dptqok-WaELnor_3dcNK5hB1GXPmJaaX1xOi8Ppx6hsH2YSqRQmt4crjz04r7W3FdwvTd8NIKODubSqVvWpVCE4zBG_QJQgFItgE9By9uP1PW_hB0pB_mhOQ-K4ukLbgA/s200/HeroDay98.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5135287561324340322" /></a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18859690.post-27103461296058490442007-11-09T09:13:00.000+00:002007-12-20T10:11:30.050+00:00பெரியார் படக் காட்சி அறிவியலுக்கு விரோதமானது.அண்மையில் பிரித்தானியா University of Utah நடத்திய ஆய்வில் இருந்து குறைந்தது மாதம் ஒரு முறை விரதம் அல்லது உண்ணா நோன்பிருப்பது இதய நோய்களை கட்டுப்படுத்த உதவும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.<br /><br /><em><strong>Fasting for one day a month 'cuts the risk of heart attack'</strong> <br /> <br />Skipping meals once a month could help stave off a heart attack, say scientists. <br /><br />Fasting for at least 24 hours cuts the risk of coronary artery disease by up to 40 per cent, compared with those who eat every day, research shows. <br /><br />Experts believe the break from food could help 're-set' the body's metabolism, enabling it to work more efficiently as a result. </em><br /><br /><a href="http://www.thisislondon.co.uk/news/article-23419834-details/Fasting+for+one+day+a+month+'cuts+the+risk+of+heart+attack'/article.do">மூலப் பிரதிக்கான இணைப்பு.</a><br /><br />ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட "பகுத்தறிவு" வாதி என்று பெயர் சூட்டப்பட்ட பெரியார் என்ற ஈ வெ ராமசாமி நாயக்கரின் வாழ்க்கைக் குறிப்புப் பற்றிய படத்தில் விரதங்கள் மூடநம்பிக்கைகள் என்ற பாங்கில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதை எள்ளளவும் அறிவியல் பகுப்பாய்வுப் பார்வைக்கு உட்பட்ட காட்சியமைப்பாகக் காண முடியவில்லை. இந்த பகுத்தறிவுப் பரப்புரைக்கு மாறானதாக அறிவியல் ஆய்வு வெளிப்பட்டிருப்பதானது பகுத்தறிவென்று மக்களை அறிவியல் சிந்தனைக்கு அப்பால் இட்டுச் செல்லும் மூடத்தனமான செயலைச் செய்வதாகவே நோக்க வேண்டியுள்ளது.<br /><em><br />இவ்வதானிப்புக் குறிப்பை தருவது சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பு.</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-18859690.post-41399978743454474412007-11-03T19:29:00.000+00:002008-12-10T12:08:26.725+00:00வெந்தனல் மீது வேங்கை போனது....<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3N9xkd_ImFwHg3NO8mbcCWX12MC7Jgcf2ofOwboPyJSxrlHZPeIikxcA2q2j-SdPA1-DwOL2xgLIAemI-G1ZP7Mm3SHuiNYZs-78JwswSr9LtIr8AxjFfx7GHpmPqH07leyMA7g/s1600-h/viravanakam.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3N9xkd_ImFwHg3NO8mbcCWX12MC7Jgcf2ofOwboPyJSxrlHZPeIikxcA2q2j-SdPA1-DwOL2xgLIAemI-G1ZP7Mm3SHuiNYZs-78JwswSr9LtIr8AxjFfx7GHpmPqH07leyMA7g/s200/viravanakam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5129350292749805570" /></a><br /><br /><strong>வெந்தனல் மீதினில் <br />புலி போனது<br />செந்தனலானது விழிகள்<br />சுந்தரத் தமிழீழமதில்<br />சிங்களம் ஆடுது போர்வெறி..!<br /><br />சரித்திரம் படைத்திடும்<br />இது தமிழ் இனம்<br />சிங்களச் சேனைகள்<br />சிதறிடும் வேளையில்<br />சிரிப்பின் செல்வனே<br />தமிழ்ச்செல்வா<br />நீ இன்னும் சிரிப்பாய்..!<br /><br />மில்லர்<br />திலீபனுடன்<br />ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்<br />உன்னுடன்<br />விடியலின் வேளையில்<br />தமிழீழ தேசத்தின்<br />ஒளிர்வதில்<br />தங்க மேனிகளாய்<br />மிளிர்வீர்கள்...!<br /><br />தமிழ் பிஞ்சுகள்<br />நெஞ்சுகள் சுமந்திடும்<br />நினைவுகள் <br />தாங்கிடும் <br />வேங்கைகள் உங்கள் <br />வீர நினைவுகள்.<br /><br />மரணத்தின் பின்னொரு<br />வாழ்வது காண்பீர்<br />தாயக விடுதலையின்<br />புனித பயணத்தில்<br />பாதையில் வித்தான<br />மாவீரர்களே...!<br /><br />உறங்குங்கள் இன்று<br />தமிழர் வீர வரலாறு<br />காவியமாகிடும்<br />வேளையில்<br />மீண்டும்<br />துயில் எழுப்புகிறோம்<br />வீர பரணி பாடியே..!</strong><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0mJqVF4Ea4KC2ghmJUmka4nxKfNI0HR5bCV1GtN_7enAgVZuwM-oMIBvzI3Hi_1NAczVQ7qtehi1HVZLJ50bUOvLvVmA-1nc176o5pQPm2IHld4pY3sbAVdQjzRwCoBrctDDziQ/s1600-h/20061125.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0mJqVF4Ea4KC2ghmJUmka4nxKfNI0HR5bCV1GtN_7enAgVZuwM-oMIBvzI3Hi_1NAczVQ7qtehi1HVZLJ50bUOvLvVmA-1nc176o5pQPm2IHld4pY3sbAVdQjzRwCoBrctDDziQ/s200/20061125.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5128700309579097922" /></a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18859690.post-52770891944109690042007-11-01T14:47:00.000+00:002007-12-25T19:33:12.397+00:00ஈழத்தமிழரை பலவீனப்படுத்த புகுத்தப்படும் தலித்தியம்.ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின்... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது.<br /><br />ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றனர்.<br /><br /><strong>ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமானது வெறுமனவே சிங்கள பெளத்த பேரினவாத ஆதிக்கத்துக்குள் இருந்தான விடுதலை என்பதற்கும் மேலாக அனைத்து வித சமூக விடுதலையையும் ஒருங்கிணைத்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்ந்து வந்துள்ள காலக்கட்டங்களில் கூட எழாத தலித்தியவாதம் இன்று புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சிலரால் புகழுக்காகவும் பிற தீய சக்திகளின் தேவைக்காவும் முன்னிறுத்தப்படுவது குறித்து ஈழத்தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.</strong><br /><br />இந்த சக்திகளுக்கு பிபிசி தமிழில் உள்ள சில இந்திய தலித்தியவாத சுவாசத்தில் குளிர்காய்பவர்களும் பிரச்சார அனுசரணையாளர்களாக இருந்து பாரீசில் நடந்த ஒரு குட்டி மாநாட்டுக்கு பெரிய தோற்றம் கொடுக்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளனர்.<br /><br />ஈழத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை மூடிமறைத்து தமிழர்களின் அடிமைத்தனத்தை மறைத்து அரசியல் செய்ய முனைந்த முன்னாள் தமிழ் அரசியல்வாதிகள், சாதி மற்றும் பிரதேச வாதங்களை முன்னிலைப்படுத்தி மக்களை பிரித்தாண்டு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர். <br /><br />ஆனால் அந்தக் குள்ள நரி அரசியல்வாதிகள் ஈழப்போராட்ட சக்திகளின் உருவாக்கத்துக்குப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் அந்நிய தேசங்களுக்கு ஓடிப்போயினர்.<br /><br />மீண்டும் கருணா போன்ற சந்தர்ப்பவாத தமிழினத் துரோகிகள் பிரதேசவாதத்தைக் கையில் எடுத்து தமிழீழ தேசத்தை இரு கூறாக்கி தமிழர்களின் பாரம்பரிய நிலத்தொடர்ச்சியை சிதைக்க முனையும் சர்வதேச மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு உதவி தங்கள் சொகுசு வாழ்க்கையை தீர்மானிக்க முற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்..<br /><br />தலித்தியம் என்ற போர்வையில் தலித் மக்கள் என்று தமிழ் மக்களுக்குள்ளேயே பிரிவினைகளை தோற்றுவித்து ஆழப்படுத்தி தமிழ் தேசியத்தின் வழி ஒற்றுமைப்பட்டுள்ள ஈழத்தமிழ்மக்களை தலித்து சாதி என்ற சமூகப் போலிகளால் கூறுபோட்டு பிரித்தாண்டு தமிழ் தேசிய இருப்பை இந்தியாவில் சீரழித்தது போன்று ஈழத்திலும் சீரழிக்க சில அந்நிய சக்திகளும் சிங்களப் பேரினவாத சக்திகளும் முனைப்புக்காட்டி வருவதை இன்று அவதானிக்கக் கூடியதாக உள்ளது. <br /><br />ஈழத்தைப் பொறுத்தவரையும் புலம்பெயர் தேசங்களைப் பொறுத்தவரையும் மனித அடிப்படைத் தேவைகளான கல்வி சுகாதாரம் இருப்பிடம் உணவு போன்றவற்றிற்கு எந்த சமூகப்பாகுபாடும் காட்டப்படுவதில்லை. தகமை அடிப்படையில் தொழில் வழங்குதல் என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலையை வழங்கியுள்ளது. ஈழத்தில் இலவசக் கல்வி மூலம் எல்லா மக்களுக்கு கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வி அறிவுமிக்க சமூகம் ஒன்றில் தலித்தியம் என்ற பிரிவினை நோக்கம் கொண்ட தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தக் கூடிய நச்சுக் காரணி ஒன்றை உள்நுழைப்பதையிட்டு மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் தமிழ் தேசியத்தை, இந்தியாவில் திராவிட வாதம், இந்திய தேசிய வாதம் மூலம் சீரழித்தது போன்று ஈழத்திலும் பிரதேசவாதம் தலித்தியவாதம் என்ற சமூகப் பிரிவினைவாதங்களை உள்நுழைத்து சீரழிக்க முனைவதற்கு இடமளிக்கக் கூடாது.<br /><br />அதுமட்டுமன்றி இந்த தலித்தியவாதத்தை ஈவெ ராமசாமி அடியார்களாக தங்களை இனங்காட்டிக் கொள்ள விரும்பும் சில தமிழீழ தேச விரோத சக்திகள்... ஈழத்தமிழர் மத்தியில் பிரிவினையை விரும்பும் சக்திகள் "தலித்திய உரிமை வேண்டுதல்" என்ற கவர்ச்சிகர தலைப்பின் கீழ் ஈழத்து தமிழ் மக்களுக்குள் சமூகப் பிரிவினைகளை ஆழப்படுத்தி அதனை தங்கள் சுய இலாபத்துக்காகப் பயன்படுத்த முனைகின்றனர்.<br /><br />தலித்தியம் என்பதன் மூலம் புலம்பெயர்ந்துள்ள எமது எதிர்கால சந்ததிக்குள்ளும் சாதியப் பிரிவினை என்ற நச்சு விதையை ஊன்றிவிட முனைகின்றனர். தமது வெட்டிப் புகழுக்காக ஈ வெ ராமசாமியை தலையில் தூக்கி வைத்து ஆடும் இந்தக் கும்பல்கள் தமிழகத்தில் உள்ளது போன்று ஈழத்திலும் சாதிய அடிப்படையில் மக்களைக் கூறுபோட்டு அந்நிய சக்திகளுக்கும் அவர்களின் தேவைக்கும் ஏற்ப, தமிழ் தேசிய அடிப்படையில் அமைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வை.. ஆதரவுத்தளத்தை கூறுபோட அல்லது பலவீனப்படுத்த வழிவகைகளை செய்ய முற்படுகின்றனர். <br /><br />இந்த சக்திகள் தொடர்பில் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், ஈழத்தில் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் மூலம் பிரதேச சாதி மத சமூக பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்திருப்பதையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை தமிழர்கள் என்ற வகையில் தமது தேசத்துக்காக தொடர்ந்து வழங்கி வருவதையும் முழு உலகுக்கும் என்றும் தமது ஒற்றுமையின் மூலம் எடுத்துக்காட்ட முனைய வேண்டும்.<br /><br />தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரித்துக்காட்டி அவர்களை தனிமைப்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க முனையும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் சிங்களப் பேரினவாதிகளும் இப்படியான சமூகப் பிரிவினைகளைத் தூண்டும் கும்பல்களை "சமூக உரிமைக் காப்புப் பணி" என்ற வகைக்குள் அடக்கி அதற்கு மனிதாபிமானச் சாயம் பூசி ஆதரவளித்து வருகின்றதை பாரிஸ் தலித்திய மாநாட்டுக்கு பிபிசி தமிழ் அளித்த முக்கியத்துவம் எடுத்துக்காட்டுகிறது.<br /><br /><strong>தமிழ் மக்கள் பெரும் தியாகங்கள் மூலம் கடந்த 3 தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய கட்டத்தில் இன்று நின்று கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இவ்வகைச் சூழ்ச்சிகளை மதிநுட்பத்தால் புரிந்து கொண்டு இவற்றில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இந்த போலி வேசக்கார அருவருடிகளின் செயல்கள் தொடர்பில் வழிப்புணர்வுடன் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனையும் ஒட்டு மொத்த சக்திகளுக்கும் பதிலடி வழங்க தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.</strong><br /><br />எமது இனத்துக்கான விடுதலையை உணர்ந்த எமக்கு எமது சமூகத்துக்கான உரிமைகள் தொடர்பில் இவர்கள் பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்பதை இப்படியான சக்திகளின் செயற்பாடுகளை முற்றாகப் புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கும் உணர்த்தி இவர்களை உலகுக்கும் இதர தேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சரிவர அடையாளம் காட்ட வேண்டும். தலித்தியம் பேசி தமிழ் மக்களை கூறு போட முனையும் எல்லா சக்திகளுக்கும் இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். அதற்கான கடமை தமிழ் மக்களின் கையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து செயற்படுவீர்களாக. <br /><br /><a href="http://www.yarl.com/forum3/index.php?showtopic=30373&pid=356476&st=0&#entry356476">யாழ் இணையம்.</a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-18859690.post-81154994804112327472007-10-11T01:45:00.000+01:002008-12-10T12:08:26.876+00:00"நிர்வாணம்" என்பது எப்போதுமே ஆபாசமா..??!<strong>ஆபாசம் என்றால் என்ன..??!</strong><br /><br /><strong>நிர்வாணம் என்றால் என்ன..??!</strong><br /><br />ஆபாசம் என்பது மனிதனில் கீழ்த்தரப் பாலுணர்வை தூண்டுதல் என்பதற்குள் மட்டும் அடங்கி நிற்கிறதா.. அல்லது மனித சிந்தனையில் மனிதனுக்கு உபயோகமற்ற சிந்தனைத் தூண்டலை ஆபாசம் என்பதுவா சரியானது..??!<br /><br />ஆபாசம் என்பதன்.. கருதுநிலை சூழ்நிலைக்கு, சமூகங்களுக்கு, கலாசார மட்டங்களுக்கு மற்றும் நாகரிகப் பண்புகளுக்கு ஏற்ப மனிதனால் வரையறுத்துக் காட்டப்பட்ட அளவுகளில் மாறுபடுகின்றது என்பதை உணர்கிறோமா..??!<br /><br />ஆபாசம் என்று வருகின்ற போது நிர்வாணம் என்பதும் ஓடி வந்துவிடுகிறது. நிர்வாணம் என்றால் என்ன.??! அது எப்படி எப்போ ஆபாசம் என்றாகிறது..??!<br /><br />நிர்வாணம் என்ற பதம் உடலை மையப்படுத்தி அதிகம் பாவிக்கப்படினும் ஆபாசம் என்று வருகின்ற போது உடல் சார்ந்த நிர்வாணமே கருத்தில் அதிகம் கொள்ளப்படுகிறது.<br /><br />ஆனால் நிர்வாணம் என்ற சொல்லுருவாக்கத்தின் பின்னணியில் உள்ள கருத்தாழம் சரி வர நோக்கப்படுகிறதா..??!<br /><br />உடலை மூடி வைத்துவிட்டு திறந்து விடுதல் ஒரு வகை நிர்வாணமாகக் காட்டப்படுகிறது. சில ஞானிகளோ அறிவை சூழ்ந்துள்ள அறியாமையை நீக்குதல் நிர்வாணம் எங்கின்றனர். இன்னும் சிலரோ.. துறவின் எல்லை அல்லது தியானத்தின் எல்லை அல்லது உச்ச ஞானத்தின் நிலையடைதல் என்பதை நிர்வாணம் என்பதாகப் பொருள் கொள்கின்றனர். உதாரணம் "புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார்" இதில் புத்தன் ஆடை களைந்தான் என்பது அர்த்தமா அல்லது அவன் அறியாமை களைந்து வாழ்வின் முழு அர்த்தத்தையும் புரிந்து மெஞ்ஞான அறிவின் உச்சத்தை அடைந்தான் என்பதா சரியானது..??!<br /><br />ஆபாசம்.. என்று வருகின்ற போது கூட ஆடைகளற்ற உடல் ஆபாசம் என்பது எப்போதும் சரியானதா..???!<br /><br />உடலை ஆடைகளால் மூடுவதும் மனிதன்.. திறப்பதும் மனிதன்.. அப்படி இருக்க இந்த ஆபாசம்.. நிர்வாணம் என்பவை எப்படி உடல் சார்ந்த சிந்தனைகளாக எழுகின்றன..??! எழுந்தன...??!<br /><br />ஆபாசம் என்பதும் நிர்வாணம் என்பதும் சிந்தனை சார்ந்து உள்ள ஒன்றாகவே நான் கருதுகின்றேன். எமது சிந்தனையின் தன்மை போக்கு தேவை என்பன தான் ஆபாசம் என்பதையும் நிர்வாணம் என்பதையும் நிர்ணயிக்கிறது.<br /><br />ஒரு பெண் அரைகுறையாக ஆடை அணிகிறாள் என்பதில் ஆபாசத்தை வரையறுப்பது மனிதனின் சிந்தனையே அன்றி அவளது ஆடைகள் அல்ல. அந்த அரைகுறை என்பதை விலக்கிவிட்டு உடல் என்ற ஒன்று சார்ந்து எமது சிந்தனை சர்வ சாதாரணமாக எழும் எனின் அதில் ஆபாசம் புலப்படாது. எந்த மனிதனுக்காவது தனது உடலைத் தான் பார்க்கும் போது ஆபாசம் தெரிகிறதா..??! அதேன் பிறர் உடலை பார்க்கும் போது அல்லது பிறர் தன்னுடலை பார்க்கின்றனர் எனும் போது மட்டும் ஆபாசம் நிர்வாணம் என்ற சிந்தனைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன.<br /><br />ஆபாசம் என்ற இந்த சொல்லாடலும் அதன் பின்னால் உருவாகும் கருத்துருவாக்கமும்.. மனிதனின் சிந்தனை செயல் என்பனவற்றின் போக்கை தீர்மானிப்பதால் இதை நான் ஒரு பேசும் பொருளாக்கி இங்கு தருகின்றேன்.<br /><br />இன்னொன்று ஆபாசம் என்பது மனிதனின் அந்தரங்க உறுப்புகள் சார்ந்து எழுவது.<br /><br />பாலுணர்வு என்பது பிரதானமாக மூன்று வகையில் தூண்டப்படும். ஒன்று பார்வை மூலம். இரண்டு தொடுகை மூலம். மூன்று உடல் இரசாயனம் மூலம்.<br /><br />பாலுணர்வுத் தூண்டல் என்பதின் பின்னணியில் தான் ஆபாசம் வரையறுக்கப்படுகிறதா..??! நிர்வாணம் என்பது வரையறுக்கப்படுகிறதா..??! அப்படி என்றால் பாலுணர்வுத் தூண்டலுக்கு ஆளாகாத நிர்வாணம் என்பது ஆபாசம் இல்லை என்றல்லவா வர வேண்டும்.. அப்படித்தானே நோக்க வேண்டும்.<br /><br />பாலுணர்வுத் தூண்டல் ஆபாசம் நிர்வாணம் அரை நிர்வாணம் என்பதெல்லாம் ஏன் பெண்களை அவர்களின் உடற்கூறுகளை சார்ந்து இக்கருத்துருவாக்கங்கள் எழுகின்றன..??! பெண்ணை ஒரு மனிதன் என்று நிர்வாண நிலையில் வைத்து நோக்கும் போது எப்போதும் ஆபாசம் தோன்றுமா..???! பாலுணர்வு தூண்டல் மட்டும் தான் தோன்றுமா..??! அப்படிப் பாலுணர்வு தோன்றுதல் கூட ஆபாசம் என்றாகுமா..??! பாலுணர்வுத் தூண்டல் அடுத்தவரை பாதிக்காதவரை.. அது எப்படி ஆபத்தானது என்றாகும்..??!<br /><br />ஆபாசம் என்பது பெண்களுக்குள் மட்டும் தானா நிலைத்திருக்கிறது.. பெண்ணின் துணைப்பால் உறுப்புகள் தானா ஆபாசமானவை..??!<br /><br />உயிரியலின் படி துணைப்பால் உறுப்புகள் உணர்ச்சித் தூண்டல் உள்ளவை என்பதை ஏற்றுக் கொள்கிறேம். ஆனால் ஆபாசம்.. நிர்வாணம் என்பது அவற்றுள் அடக்கப்படவில்லை.<br /><br />ஆபாசம் நிர்வாணம் என்பதெல்லாம் எமக்கு காட்டப்படும் வடிவத்தில் தான் பாலுணர்வை தூண்ட செய்யப்படுகின்றதே தவிர.. நிர்வாணம் ஆபாசம் என்பவை இயல்பான வெளிப்பாட்டின் மாறுபட்ட மனிதக் கருத்துருவாக்கத்தின் தாக்கம் என்றே நான் கருதுகின்றேன். மனிதன் வரையறுத்துக் கொண்டவற்றால் தான் உடல் ஆபாசமானதே தவிர உடல் ஆபசத்தோடு தோன்றவில்லை. இயற்கை ஆபசத்தோடு தோன்றவில்லை. நிர்வாணம் என்பது மனித கருத்துருவாக்கம் என்பதுதான் யதார்த்தம். அதை சமூகத்தில் பல்வேறு வரைவிலக்கணங்களோடு பல் வேறு சூழலுக்கும் ஏற்ப பாவிக்கின்றனர். அதுவே மனித சிந்தனைக்கு தகுதியிடலையும் செய்யப் பாவிக்கப்படுகிறது.<br /><br />ஆக ஆபாசம் என்பது நிர்வாணம் என்பது.. எப்போ குறை.. குற்றமாகிறது.. ஒரு மனிதனின் சிந்தனைக்கு அது காட்டப்பட்ட பரிமானத்தில் தான். ஒவ்வொருவருக்குள்ளும் ஆபாசம் என்ற கருத்துருவாக்கத்தின் பரிமானம் மாறுபட இது வாய்ப்பளிக்கிறதல்லவா. அப்படி இருக்கும் நிலையில் எது குற்றமற்ற நிர்வாணம் எது குற்றமற்ற ஆபாசம்.. எது குற்றமான ஆபாசம்.. குற்றமற்ற நிர்வாணம் என்று காட்டுதலுக்கும் தேவை உண்டல்லவா..??!<br /><br />அண்மையில் ஒரு பிரதான தமிழ் இணையத்தளம் ஒன்றில் "புதுமைப் பெண்" என்ற தலைப்பின் கீழ் இந்தப் படம் இணைக்கப்பட்டிருந்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAJSWQhLrlUr7YWlEBBJqM5ZfF4KhTqQEYy7rgkBCTYV6qsJ7HMgeewuXDOj7hTox2ExQ4B3s7XIpnSHhGUAChytufniqIvjLrq54EaqSF2ZjhyphenhyphenwqOXBHMnj1HO95ZpoTLt1bNbQ/s1600-h/c60.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAJSWQhLrlUr7YWlEBBJqM5ZfF4KhTqQEYy7rgkBCTYV6qsJ7HMgeewuXDOj7hTox2ExQ4B3s7XIpnSHhGUAChytufniqIvjLrq54EaqSF2ZjhyphenhyphenwqOXBHMnj1HO95ZpoTLt1bNbQ/s200/c60.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5119883313346385906" /></a><br /><br /><em>ஆதாரம்:</em> <a href="http://www.tamilnation.org/art/penn/puthumai_penn.htm">இங்கு அழுத்தி பிரதான இணைப்பைப் பார்க்கவும்.</a><br /><br />இதைப் பார்த்த எனது நண்பன் சொன்னான் இதென்ன ஆபாசமா இருக்குது. இப்படி இருக்கிறதா புதுமைத்தனம். இதில் என்ன புதுமைத்தனம் என்று..??! ஆபாசமாகத் தோன்றல் புதுமைத்தனமா..??! என்று பதிலுக்கு வினவினான்.<br /><br />எனக்கும் அது நியாயமான கேள்வியாகத்தான் தோன்றியது. ஆடைகளற்ற நிலை என்பது புதுமையல்ல. காரணம் ஆதி மனிதனும் ஆடைகளின்றியே இருந்தான். ஆடைகளால் உடலை மூடுதல் என்ற நிலை தோன்றிய பின்னர் அல்லது அப்படி ஒரு சிந்தனை உருவாக்கத்தை மனிதன் உயர்ந்தது என்று வரையறுத்துக் கொண்டதன் பின்னர் ஆடைகளைக் களைந்து உடலை இயற்கைத்தனமாகக் காட்டல் என்பது புதுமை என்று எண்ணுகின்றனரோ.. அங்கும் மனிதன், தான் பழைய நிலைக்கு மீளுதலை புதிய சிந்தனையாகக் காட்டுறான் அல்லது காட்ட முயல்கின்றான். இயற்கை காட்டவில்லை. அது குறுகிய காலத்தில் பெரிய மாற்றத்தைக் காட்டவில்லை..! என்று விளக்கமளித்தேன்.<br /><br />அதன் போது எழுந்த எனது இந்த சந்தேகம் இன்னும் இருக்கவே செய்கிறது. அவனில் இப்படத்தை பார்த்ததும் தோன்றியுள்ள கருத்துருவாக்கம் என்னில் இல்லை. நான் இதை ஆபாசமாக நோக்கவில்லை. ஆபாசம் என்று சொல்வதிலும் நிர்வாணம் என்று வரையறுக்கப்பட்ட ஒரு வடிவத்தில் அது உள்ளதை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். அவன் இல்லை அப்படி இருக்காது நீ உண்மையை சொல்ல மறுக்கிறாய் எங்கிறான். இங்குதான் தோன்றியது இந்த சொல்லாடல்களுக்குள் பொதிந்திருக்கும் மனித இயற்றுகைகளின் செல்வாக்கும் மனித சிந்தனையை அவை செய்யும் ஆதிக்கமும் என்பதாகக் கருதி உங்கள் முன் இவ்விடயத்தைக் கொண்டு வருகின்றேன்.<br /><br />ஆனால் பெண்கள் சார்ந்துதான் ஆபாசம் நிர்வாணம் என்ற சிந்தனையோட்டம் இருக்கிறது என்ற நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிக் காட்டுவதில் புதுமைத்தனமும் இல்லை.<br /><br />இவ்வோவியம் தொடர்பில் உள்ள விமர்சனங்களையும் சேர்த்து உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.<br /><br />இவை தொடர்பில் உங்கள் பார்வைகள் என்ன.. சிந்தனையோட்டங்கள் என்ன..??!<br /><br /><em>குறிப்பு:</em> 1. தயவுசெய்து குறித்த படத்தை கீழ்த்தரமான பாலியல் கண்ணோடு நோக்காதீர்கள். அது ஒரு ஓவியம். ஓவியனின் சிந்தனைக்கு உருக்கொடுத்த நிகழ்வு. மதிப்பளியுங்கள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.<br /><br />2. உங்கள் சிந்தனையில் எழும் வளமான கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். நாகரிகமற்ற சொல்லாடல்களைத் தவிருங்கள்.kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18859690.post-3698338259937417032007-10-09T09:56:00.000+01:002007-12-20T10:12:07.881+00:00பெரியார் ஒரு தமிழின விரோதி - ஆதாரங்களுக்கு ஆதாரம்<strong>தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்</strong> - <em>தமிழ் வெறுப்பு</em><br /><br />...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?<br /><br />இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.<br /><br />இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.<br /><br />பெரியார் "தாய்ப் பால் பைத்தியம்' என்ற நூலிலிருந்து. <br />-----------------<br /><br /><strong>பெண் விடுதலை</strong> - <em>திருமணத்தை அடியொற்றி வந்த பெண் விடுதலை</em><br /><br />...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது. <br /><br />தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை. <br /><br />"குடியரசு' (12.8.28)<br />-----------<br /><br /><strong>வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?</strong> - <em>அறிவியலையும் ஆங்கிலத்தையும் கலந்தடித்து ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தல்</em> <br /><br />சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,<br />இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?<br />----------<br /><br /><strong>பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?</strong> - <em>தமிழ் மொழி கலைச் சொற்களை கண்டறியத் தூண்டாது ஆங்கிலச் சொற் பாவனையை தமிழில் திணித்தல்.</em><br /><br />சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.<br /><br />பெரியாரின் கருத்துகள், "அறிவு விருந்து' என்ற நூலிலிருந்து. <br />------------<br /><br /><strong>தொல்காப்பியன் மாபெரும் துரோகி</strong><em> தமிழ் இலக்கண கர்த்தாக்களில் ஒருவரான தொல்காப்பியர் மீதான தமிழ் இலக்கண வரம்புக்கு அவசியமில்லாத வசைபாடல்.</em><br /><br />தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.<br />-------------<br /><br /><strong>வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?</strong> - <em>பிறமொழித் திணிப்பு</em>.<br /><br />தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்<br />கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.<br />-------------<br /><br /><strong>தமிழ் காட்டுமிராண்டி பாஷை</strong> - <em>மொழியின் தொன்மையை வைத்தே அதைப் பழித்தல். அப்ப உலகில் உள்ள பழைய மொழிகள் எல்லாம்.. மனிதர்களின் பகுத்தறிவின் விளைவில்லையா..??! வெறும் காட்டுக் கூச்சலா..??!</em><br /><br />இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.<br /><br />இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?<br />------------<br /><br /><strong>ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது</strong> - <em>ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை எதிர்த்து ஆணும் பெண்ணும் விலங்குகள் போல கலவி செய்து சமூகம் உறவுகள் என்ற நிலையறுந்து வாழும் நிலையைத் தூண்டல்.</em><br /><br />...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.<br /><br />...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.<br />-----------<br /><br /><strong>எல்லாமே தமிழ்தான் !</strong> -<em> தமிழின் தனித்துவத்தை பிறமொழிகளோடு தமிழை கலப்படைய செய்து அழிக்கும் கருத்து. பிறமொழிக்காரர்களை தமிழுக்கு எதிராக தூண்டி விடுதல்.</em><br /><br />தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன்.<br /><br />- "மொழியாராச்சி' நூலிலிருந்து<br />------------<br /><br /><strong>திருக்குறளைக் கண்டிக்கிறேன் !</strong> - <em>உலகப் பொதுமறையே தமிழில் இருந்ததற்காக குற்றமாக்கப்படுகிறது. அதன் உட்பொருள் அறியாத முட்டாளா ஈ வெ ராமசாமி.</em><br /><br />...குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் "குறளை' எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது.<br /><br />- பெரியார் பேட்டியிலிருந்து<br />------------<br /><br /><strong>தேர்தலுக்காக !</strong> - <em>திராவிட நாட்டை வலியுறுத்தும் வகையில் பேசல்.மா பொ சி போன்றவர்கள் தனித் தமிழ்நாட்டை வேண்டினர். அண்ணாவும் அக்கருத்துக்களை அப்போது ஏற்றுக்கொண்டவர். அவர் ஈ வெ ராமசாமியில் திராவிடக் கொள்கையின் பாதிப்பால் தான் திராவிட நாடாக்கிக் கேட்டாரா அல்லது பிறமொழி மக்களை கொண்டிருக்கும் தமிழக நிலப்பரப்பை தமிழகத்தோடே தக்க வைக்கக் கேட்டாரா என்பது முக்கியம். ஆனால் ஈ வெ ராமசாமிக்கு தனித் தமிழ்நாடு என்று பேசிய மா பொ சி போன்றவர்கள் கடும் எதிரிகளாகத் தெரிந்தனர். அவர்களை ராமசாமி திட்டித் திரிந்தார்.</em><br /><br />காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது' என்று விதி செய்து கொண்டவுடன், தி.மு.க. "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை விட்டு விட்டோம்' என்று சொல்லி, தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சனையாக ஆகி விட்டதால், அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சு கூட விடக் கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால், அவர்களுக்கு பயந்து கொண்டு அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல் "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை கைவிட்டு விட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்' என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள்.<br /><br />- "விடுதலை' (30.3.67)<br />---------------<br /><br /><strong>11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது: </strong> - <em>தமிழரசு, தமிழாட்சி தமிழ்மாகாணம் என்ற எதனையும் தமிழர்களுக்கு அங்கீகரிக்காத நிலை. ஆனால் திராவிட நாட்டில் தமிழர்கள் திராவிடராக வாழ வேண்டும் இந்திய தேசியத்தோடு இணையந்திருக்கக் கூடாது என்ற ஈ வெ ராவின் முரண்பாடான நிலைப்பாடு. தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளத்தோடு மிளிரக் கூடாது. ஆனால் திராவிட அடையாளத்தோடு கன்னட சகோதர்களை அண்டி வாழலாம் என்ற திராவிட ஆதிக்கத்தை தமிழர்கள் மீது திணித்தல்.</em><br /><br />'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.<br />-------------<br /><br /><strong>அண்ணாதுரை பற்றி பெரியார் !</strong> - <em>அண்ணா பற்றி.</em><br /><br />அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது; பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். சௌக்கியமாக பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கிறார். அதைப் பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே, நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே, இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்?<br />---------------<br /><br /><strong>கன்னடக்காரன் !</strong> - <em>தன்னைக் கன்னடன் என்று பறைசாற்றல். தமிழர்கள் மத்தியில் தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் குறை சொன்னபடி.. தன்னை கன்னடன் என்று இனங்காட்டி மொழிதல்</em><br /><br />ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்.<br />---------------<br /><strong>ஹிந்தி இருக்கட்டும்</strong> - <em>ஹிந்தியின் இருப்பைக் காத்தல்.</em><br /><br />இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை; அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்... சில காரியத்திற்காக இந்தியை கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள்; ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.<br /><br />- "விடுதலை' (7.10.48)<br />--------------<br /><br /><strong>முட்டாள்தனம் ! </strong>- <em>தமிழ் தேசியம் போன்ற கொள்கைகளுக்கு எதிராக தாய் மொழி.. தாய் நிலம் என்பதை முட்டாள் என்பது.</em><br /><br />இந்த அதிசய காலத்தில் "எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன்' என்று முட்டாள் தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?<br /><br />"விடுதலை' (14.11.1972)<br />--------------<br /><br /><em><strong>தொடரும்.......</strong></em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18859690.post-91044213376352771312007-10-08T14:46:00.001+01:002008-05-03T11:43:55.258+01:00பெரியார் ஒரு தமிழ் இன விரோதி - ஆதாரங்கள் 10<strong>1. தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றவர் ஈ வெ ராமசாமி என்ற கன்னட தேசத்தைச் சேர்ந்த பெரியார். தமிழ் மொழியைத் திட்டியதைத் தவிர அதன் வளர்ச்சிக்கு அவசியமான எந்தச் சீர்திருத்தங்களையும் முன்மொழியாமை மற்றும் அதற்காக பாடுபட முன் வராமை. (தனது பத்திரிகை விளம்பரத்துக்காக தமிழன்பர்கள் கூடி எடுத்த தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பதை மொழி வளர்ச்சி என்ற நோக்கற்று தனது பத்திரிகை வளர்ச்சிக்காக பயன்படுத்தியதோடு மட்டும் தூங்கிவிட்டமை இதற்கு நல்ல உதாரணம்.)<br /><br />2. தமிழர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று உலகில் எல்லா மனிதருக்கும் உள்ள பகுத்தறிவைக் கூட பெரியார் தமிழர்களுக்கு வழங்க மறுத்தமை. <br /><br />(இக்கூற்றிக்களின் மூலம் தமிழ் மொழியின் தமிழர்களின் தொன்மையை அழித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி ஆதிக்கங்களினை அனுமதித்து தமிழர்களின் மொழி அடையாளத்தை சிதைக்க முனைந்தவர்.தமிழகத்தில் தமிழ் வழக்கொழிதலைத் தூண்டியவர்.)<br /><br />3. தமிழ் இனத்தின் தமிழ் தேசிய இருப்பை தமிழர்களின் தனித்துவத்தை திராவிடப் போர்வை கொண்டு அழிக்க முனைந்தமை.<br /><br />4. தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தன்மை, அவர் இந்திய உபகண்டத்தில் தமிழ்களுக்கு என்ற ஒரு நில இருப்பை அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய நில இருப்பை அவர்களின் சிந்தனையில் இருந்தே அழிப்பதற்கு சமனானது.<br /><br />5. தன் கூட்டத்தில் இருந்து கொள்கை முரண்பட்டு விலகிய அண்ணாவை பண ஆசை பிடித்த ஒருவன் என்று விமர்சித்தமை. அரசியல் ரீதியாகக் கூட தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அண்ணா தமிழர்களுக்கு என்று தனிநாடு கேட்பதைக் கூட எதிர்த்து நின்றவர். தமிழகத்தில் தமிழ் மொழியின் முதன்மைத் தன்மையை சிதைக்க முனைந்த ஹிந்தி திணிப்பை எதிர்க்க மறுத்தமை.<br /><br />6. பெண்களின் கர்ப்பம் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கூறி.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி தமிழர்களின் இன விருத்திக்கு சாவு மணி அடிக்க முனைந்தமை.<br /><br />7. தமிழ் மக்களின் உயர்ந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் ஒருவனுக்கு - ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை சிதைக்கவல்ல கருத்துக்களை "பெண் விடுதலை" என்று காட்டியபடி தமிழர்கள் மத்தியில் சமூக விரோத, மனித இன விரோத கருத்துக்களை விதைத்து.. விலங்குத்தனமான, எழுந்தமானமான ஆண் - பெண் பாலியல் புணர்வை வழியுறுத்தி.. தமிழ் சமூகத்தின் இருப்பையே கொடிய பால்வினை நோய்களைப் பரப்பி.. அழிக்க முயன்றமை.<br /><br />8. தமிழ் மொழியின் தொன்மை.. இலக்கணக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இலக்கியங்கள் மீதும்.. தமிழ் இலக்கண, இலக்கிய கர்த்தாக்கள் மீதும் பார்பர்ன.. இந்துத்துவ.. சாதிய சாயங்களைப் பூசியமை.<br /><br />9. பிராமணர்கள் மீது எதிர்ப்பென்று தமிழர்களிடையே பிராமண வர்க்க இருப்பையும்.. ஏனையவர்களை அவர்களுக்கு எதிராகவும் தூண்டி சமூக வன்முறைத்தனமான நிலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டமை. அதன் தொடர்ச்சியாக மறைமுகமாக சாதிய இருப்பை தமிழகத்தில் தக்க வைத்தமை. அதைக் கொண்டு தமிழகத்தில் சமூகப் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பிரித்தாண்டு.. சாதிய அரசியலுக்கு வித்திட்டமை. தமிழர்களிடையே தமிழின ஒற்றுமையை இல்லாமல் செய்தமை.<br /><br />10. தனது திராவிடக் கொள்கையின் கீழ் தமிழகத்தின் தோற்றம்.. இருப்பு என்பதை.. இல்லாமல் செய்து தமிழர்களை திராவிடர்களாக்கி.. அவர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திராவிட அடையாளங்களாகக் காட்டி.. தமிழினத்தினதும் அதன் தேசியத்தினதும் இருப்பை.. அழிக்கும் வகையில் சமூகத்தில் மேற்குலக சமூக விரோத சிந்தனைகளை பகுத்தறிவு என்ற பெயரில்..கட்டவிழ்த்து விட்டமை. <br /><br />உண்மையாக தமிழர்களுக்கும்.. ஒட்டுமொத்த மனித இனத்துக்குக்கும் அவசியமான அறிவியலை தமிழகத்தில் வளர்க்கவோ இனங்காட்டவோ முனையாமை. <br /><br />இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் ஏனைய மத ஆதிக்கங்களினால் சிதைந்து கொண்டிருந்த தமிழழிவை ஊக்குவித்து.. சைவத்தால் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழியின் வளர்ச்சியை இல்லாமல் செய்ய முற்பட்டமை.</strong><br /><br /><em>"தமிழ் தேசிய விரோதி ஈ வெ ராவை இனங்காண்போம்" என்ற விழிப்புணர்வை முன்வைத்து.. சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக இப்பதிவு இடப்படுகிறது</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-18859690.post-85871946889974076492007-10-08T12:52:00.001+01:002008-12-10T12:08:27.087+00:00தோப்பிருந்து ஒரு காவியம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEif_4I4qJnHXUplC43BSKHwz9GnzhiQviNI48WswXAIbmRzmMNCOIV0ceIPPJOnR0pbbhyphenhyphenraTozxgsllJi86hOM6BUYAS-WQ_Lt7XRObCK3AlYtCPZLEbbT5R6sYuscyPUY9iCfOg/s1600-h/kuruvi68.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEif_4I4qJnHXUplC43BSKHwz9GnzhiQviNI48WswXAIbmRzmMNCOIV0ceIPPJOnR0pbbhyphenhyphenraTozxgsllJi86hOM6BUYAS-WQ_Lt7XRObCK3AlYtCPZLEbbT5R6sYuscyPUY9iCfOg/s200/kuruvi68.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5118953929668171714" /></a><br /><br /><strong>குருவி ஒன்று தான் வாழ<br />தேடியது ஒரு தோப்பு<br />வந்தது மாந்தோப்பு<br />வரவினில் கண்டது<br />ஓர் மலர்<br />மலரிடை மலர்ந்தது<br />வாழ்வெனும் வசந்தம்<br />மலரதும் குருவியதும்<br />படைக்குது ஒரு காவியம்<br />அது...<br />மாநிலத்தில் மானிடர் தாம்<br />கண்டிடாத புனித காவியம்.<br /><br />தோப்பருகே ஒரு குடிசை<br />அங்கும் வாழுது<br />ஒரு கூட்டம்..!<br />வஞ்சகமும் பொறாமையும்<br />அவர்தம் மனங்களில்<br />கறுவும் மனதை அடக்க முடியா<br />கலங்கி நிற்குது அவர் சித்தம்..!<br />கற்பனையில் கூட<br />அடுத்தவன் வீழ்ச்சியில்<br />அகம் மகிழவே துடிக்குது..!<br />பாவம் அவர்<br />அறிவிருந்தும்<br />அறியாமையில்...!<br /><br />தோப்பிருந்த குருவியது<br />மனமிரங்கி<br />மலருடனிணைந்து<br />பாவப்பட்டவர் மீது<br />ரட்சிக்கிறது<br />மானிடா....<br />மனமதில் அமைதி கொள்<br />வாழ்வதில் சிறப்பாய்<br />மாற்றானை உன்னில் தரிசி<br />உன்னை மாற்றான் மதிப்பான்..!<br />அன்றி...<br />வாழ்வில் நீயே<br />உன்னை மிதிப்பாய்<br />உன் நினைவுகள்<br />ஓர் நாள்<br />உன் நிஜம் அழிக்கும்...!</strong><br /><br /><a href="http://tamilamutham.net/amutham/index.php?option=com_content&task=view&id=834&Itemid=26">மீள்பதிப்பு தமிழமுதத்தில். இங்கு அழுத்திப் பார்க்கவும்.</a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18859690.post-5110892903570508822007-10-08T12:00:00.018+01:002009-09-17T14:35:39.660+01:00சொன்னாலும் சொல்லாட்டிலும் இது தாண்டா இப்ப "காதல்"<a href="http://img401.imageshack.us/img401/5227/boyab2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://img401.imageshack.us/img401/5227/boyab2.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>நியூயோர்க் ஜம்பரில் (NYjumper)<br />லண்டன் ஸ்ரைலில் (style)<br />அரைப் பென்ரர் (pender) தெரிய<br />டெலிம் (denim) போட்டு..<br />பி.எஸ் 3 (ps3) வாங்க<br />பிளாசா (plaza) போனேன்..!<br /><br />அங்கே..<br />பிற்சா கட் (pizza hut)<br />பிற்சாவோடு (pizza)<br />ஸ்ரைலா நிற்கையில்<br />லப் ரொப் (laptop) அடக்கமாய்<br />நீ இருந்தாய்.<br /><br />திறி டி விசனில் (3D vision)<br />உன்னைக் காண<br />ஐ.ஆர் (IR) கொண்டு<br />ஸ்கான் (scan) செய்தேன்<br />எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல<br />திறில்லாய் (thrill) இருந்தாய்..!<br /><br />உடனே..<br />புளூருத் (bluetooth) சிக்னலாய்<br />என்னைத் தந்தேன்<br />பதிலுக்கு..<br />மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera)<br />நீ என்னைப் பார்த்தாய்.<br /><br />அதுதான் சாட்டென்று..<br />ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே<br />அருகில் வந்தேன்<br />எம்பி 4 (MB4)இல் இசை தேட<br />எம்பி 3 (MB3)போல இசைந்தாய் என்னோடு.<br /><br />ஜி பி எஸ் நவிகேற்றராய் (GPS navigator)<br />நீ வந்ததால்<br />காதல் கை வேயில் (highway)<br />ரவுண்டெபவுட் (roundabout) தேடி<br />அலையும் நிலை களைந்தேன்.<br /><br />டிஜிற்றல் (digital) கமராவாய்..<br />நீ அருகில்<br />காணும் காட்சிகளோ<br />பல மெகா பிக்சல் (Megapixel)அளவுகளில்...!<br /><br />என்ன மாயமோ<br />நானறியேன்<br />திடீரென..<br />பென்ரியம் 4 (pentium 4)<br />காட்டிஸ்க் (hard disc) போல<br />ஸ்ரக்கானாய் (stuck)...<br />டீபக் (debug) செய்து<br />சீர் செய்ய<br />ஸ்ரெயிட்னர் (straightener) போல<br />சூடானாய்.<br /><br />கூலா..(cool)<br />மக்கில் (mcdonalds)<br />கோலா (cola) ஒன்று வாங்கி<br />ஸ்ரோவால் (straw) தந்தேன்<br />லிப்ஸ்டிக் (lipstick) கரையும் என்றே.!<br /><br />சடார் என்று<br />கன்னத்தில் ஒரு கிஸ் (kiss) தந்தாய்...<br />யூரோ ஸ்ரார் (euro star) வேகத்தில்<br />காட் (heart) அடிக்க..<br />வின்ரர் ஜக்கட் (winter jacket) போல<br />இறுக்கி<br />இதமாய் ஒட்டிக் கொண்டாய்.<br /><br />அப்படியே..<br />சென்றல் (central) லண்டன் வரை<br />கக் (hug) செய்து கொண்டே<br />வார்கிங் (walking) போய்..<br />கை பார்க் கோர்னரில் (highpark corner)<br />பெஞ்சில் (bench) இருக்க<br />ஈசி ஜெட் (easyJet) போகும்<br />சத்தத்தில்<br />மெய்மறந்து கேட்டாய்..<br />நியுசிலண்ட் (New zealand) ரூர் (tour) போவமா என்று.<br /><br />சுப்பர் கொம்பியூட்டர் (super computer)<br />புறசெசர் (Processor) வேகத்தில்<br />கணக்குப் போட்டே<br />கிரடிட் ஸ்கோர் (credit-card score)<br />சரி பார்த்தே..<br />கூகிளில் (google) தேடி<br />வேர்ஜினில் (virgin) ரிக்கற் (ticket) பதிவு செய்தேன்.<br /><br />கில்ரன் கொட்டலில் (Hilton hotel)<br />லக்சறி றூமும் (luxury room)<br />ஒன்லைனில் புக் (online book)செய்தேன்.<br /><br />இடையில்..<br />எஸ் எம் எஸ் (SMS)<br />எம் எஸ் என் (MSN)..<br />சற்றிங் (chatting) மூலம்<br />நாளும் சொல்லி<br />மேர்சிட்ஸ் பென்சில் (Mercedes benz) எயார்போட் (airport) போனோம்.<br /><br />பட்....<br />ஜெள்ளுடன் (gel) ஒருத்தன்<br />சிமாட்டா (smart) வர<br />கொலிபூட் ஸ்ரார் (hollywood star) என்று<br />செல்போன் (cellphone) போலச்<br />சிரித்தவளாய்<br />பிளையிங் கிஸ் (flying kiss) அடித்தபடி<br />கேம்போயாய் (gameboy) அடைக்கலமானாய்<br />அவன் கையில்..!<br /><br />என் மனசோ...<br />கடைசி கேமில் (game) கோட்டை விடும்...<br />இந்தியன்<br />கிரிக்கெட் ரீம் (team) போல<br />அப்செட் (upset) ஆக..<br />பக்கத்தி பாரில் (bar)<br />ஜக்டானியல் (jackdaniel) ஒரு பெக் (bec) தள்ளிட்டு<br />ஜோன் பிளேயர (John Player)<br />ஊதியபடி..<br />பென்ஸை (benz) முறுக்கியவன்<br />டெல்ரா ரொக்கட் (delta rocket) வேகத்தில்<br />லக்சறி பிளட்டில் (luxury flat)<br />என் றூமில் (room)<br />சோபாவை (sofa)<br />கட்டியணைத்தபடி<br />பி.எஸ் 3 யோடு<br />ஐக்கியமானேன்...<br /><br />அடுத்ததிற்கு..<br />தூண்டில் போட<br />லப் டொப்பில்..<br />பேஸ் புக்கையும் (facebook)..<br />திறந்தபடி..!<br /></strong>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18859690.post-83670297052030775412007-10-04T09:40:00.000+01:002007-12-25T19:35:56.992+00:00"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது<a href="http://img267.imageshack.us/img267/2356/sputnikasmwp7.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://img267.imageshack.us/img267/2356/sputnikasmwp7.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong>காலைச் சூரியனை<br />கையெடுத்துக் கும்பிட்டு..<br />மாலைச் சந்திரனை<br />வீழ்ந்து வணங்கி..<br />சுழன்றடிக்கும் சூறாவளிக்கு<br />பயந்து நடுங்கி...<br />மின்னலும் இடியும்<br />மரணத்தின் தூதென்று<br />ஓடி ஒளித்து..<br />தீயதும் சுடுவது<br />முன்வினைப் பயனென்றும்<br />பூமியது அதிர்ந்து பிளப்பது<br />பாவிகள் அழிவென்றும்<br />இயற்கைக்குள்<br />உள்ளதை விளங்காமல்<br />உளறிய கணங்களில்..<br />எதிர்வினை சொல்லி<br />பகுத்தறிவென்று<br />வாய் வீரம் பேசி<br />வீண் பொழுது கழித்திடாமல்<br />ஆயிரம் கதை கட்டி<br />அலைந்து கொண்டிராமல்..<br />மூளையைக் கசக்கி<br />விண்கலம் கட்டி<br />விண்ணுக்கு அனுப்பி<br />வீர சாதனை படைத்த<br />திருநாள் இன்று..!<br /><br />"புட்னிக்" எனும் மனிதப்பட்சி<br />ரஷ்சிய மண்ணிருந்து<br />விண்ணேகி<br />அரை நூற்றாண்டும்<br />கடந்தாயிற்று.<br />மனித வரலாற்றின்<br />புது யுகம் இது..<br />புறப்படுங்கள்..<br />சுன்னாகம் சந்தியில் <br />இருந்து...<br />செவ்வாய் நோக்கி<br />செவ்வாய் தோசத்தை<br />சிதைத்து விட்டு வருவோம்.</strong><br /><br /><em>சுடச் சுடச் சுட்டது யாழ் இணையத்தில் இருந்து.</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18859690.post-77924385176995242322007-09-25T23:19:00.002+01:002009-09-08T07:43:06.261+01:00முற்றத்து முகங்கள்<strong>முற்றத்து முகங்கள் </strong><br /><br /><em>எழுதியவர்: தேசப்பிரியன் <br />ஞாயிற்றுக்கிழமை, 01 ஆடி 2007 </em> <br /><br />அம்மா.. அம்மா.. என்று கத்தியபடி தனது லேடிஸ் சைக்கிளை முற்றத்தில் அவசர அவசரமாக போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் சுமதி...!<br /><br />என்னடி.. ஏல் (A/L) சோதனை மறுமொழி பார்க்கப் போனா.. என்னடியாச்சுது என்று குசினியில் வேலையோடு இருந்த சுமதியின் அம்மா கமலம்.. மகளின் குரலைக் கேட்டுவிட்டு... பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்..!<br /><br />நான் பெயிலாகிட்டன் அம்மா என்று.. முகத்தில் சோகம் ததும்ப.. ஓடிச் சென்று தாயை அணைத்தபடி அவரின் உடலில் முகத்தைப் புதைத்தபடி செயற்கையாய் அழுது கொண்டே சொன்னாள் சுமதி.<br /><br />என்னடி பெயிலாகிட்டியா.. போச்சு.. என்ர மானம் போச்சுது.. லண்டனில இருக்கிற என்ர மனிசனுக்கு என்ன பதில் சொல்லப் போறன்.. பக்கத்தி வீட்டு சுரேஸ் போன முறை எல்லாப் பாடத்திலும் ஏ(A) எடுத்தவன்.. அவன்ர அம்மா எவ்வளவு புளுகு புளுகிக் கொண்டு ராசாத்தி போல இருக்கிறாள்.. இப்ப என்னைப் பார்த்து ஊரே நக்கலடிக்கப் போகுது.. வெளிநாட்டில உள்ள சொந்த பந்தங்களுக்கு என்ன பதில் சொல்லுவன்.. வெளில தலை காட்டேலாமல் பண்ணிப் போட்டியேடி...என்று புலம்பியபடி அணைப்பில் இருந்த மகளை தள்ளிவிட்டார் கமலம்..!<br /><br />தாயின் புலம்பலை, கவலையை, கண்ணீரை அவதானித்த சுமதி.. லூசு அம்மா.. அழாத...இந்தளவுதான் நீ என் மேல வைச்ச நம்பிக்கையா.. எனக்கு 3 ஏ.. எல்லாப் பாடத்திலும் ஏ அம்மா. டிஸ்ரிக் ராங் 3. யாழ்ப்பாண மெடிக்கல் பக்கல்ரி (Medical faculty) கிடைக்கும்.. நீ விரும்பினது போல உன்ர மகள் டொக்டர் ஆகும் காலம் கன தூரத்தில இல்லையம்மா..!<br /><br />போடி.. ஒரு நிமிசம் என்ர இருதயமே நிண்டு போச்சுது. உனக்கு விளையாட்டு.. நீ சோதனைக்குப் படிக்க நித்திரை முழிச்சதை விட நான் தான்டி உனக்காக அதிகம் முழிச்சிருப்பன்.. எனக்கெல்லோ தெரியும் உன்னோட பட்ட பாடு. அதுவும் இந்தச் செல்லடிக்க பொம்பரடிக்க.. பங்கரும் புத்தகமுமா நீ பட்ட பாடுகள்.. எல்லாத்துக்கும் நல்ல முடிவா அந்தச் செல்வச்சந்நிதியான் ஒரு நல்ல முடிவைக் காட்டிட்டான். எனிப் படிச்சுப் பெரிய டொக்டர் ஆகி.. எங்கட மக்களுக்கு சேவை செய்யனும் என்ன.. என்று தள்ளிவிட்ட மகளை இழுத்து இறுக அணைத்து முத்தமிட்டு தலையைத் தடவிக் கொடுத்தார் கமலம்.<br /><br />சிறிது நேரத்திலேயே... தாயின் அன்புப் பிடிக்குள் இருந்து வெளி வந்த சுமதி.. குசினிக்குள் சென்று ஒரு குவளை தண்ணியைக் குடிச்சிட்டு.. அம்மா இவள் கோமதிக்கு என்ன றிசல்ட் என்று பார்த்திட்டு வரட்டே என்றாள்.<br /><br />சரி போயிட்டு கெதியா வா.. உங்கால அப்போத வண்டு (ஆளில்லா வேவு விமானம்) சுத்திட்டுப் போனது.. போய் வாறது கவனமடி. பொம்பர் வந்தா சைக்கிளைப் போட்டிட்டு விழுந்து படு என்ன..<br /><br />ஓம் அம்மா.. என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டாள் சுமதி வீட்டை விட்டு.<br /><br />கமலமும் மகள் சுமதியும் யாழ்ப்பாண இடம்பெயர்வோடு வன்னிக்கு இடம்பெயர்ந்து இப்ப 10 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் வன்னி மண்ணை விட்டு போக மனசே இல்லாமல் தங்கிவிட்ட சில தமிழர்களில் அவர்களும் அடங்கிவிட்டனர். தகப்பன் லண்டனில அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்றிருந்தும் அங்க வரச் சொல்லி அடம்பிடிச்சும்.. ஊரில படிச்சு டொக்டர் ஆகனும் என்ற வைராக்கியத்தில் பல இடர்களின் மத்தியிலும் படிச்சு சித்தி பெற்றவர் வரிசையில் சுமதியும் அடங்கி இருந்தாள்.<br /><br />கோமதி.. கோமதி.. என்னாச்சடி.. றிசல்ட் பார்த்தியா.. என்று கோமதியின் வீட்டு வாசலில் இருந்தே கூவிக் கொண்டு அவளின் வீட்டிற்குள் நுழைந்தாள் சுமதி.<br /><br />வாடி சுமதி...வா.. பாத்திட்டண்டி.. ஏ 2சி யடி.. மெடிசின் கிடைக்கிறது கஸ்டம்..! உனக்கு எப்படிடி றிசல்ட்.<br /><br />எனக்கு 3ஏ யடி. மெடிசின் கிடைக்கும்.<br /><br />வாழ்த்துக்கள் சுமதி. நான் இப்பதான் கனடாவில இருக்கிற அப்பாட்ட என்ர றிசல்ட்டைச் சொன்னன். அவர் "கவலைப்படாத நான் இங்கினை ஒரு படிச்ச பொடியனாப் பார்த்துப் பேசி கலியாணம் கட்டி வைச்சு உன்னைக் கனடா கூப்பிடுற வழியைப் பாக்கிறன்" என்று சொன்னார். நானும் சம்மதிச்சிட்டண்டி. எத்தனை நாளைக்குத்தான் இங்க இருந்து கஸ்டப்படுறது. ஊரில உள்ளதுகள் எல்லாம் தினமும் வெளிநாட்டுக்குப் போயிட்டே இருக்குதுகள். யாரும் திரும்பி வரப்போறதில்லை. நாங்க மட்டும் இங்க இருந்து என்ன ஆகப் போகுது..!<br /><br />என்னடி கோமதி இப்படிச் சொல்லுறா. மெடிசின் கிடைக்கல்ல என்ற விரக்தியில பேசிறியா..?!<br /><br />இல்லை சுமதி. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல்ல. தினமும் செல்லடி பொம்பரடி..யுத்தம்.. சண்டை.. பொருளாதாரக் கஸ்டம்..! கனடா போனா எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள். அப்படியே கலியாணத்தையும் கட்டிக் கொண்டு "செற்றில்" ஆகிடலாமடி. அங்க இருந்து எந்தக் கஸ்டமும் இல்லாம இங்கத்தை விசயங்களை வைச்சு.. ஆமி, பொம்பர் பயமே இல்லாம பொழுதுபோக்கா வருசக் கணக்கா கதை பேசிட்டே இருக்கலாமடி. ஒளிவீச்சில இங்க நடக்கிறதுகளை வாங்கிப் போட்டு பார்த்துக்கலாம். பேசாம நீயும் உங்கட அப்பாவோட கதைச்சு லண்டன் போற வழியப் பார். உன்ர றிசல்டுக்கு அங்க போயும் படிக்கலாம் தானே மெடிசின். படிச்சிட்டு அங்கேயே அப்படியே ஒரு அழகான டொக்டராப் பார்த்துக் கலியாணம் கட்டிக் கொண்டு செற்றிலாகிற வழியைப் பாரடி..!<br /><br />நீ சொல்லுறதும் சரிதாண்டி கோமதி. உங்க யாழ்ப்பாணத்தில இருந்தா 7 - 8 வருசம் மிணக்கட வேணும்..மெடிசின் படிக்க என்று சொல்லினம். நாட்டு நிலையும் எப்படிப் போகுமோ தெரியல்ல. அம்மா தாண்டி இங்க படிச்சு ஊர் மக்களுக்கு சேவை செய்யனும் என்றா..அப்பாக்கு எங்களை லண்டன் எடுக்கிறதுக்குத் தான் சரியான விருப்பம். அவருக்கு அங்க சொந்தக்கடை வீடு வாசல் என்றிருக்குது.<br /><br />உங்கட அம்மாக்கு லூசடி. நீ தான் அம்மாக்கு எடுத்துச் சொல்லி.. கெதியா இங்க இருந்து கிளம்பிற வழியைப் பார்க்கனும். நான் இன்னும் ஓரிரு மாசம் தான் இங்க இருப்பன். அதுக்கப்புறம் கனடா தாண்டி... என்றவள் கலியாணம் முடிச்சு பிள்ளை குட்டியோட உன்னையும் உன்ர மனிசனோட லண்டனில பார்க்கிறன் என்று பகிடி கலந்து பொடி வைத்து கூறிக் கொண்டாள் கோமதி.<br /><br />என்ன எனக்கு மனிசனோ.. நான் இப்ப கலியாணம் எல்லாம் கட்டிறதா இல்ல. பெரிசா படிக்கனும் என்றதுதான் இப்ப என்ர நிலை கோமதி. கலியாணம் பொம்பிளையளுக்கு சுமையாகிட்டு வருகுதடி இந்தக் காலத்தில. பார்ப்பம்.. படிச்ச முடிச்சிட்டு அவசியம் என்றா செய்யுறது இல்லை என்றா லண்டனில மக்களுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பன் அன்னை திரேசா போல.<br /><br />அது தாண்டி சொல்லுறன் இப்பவே லண்டன் போற வழியைப் பார் என்று.<br /><br />அம்மாட்டைச் சொல்லி அப்பா மூலம் நானும் இங்க இருந்து கிளம்பிற வழியைப் பார்க்கப் போறன் கோமதி. சில வேளை உனக்கு முதல் நான் கிளம்பிடுவன்ரி வன்னியை விட்டு லண்டனுக்கு.<br /><br />சரி அதுகள் கிடக்கட்டும்.. அதுகளைப் பற்றி அப்புறமா.. எங்கட அம்மாக்களோட விரிவா..கலந்து பேசி ஒரு முடிவெடுப்பம்..இப்போதைக்கு.. இவள் சுரதா வீட்ட போய் றிசல்ட் கேட்டிட்டு வருவம்.. வாறியேடி..!<br /><br />பொறு.. அம்மாட்ட சொல்லிட்டு வாறன். அப்படியே சுரதா வீட்டையும் போட்டு ஸ்கூலடிக்கும் போயிட்டு வருவம்.<br /><br />அம்மா நான் சுமதி கூட சுரதா வீட்டடிக்குப் போயிட்டு வாறன்.. கெதியா வந்திடுவனனை.. என்று கத்தி விட்டு<br /><br />கோமதி சுமதியுடன் சுரதா வீடு நோக்கி பயணிக்கலானாள்.<br /><br />சுரதா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்பிள்ளை. தகப்பன் விசுவமடுவில் நெற்காணிகள் வைத்து விவசாயம் செய்பவர். தாய் அதே பகுதியில் ஒரு கிராமியப் பாடசாலையில் ஆசிரியையாகக் கடமையாற்றுபவர். வீட்டுக்கு ஒரே பிள்ளை அவள்.<br /><br />போற வழியிலேயே தூரத்தில் தங்களை நோக்கிய பாதையில் சுரதா வருவதை அவதானித்துவிட்ட தோழிகள் இருவரும்..தங்கள் சைக்கிளை நிறுத்திவிட்டு...அவசரமாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த சுரதாவின் வரவை நோக்கி சிறிது காத்திருந்தனர்.<br /><br />சுரதா அருகில் வந்ததும்..என்னடி சுரதா என்ன றிசல்ட்டடி.. எங்கையடி பறக்கிறா...என்று கத்தினாள் சுமதி<br /><br />3 ஏ யடி. டிஸ்ரிக் ராங் 1... இப்ப எனக்கு முக்கிய வேலை ஒன்றிருக்கு என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை நிறுத்தாமல் பறந்து கொண்டிருந்தாள் சுரதா.<br /><br />என்னடி வேலை.. அப்படி அவசரமா... பாஸ் ஒபீஸ் போய் கொழும்புக்குப் போக பாஸ் எடுக்கப் போறியோ.. என்று தன் சந்தேகத்தை அவசரக் கேள்வியாக்கித் தொடுத்தாள் கோமதி.<br /><br />இல்லையடி.. வவுனியா பக்கம் அடிபாடாம். காயப்பட்ட அக்காமாரும் அண்ணாமாரும் கொண்டு வரப்படுகினமாம். அதுதான் முதலுதவி செய்யப் போறன். பிறகு கதைப்பம் என்ன.. என்று சைக்கிளை நிறுத்தாமலே பதிலளித்தபடி.. நேரத்தை தாமதிக்காமல் அவசர அவசரமாக வைத்தியசாலை நோக்கி விரைந்து பறந்து கொண்டிருந்தாள் சுரதா... தீர்க்கமான முடிவோடு. அன்றே அவள் தன்னை தமிழீழ மருத்துவப் பிரிவில் மாணவியாகவும் இணைத்துக் கொண்டாள்.<br /><br /><em>நன்றி: வன்னித்தென்றல்</em><br /><br /><a href="http://www.vannithendral.net/index.php?option=com_content&task=view&id=389&Itemid=54">மூலப் பிரதிக்கு இங்கு அழுத்தவும்.</a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18859690.post-41904778108999616092007-09-24T16:04:00.001+01:002007-12-25T19:36:56.900+00:00தியாகி திலீபனின் தியாகத்தின் 20ம் ஆண்டு நினைவாக..!<strong>தியாகி திலீபன் தமிழீழ தமிழ்மக்களின் 5 அம்சக்கோரிக்கைகளை இந்திய மத்திய ராஜீவ் காந்தி அரசிடம் முன்வைத்து.. இந்திய அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாக ஈழத்தில் நிலை கொண்டிருந்த போது.. 16-09-1987 அன்றில் இருந்து 26-09-1987 அன்று வரை.. உண்ணா நோன்பிருந்து தமிழ் மக்களுக்காக உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.<br /><br />இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும்.. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகி இருந்த மாணவருமாக விளங்கியவர்.<br /><br />இன்று.. உலகின் நவீன காந்தியாகவும் இவர் தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார்.</strong><br /><br /><embed src="http://www.youtube.com/v/bBMmqUHrjeE" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="325" height="270"></embed><br /><br />திலீபன் அவர்களுக்காக பாடப்பட்ட நினைவுப் பாடல்.<br /><br /><embed src="http://www.youtube.com/v/0TdD467MDOc" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="325" height="270"></embed><br /><br />திலீபன் முன் வைத்த 5 அம்சக்கோரிக்கைகளும் ஆங்கில வடிவில் இக்கானொளியில் உண்டு.<br /><br />அவரின் வீரமரணத் திகதி தவறுதலாகப் 26-August-1987 என்று இக்கானொளியில் உள்ளது. அதைத் திருத்தி <strong>26-September-1987</strong> என்று வாசியுங்கள்.<br /><br /><a href="http://www.yarl.com/forum3/index.php?showtopic=28371&pid=347124&st=0&#entry347124">மேலும் தியாகி திலீபன் அவர்களின் இறுதிப் பயணத்தின் 12 நாட்களும் நடந்த நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் கானொளி வடிவில் யாழ் இணையத்தில் உள்ளது. இங்கு அழுத்தி அதைப் பார்வையிடலாம்.</a>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18859690.post-37565879276662217642007-05-18T13:23:00.000+01:002007-12-25T19:37:17.605+00:00புரியாத புதிர் புரிந்த போது..!என்ன இப்பதான் 8 மணியா..?! உங்களுக்காக 1 மணித்தியாலமா காத்திருக்கிறன். ஆடிப்பாடி வாறீங்கள். கெதியா வாறதுக்கு என்ன.. என்று ஜெகனோடு சினந்து கொண்டாள் ஜனனி. <br /><br />இஞ்ச பாருங்கோ ஜனனி.. உங்களைக் காக்க வைக்கனும் என்றது என்ர விருப்பமில்ல. நீங்க எனக்காக தனிய காத்திருப்பீங்கள் என்று நினைச்சிட்டுத்தான் கெதியாப் புறப்பட்டு வந்தன். வாற வழியில நான் வந்த பஸ் பழுதாகி நின்றிட்டுது. பிறகு அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து அதில வாறன். அதுதான் நேரம் எடுத்திட்டுது. மன்னிச்சுக்கோங்கோ தாயே... என்று பணிந்தான் அவள் கோபத்தின் முன். <br /><br />சரி சரி.. வாங்க ரீ குடிப்பம். களைப்பா இருக்கிறீங்க.. முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்று கோபந்தணிந்து பணிவோடு கேட்டாள் ஜனனி. <br /><br />ஜனனி தாதியாக வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறாள். ஜெகனும் அங்குதான் கணணிப்பொறியலாளராக வேலை செய்கிறான். ஜனனி சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருந்தாள். இருந்தாலும் ஜனனியின் அன்பில் அழகில் தன்னையும் மனசையும் பறிகொடுத்த ஜெகன் அதன் பின் அவளின் அன்புக் காதலனாக அவள் அருகிருப்பிலும் அதன் நினைவுடனுமே தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். <br /><br />ஜனனியும் ஜெகனும் வைத்தியசாலை உணவு விடுதியில் "ரீ" ஓடர் செய்துவிட்டு கதை பேசிக்கொண்டிருக்கும் போது ஜெகனின் குறுகிய கால நண்பன் பிருந்தன் அங்கு வந்தான். "காய்" ஜெகன்... எப்படி இருக்கீங்க... வழமையான குசலம் விசாரிக்கும் வினாக்களோடு ஆரம்பித்தவன் ஜனனியையும் பார்த்து... நீங்க எப்படி இருக்கிறீங்கள் என்று அவளையும் நலம் விசாரித்துக் கொண்டு அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான். <br /><br />ஜெகனும் ஜனனியும் தங்கள் பங்குக்கு நாங்கள் நலமாக இருக்கிறம்.. உங்கள் பாடுகள் எப்படி என்று கேட்க.. <br /><br />நானும் நலம்.. ஜெகன், ஜனனி என்ன சாப்பிடுறீங்கள்... என்று மறுபடி பேச்சை தொடர்ந்த பிருந்தன், நான் ரீயும் பனிசும் எடுக்கப் போறன் என்றான். <br /><br />நாங்கள் ரீக்கு ஓடர் கொடுத்திட்டம் பிருந்தன் நீங்கள் உங்களுக்கு ஓடர் கொடுங்கோ என்றாள் ஜனனி. <br /><br />ஓடர் கொடுத்தவை உடனடியாக வந்து சேர... மூவரும் ரீ அருந்திக் கொண்டிருக்கும் போது.. பிருந்தன் சொன்னான் ஜெகன் நீங்கள் லண்டனுக்கு வேலை விசா எடுத்துப் போகலாமே. உங்கள் துறையில நல்ல தொழில் வாய்ப்பிருக்கே அங்க என்று. அதற்கு ஜெகன் இப்ப எல்லாம் அந்த ஐடியா இல்லை. பார்ப்பம் எங்க திருமணம் முடிய ஜோசிப்பம் என்று காத்திரமாகச் சொன்னான். <br /><br />என்ன கல்யாணமா.. அப்படி ஒரு கனவும் இருக்கா என்றாள் ஜனனி ஜெகனைப் பார்த்து சிரித்தப்படி. <br /><br />என்ன ஜனனி இப்படிச் சொல்லிட்டீங்கள். ஜெகன் பலத்த எதிர்பார்ப்போட உங்களை காதலிக்கிறார் என்று நினைக்கிறன் என்றான் பதிலுக்கு பிருந்தன். <br /><br />அவருக்கு உள்ள எதிர்பார்ப்புக்களை மட்டும் நிறை வேற்றிறதுதான் என் காதலா.. பிருந்தன். நீங்கள் என்ன சொல்லவாறீங்கள் என்றது தான் எனக்குப் புரியல்ல என்று மீண்டும் வலிந்து சிரிப்பை வரைவழைத்தபடி சொன்னாள் ஜனனி. <br /><br />இருவர் சம்பாசணையையும் கவனித்துக் கொண்டிருந்த ஜெகன் ஆரம்பத்தில் ஜனனி பகிடியாகச் சொல்வதாக எண்ணினாலும் ஜனனியின் பேச்சில் இருந்த குழப்பத்தைக் கவனிச்சிட்டு.. என்ன ஜனனி இப்படிச் சொல்லுறீங்க. காதல் என்பது வாழ்க்கைல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு உள்ள சந்தர்ப்பம் மட்டுமில்ல ஒருத்தரில ஒருத்தர் தங்கி இருக்கிறதும் தானே என்று சொன்னான். <br /><br />அதற்கு ஜனனி உடனடியாகவே.. நான் உங்களிலையோ அல்லது யாரிலையுமோ தங்கி இருக்கனும் என்ற நிலையில இல்லை. யாரும் என்னில தங்கி இருக்கிறதும் எனக்கு சரிப்பட்டு வராது. <br /><br />காதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல் அப்புறம் கலியாணம் என்றதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் என் சுதந்திரத்தோட எதையும் எப்பவும் செய்யனும் என்ற நினைக்கிறவள். என்னை யாரும் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ அல்லது என்னை முடிவெடுக்க நிர்ப்பந்திக்கவோ செய்யுறது எனக்குப் பிடிக்கிறதில்ல என்று காட்டமாக ஜெகன் எதிர்பார்க்காத தொனியில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டே பதில் சொன்னாள் ஜனனி. <br /><br />இல்ல ஜனனி.. நான் என்ன சொல்லவாறன் என்றால்.. என்று அவளைச் சமாளிக்க முனைந்த ஜெகனை.. நீங்கள் ஒன்றும் சொல்ல வேணாம் என்று கையில் வைத்திருந்த ரீயை மேசையில் வைத்துவிட்டு கோபத்தோடு வெளியேறினாள் ஜனனி. <br /><br />சாறி ஜெகன்.. ஜனனி இப்படி கோவிப்பா என்று எதிர்பார்க்கல்ல. என் நண்பர்கள் சிலர் வேலை விசா எடுத்து லண்டன் போனதை அறிஞ்சு தான் கேட்டன்.. என்று ஜனனியின் செயலுக்கு தானும் ஒரு காரணமோ என்று எண்ணி ஜெகனிடம் மன்னிப்புக் கேட்டான் பிருந்தன். <br /><br />ஐயோ பிருந்தன்.. நீங்கள் நல்ல விசயத்தைத்தானே கேட்டிங்கள். அதில ஒரு தப்பும் இல்ல. ஆனா ஜனனிட செயற்பாடுதான் எனக்கும் புதிசா இருக்குது என்று கூறி.. நான் அப்புறம் சந்திக்கிறன் என்று சொல்லிவிட்டு குடித்த ரீயையும் பாதில வைச்சிட்டு குழப்பத்தோடு விடைபெற்றான் ஜெகன். <br /><br />அதன் பின்னர் ஜனனி ஜெகனுடன் சந்திக்கிறதை கதைக்கிறதை தவிர்க்க முனைந்தாள். ஜெகன் வலிந்து பேச முனைந்தும் ஓரிரண்டு பேச்சோடு ஜனனி நிறுத்தி.. ஜெகனோடு கதைக்கிறதையும் சந்திப்பதையும் தவிர்க்கவும் அவனைப் புறக்கணிக்கவும் செய்தாள். <br /><br />ஒரு நாள் போன் பண்ணி ஜெகனை உணவு விடுதிக்கு அழைத்த ஜனனி.. உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும் என்றாள். <br /><br />கொஞ்சம் என்ன ஜனனி... உங்களோட கதைக்க முடியாத கணங்கள் எவ்வளவு கனதியா இருக்குது தெரியுமா மனசுக்கு.. ரெம்பவே கதைக்க ஆசையா இருக்குது.. மனசு விட்டு பழையபடி அன்பா கதைப்பம் என்றான் ஜெகன் பலத்த எதிர்பார்ப்போடு. <br /><br />அதற்கு சிறிது நேரம் மெளனத்தை பதிலளிந்த ஜனனி.. பின்னர் தானே மெளனத்தைக் கலைத்து இந்தத் தேவையில்லாத கதையெல்லாம் சினிமா டைலக் மாதிரி எங்கிட்ட வேணாம்.. <br /><br />உங்கட நிலைப்பாடும் என்ற நிலைப்பாடும் ஒத்துவாறதா தெரியல்ல எனக்கு. விரும்பினா நீங்க வேறை யாரையும் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டு உங்க எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறது போல வாழ்ந்திடுங்க. என்னை என் வழில போக விடுங்க என்றாள். <br /><br />ஜனனியிடம் எதிர்பார்க்காத அந்த வார்த்தைகள் இடியாக விழுந்தன ஜெகனின் காதில். அவளின் பேச்சில் திகைத்துப் போனவன் கலங்கிய கண்களுடன்.. என்ன சொல்லுறீங்க ஜனனி, என் மனசை நோகடிக்கிறது என்று தெரியாமல் தானா பேசுறீங்க என்றான். <br /><br />நான் யாரையும் நோகடிக்க வேணும் என்று சொல்லேல்ல. எனக்குப் பிடிக்காததை நான் சுதந்திரமாச் சொல்லுறன் என்றாள். இதுதான் என்ர நிலைப்பாடு. இதில இருந்து நான் மாறப்போறதில்ல. எனக்கு உங்களோட காதலும் வேணாம் ஒன்றும் வேணாம் என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய். <br /><br />ஜனனி கோவப்படாம உணர்சிவசப்படாம... உங்களை பற்றி மட்டும் சிந்திக்காம என்னைப் பற்றியும் சிந்திச்சு நீங்க கதைக்கிறதா எனக்குப்படேல்ல. நீங்க மனசில எதையோ வைச்சிட்டு என்னை நோகடிக்கிறதாத்தான் படுகுது என்றான் ஜெகன். <br /><br />அப்படிப்படுகுதில்ல.. எதுக்கு அப்புறம் எதுக்கு என்னை தேடி வாறீங்க. தொந்தரவு பண்ணுறீங்க. நீங்களும் நிம்மதியா இல்லாம எனக்கும் நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கையா இருக்குது இது என்றாள் அவனிலேயே குற்றம் கண்டபடி. <br /><br />என்னாச்சு ஜனனி உங்களுக்கு.. நாம காதலிச்சது பொய்யா அல்லது பழகியது பொய்யா.. அல்லது வாழ்வதே பொய்யா என்றான் ஜெகன். <br /><br />இதைக் கேட்டவள் சற்று அமைதியாகிவிட்டு.. எல்லாம் பொய் தான். அதுதான் சொல்லுறனில்ல நீங்க உங்களுக்குப் பிடிச்சமாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து கலியாணம் கட்டிட்டுப் போங்க என்று. ஏன் என்னை தொந்தரவு பண்ணுறீங்க. <br /><br />நான் தொந்தரவு செய்தனா.. அப்படி என்ன தொந்தரவு செய்தேன் ஜனனி. செய்ததைச் சொல்லுங்க நான் என்னை முடிஞ்சளவு உங்களுக்கு ஏற்றாப்போல மாற்றிக்கிறன். உண்மையாவே என்னை மாற்றிக்கிறன். நீங்கள் தான் எனக்கு எல்லாம் என்று அப்பாவியாக அவள் முன் மண்டியிட்டான் ஜெகன். <br /><br />எனக்காக யாரும் தங்களை மாற்றிக்கிறது எனக்குப் பிடிக்கிறதில்ல. நானும் யாருக்காகவும் என்னை மாற்றிக்கமாட்டன். எனக்காக யாரும் காத்திருக்கவும் தேவையில்ல. என்ர சூழ்நிலைக்கு ஏற்பதான் நான் முடிவெடுப்பன் என்று முகத்தில் அடிப்பதுபோல வார்த்தைகளால் அடித்தாள் ஜனனி. <br /><br />ஜனனி.. நீங்க ஏதோ குழப்பத்தோட இருக்கிறீங்க என்று நினைக்கிறன். மேலும் மேலும் பேசி உங்கட வெறுப்பை சம்பாதிக்க விரும்பல்ல. நேற்று வரை என்னைக் காதலிச்ச ஜனனியா இப்ப பேசுறது என்று எனக்கே சந்தேகமா இருக்குது. நீங்கள் எதையும் பேசுங்கோ உங்களுக்கு என்னைப் பேச உரிமை இருக்குது. ஆனா உங்களைத் தவிர எனக்கு ஒரு வாழ்க்கை இல்லை. அதுதான் என் தெளிவான நிலைப்பாடு என்றான் ஜெகன் உறுதியோடு. <br /><br />அப்படியா சங்கதி.. நீங்க இப்படி புலம்பிக் கொண்டு இருப்பீங்க என்றதுக்காக நானும் இருப்பன் என்று நினைக்காதீங்க. நான் சந்தர்ப்பம் கிடைச்சா இன்னொருவரை மணக்கவும்.. ஏன் காதலிக்கவும் அவர் கூட வாழவும் தயங்கமாட்டன். எனக்கு தேவையென்று படுறதை நான் யாருக்கும் எதுக்கும் பயப்பிடாமல் செய்வன் என்றாள் ஜனனியும் பதிலுக்கு. <br /><br />அது உங்கட விருப்பம். எங்கட காதலை உதறித்தள்ளுறதும் என்னை வருத்திறதும் தான் உங்களுக்கு சந்தோசமென்றால் அதை தாராளமாச் செய்யுங்க. அப்படியாவது உங்களை சந்தோசப்படுத்தின திருப்தில என் வாழ்க்கை என்னோட தனிமையில போயிட்டு இருக்கும் என்று தெளிவாகச் சொன்னான் ஜெகன். <br /><br />அதற்கு மெளனத்தைப் பதிலாக்கி.. எனக்கு ரைம் ஆச்சுது என்று கூறி விடைபெற்றாள் ஜனனி..! <br /><br />அதன் பின் அவளைக் காண்பதே அரிதாகி விட வேதனைகளோடு தனிமையில் வாழ்க்கையை ஓட்டிய ஜெகன்.. சில ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அவளை அவள் குழந்தையோடு கொழும்பின் பிரதான நவீன சந்தையில் கண்டான். அப்போது ஜனனி வெளிநாட்டில் இருந்து வந்த மணமகன் ஒருவரின் மனைவியாக அழகிய பெண் குழந்தை ஒன்றுக்கு தாயாகி தாயக மண்ணில் சுற்றுலாவுக்காக வந்திருந்தாள். <br /><br />அவளைக் கண்டதும் இதயம் இழகி கண்கள் பனிக்க.. கண்களால் மட்டும் பேச முடிந்த சோகத்தை வெளிக்காட்டி.. தூர நின்றே அவதானித்து விட்டு.. அவள் கண்களில் படாமல்.. அவன் நினைவுகளை அவள் கிளறிடாமல் இருக்க தன்னை அவள் கண்களில் இருந்து மறைத்து அவ்விடத்தை விட்டே நகர்ந்தான்... அன்று அவள் போட்ட புதிருக்கு விடை கண்டவனாய்..ஜெகன்..! <br /><br /><strong>ஆக்கம் தேசப்பிரியன்.</strong>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18859690.post-1166157611288021822006-12-15T04:38:00.000+00:002007-12-25T19:37:40.811+00:00இதய அஞ்சலி...<a href="http://photos1.blogger.com/x/blogger/120/209/1600/324863/Balasingham.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/120/209/320/927095/Balasingham.jpg" border="0" alt="" /></a><br /><br /><strong><em>தேசம் <br />அதன் தோற்றமிழந்தது <br />நேசம் <br />அதன் உயிர்ப்பிழந்தது <br />பாசம் <br />அதன் கட்டிழந்தது <br />நெஞ்சம் <br />அதன் துடிப்பிழந்தது <br />உரிமை <br />அதன் ஒலியிழந்தது <br />விடுதலை <br />அதன் கீற்றிழந்தது <br />வீரம் <br />அதன் பேச்சிழந்தது <br />அரசியல் <br />அதன் ஆசான் இழந்தது <br />தலைவன் <br />தன் தோழமை இழந்தான் <br />தமிழினம் <br />அதன் தூணிழந்தது <br />தமிழீழம் <br />அதன் மகவிழந்தது <br />பாலா அண்ணா எனும் <br />போராளி <br />ஜீவன் இழந்ததால்.....!</em></strong>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18859690.post-1164200527496823532006-11-22T13:00:00.000+00:002007-12-25T19:38:10.166+00:00ஆணியம்.<a href="http://photos1.blogger.com/blogger/120/209/1600/dream.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/120/209/320/dream.jpg" border="0" alt="" /></a><br /><br /><em>மாதா பிதா குரு தெய்வம் <br />முன்னிலை இழந்தது ஆணியம் <br />தாய் நாடு <br />தன்னிலை இழந்தது ஆணியம் <br />கருப்பையில்லா உடல் <br />உயிரின் உன்னத <br />இயல்பு இழந்தது ஆணியம் <br />தாயைப் போல சேய் <br />அடையாளம் இழந்தது ஆணியம் <br />மொத்தத்தில்... <br />தங்கு நிலையில் <br />தொங்கி வாழுது ஆணியம். <br /><br />திடம் படு தோள் <br />திமிரிரு ஆண்மை <br />வீர வசனங்கள் குறைசலின்றி.. <br />தோளின் வலு <br />சுமையோ தாங்க முடியாது <br />திணறியே போகுது <br />திறனிழந்த நெம்பாக <br />துணையிழந்த <br />ஆணியம். <br /><br />பூமிதனை மிதிக்காமல் <br />பெண்ணினந்தான் வாழ்ந்திடுமோ? <br />பூப்பாதம் என்ன <br />பூம் பஞ்சால் ஆனதுவோ <br />தசையும் எலும்பும் <br />45 முதல் 100 கிலோ.... <br />பெண்ணே பெண்ணை மிதிக்கும் <br />கொடுமை காண மறுக்கும் <br />குருட்டு <br />ஆணியம். <br /><br />கங்கை <br />சரஸ்வதி <br />காவேரி <br />வற்றுதல் உயிர்க்கு இழப்பு <br />பூமிக்கு வறட்சி. <br />பெண்ணின் அன்பு <br />பெண்ணிய மமதையில் <br />மங்குதல் வற்றுதல் <br />மனிதர்க்கு அழிவு. <br />உண்மை உணராது <br />பேதமையில் ஊளையிடும் <br />கொல்லை நரிகளாய் <br />இன்னும் <br />ஆணியம். <br /><br />அறிவுப் பசிக்கு <br />அறிவூட்டும் அப்பாவும் <br />அம்மா அடிக்கையில் <br />இழுத்தணைக்கும் தந்தையும் <br />பாசமலர்களாய் <br />அண்ணனும் தங்கையும் <br />பெண்ணியப் பார்வையில் <br />கொடுமைகள். <br />பூம் பூம் தலையாட்ட <br />துணை போகும் <br />ஆணியம். <br /><br />தன்னிலையிழந்து <br />துணையவளே தூண் என்று <br />வாழும் கணவனும் <br />தானே அவளென்று <br />தன்னவளில் <br />தன்னையே அர்ப்பணித்த <br />காதலனும் <br />பெண்ணியப் பாசையில் <br />வேஷங்கள். <br />கோலங்கள் அறிந்தும் <br />பெண்ணியக் <br />கொடுமைதனை உணராத <br />உணர்விலிகளாய் இன்னும் <br />ஆணியம். <br /><br />கருவறுக்கும் செயலும் <br />விபச்சாரக் களவொழுக்கமும் <br />கற்பென்ன நெறியா <br />மண்ணாங்கட்டி <br />ஆணுக்கெங்கே கற்பு <br />இல்லையே என்று <br />போலியாய் சாதித்து, <br />பெண்ணின் மிருக உணர்வுகள் <br />வழிந்தோட வழிவிடு.... <br />கலாசாரம் என்று <br />தடைகள் ஏன் அதற்கு??! <br />தறிகெட்டு கூத்தடிக்க <br />தா சுதந்திரம்... <br />பெண்ணியப் பாசையில் <br />இவையெல்லாம் விடுதலை. <br />விடுதடையில் <br />குளிர்காயக் <br />காத்திருக்கும் கழுகுகளாய் <br />கேடு கெட்ட ஆணியம். <br /><br />சமூகத்தில் <br />வீட்டில் <br />மூலைக்கு மூலை <br />வன்முறைகள் <br />ஆணுக்கும் பெண்ணுக்கும் <br />அங்கே சம பங்கு. <br />மனிதராய் <br />பெண்ணுக்கும் ஆணுக்கும் <br />மனித உரிமைகள் சமம். <br />பாவம் உணர்விருந்தும் <br />அறிவிழந்த பெண்ணியம் <br />உண்மைகள் <br />உணர மறுக்கிறது. <br />அன்பிழந்து <br />புரிந்துணர்விழந்து <br />தாண்டவக் கோலம் போடுது <br />துணையாக ஊழியக் கூத்து <br />ஆடுது ஆணியம். <br /><br /><br />வீரியம் பேசியே <br />வீணடிக்கும் காலம் <br />வீணாப் போகுது வாழ்க்கை <br />தொலைத்ததை எண்ணி <br />கலங்காத ஆணியம் <br />பெண்ணியம் என்ற <br />மமதைக்கு மகுடி ஊதுது. <br />சீறிப்பாயும் நச்சுப் பாம்பை <br />அடக்க நினைக்கும் <br />அற்ப சிந்தனை. <br /><br />ஆணிற்கு ஆதிக்கம் <br />பெண்ணிற்கு அடிமைத்தனம் <br />இது காலத்தால் புனைந்த <br />அழகிய புனை கதை. <br />உயிர்க்குள் எங்கே <br />ஆண் என்றும் பெண்ணென்றும் <br />வேற்றுமை <br />உடலால் மட்டும் சில மாற்றங்கள் <br />கண்டுணர்ந்து புரிந்து கொள்வீர். <br />உரிமைகள் மதித்து <br />உணர்வுகள் புரிந்து <br />வாழப் பழகுவீர். <br />ஒழுக்கமும் நீதியும் <br />உயிர்க்கு இரு நாடிகள். <br />நாடிகள் தானிழந்து <br />மனிதராய் வாழுதல் முடியுமோ??! <br />அன்பைத் தொலைத்து <br />ஒரு மனிதமா? <br />பெண்ணியமே ஆணியமே <br />தமிழகராதி கொண்டிராத <br />அற்ப பதங்களே <br />சிந்திக்க..ஓர் கணம்...!</em>kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.com0