Wednesday, November 26, 2008

வாழ்த்தடா வாழ்த்து.. வாழ்த்தும் போதே வீரம் வரும்.



அண்ணன் என்று சொல்லடா
தமிழ் மன்னன் என்று சொல்லடா
பிரபாகரன் எனும்
தமிழ் வீரனை..!

அவன் பேச்சில் ஒரு மூச்சடா
மூச்சில் கூட தமிழடா
தமிழ் மானம் காக்கும் வீரம்
அவன் தோள்களில்..!

படை நடத்தும் சிங்களம்
பதறிப் போகும் பாரடா
அண்ணன் படையின் வீரம்
மாழ்வதில்லை கேளடா..!

சண்டைக்களத்தில் அவன் வாழ்வடா
சாவுக்கும் அஞ்சாத வீரன்டா
தமிழ் மானம் அவன் உயிரடா
சயனைட் காவும் தோழன்டா..!

அண்ணன் தலைமையில்
வேங்கைகள் பாரடா..
தமிழீழத்தின் மலர்வடா
வெறும் கைகளில் இல்லையடா
உணர்ந்தும் நீயும் நில்லடா
அண்ணன் வழியில் கரங்கோர்த்தே..!

வாழ்த்தடா வாழ்த்து
அண்ணனை வாழ்த்து
54வது அகவையில் வாழ்த்து
வாழ்த்தும் போதே
வீரம் வரும்...
விழித்தெழுந்து நடவடா
அண்ணன் பாதையில்
தாய் மண்ணை மீட்க..!


நன்றி யாழ் இணையம்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in