வெந்தனல் மீதினில்
புலி போனது
செந்தனலானது விழிகள்
சுந்தரத் தமிழீழமதில்
சிங்களம் ஆடுது போர்வெறி..!
சரித்திரம் படைத்திடும்
இது தமிழ் இனம்
சிங்களச் சேனைகள்
சிதறிடும் வேளையில்
சிரிப்பின் செல்வனே
தமிழ்ச்செல்வா
நீ இன்னும் சிரிப்பாய்..!
மில்லர்
திலீபனுடன்
ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்
உன்னுடன்
விடியலின் வேளையில்
தமிழீழ தேசத்தின்
ஒளிர்வதில்
தங்க மேனிகளாய்
மிளிர்வீர்கள்...!
தமிழ் பிஞ்சுகள்
நெஞ்சுகள் சுமந்திடும்
நினைவுகள்
தாங்கிடும்
வேங்கைகள் உங்கள்
வீர நினைவுகள்.
மரணத்தின் பின்னொரு
வாழ்வது காண்பீர்
தாயக விடுதலையின்
புனித பயணத்தில்
பாதையில் வித்தான
மாவீரர்களே...!
உறங்குங்கள் இன்று
தமிழர் வீர வரலாறு
காவியமாகிடும்
வேளையில்
மீண்டும்
துயில் எழுப்புகிறோம்
வீர பரணி பாடியே..!
Saturday, November 03, 2007
வெந்தனல் மீது வேங்கை போனது....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உணர்வுமிக்க வரிகளால் அஞ்சலி செய்திருக்கிறீர்கள்.
வீரவணக்கங்கள்.
Post a Comment