Friday, December 15, 2006

இதய அஞ்சலி...



தேசம்
அதன் தோற்றமிழந்தது
நேசம்
அதன் உயிர்ப்பிழந்தது
பாசம்
அதன் கட்டிழந்தது
நெஞ்சம்
அதன் துடிப்பிழந்தது
உரிமை
அதன் ஒலியிழந்தது
விடுதலை
அதன் கீற்றிழந்தது
வீரம்
அதன் பேச்சிழந்தது
அரசியல்
அதன் ஆசான் இழந்தது
தலைவன்
தன் தோழமை இழந்தான்
தமிழினம்
அதன் தூணிழந்தது
தமிழீழம்
அதன் மகவிழந்தது
பாலா அண்ணா எனும்
போராளி
ஜீவன் இழந்ததால்.....!

2 comments:

லக்கிலுக் said...

உங்களது கண்ணீரை நாங்களும் பகிர்ந்துக் கொள்கிறோம்.

kuruvikal said...

சோகத்தின் சூழலில் தோழமை கொண்ட தோழனே..தோள் கொடுப்போம் உலகில் தமிழர் எம் விடுதலையைத் திரிதப்படுத்தவே.

வரவுக்கு நன்றிகள்.

நட்புடன் குருவிகள்.