1. தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றவர் ஈ வெ ராமசாமி என்ற கன்னட தேசத்தைச் சேர்ந்த பெரியார். தமிழ் மொழியைத் திட்டியதைத் தவிர அதன் வளர்ச்சிக்கு அவசியமான எந்தச் சீர்திருத்தங்களையும் முன்மொழியாமை மற்றும் அதற்காக பாடுபட முன் வராமை. (தனது பத்திரிகை விளம்பரத்துக்காக தமிழன்பர்கள் கூடி எடுத்த தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பதை மொழி வளர்ச்சி என்ற நோக்கற்று தனது பத்திரிகை வளர்ச்சிக்காக பயன்படுத்தியதோடு மட்டும் தூங்கிவிட்டமை இதற்கு நல்ல உதாரணம்.)
2. தமிழர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று உலகில் எல்லா மனிதருக்கும் உள்ள பகுத்தறிவைக் கூட பெரியார் தமிழர்களுக்கு வழங்க மறுத்தமை.
(இக்கூற்றிக்களின் மூலம் தமிழ் மொழியின் தமிழர்களின் தொன்மையை அழித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி ஆதிக்கங்களினை அனுமதித்து தமிழர்களின் மொழி அடையாளத்தை சிதைக்க முனைந்தவர்.தமிழகத்தில் தமிழ் வழக்கொழிதலைத் தூண்டியவர்.)
3. தமிழ் இனத்தின் தமிழ் தேசிய இருப்பை தமிழர்களின் தனித்துவத்தை திராவிடப் போர்வை கொண்டு அழிக்க முனைந்தமை.
4. தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தன்மை, அவர் இந்திய உபகண்டத்தில் தமிழ்களுக்கு என்ற ஒரு நில இருப்பை அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய நில இருப்பை அவர்களின் சிந்தனையில் இருந்தே அழிப்பதற்கு சமனானது.
5. தன் கூட்டத்தில் இருந்து கொள்கை முரண்பட்டு விலகிய அண்ணாவை பண ஆசை பிடித்த ஒருவன் என்று விமர்சித்தமை. அரசியல் ரீதியாகக் கூட தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அண்ணா தமிழர்களுக்கு என்று தனிநாடு கேட்பதைக் கூட எதிர்த்து நின்றவர். தமிழகத்தில் தமிழ் மொழியின் முதன்மைத் தன்மையை சிதைக்க முனைந்த ஹிந்தி திணிப்பை எதிர்க்க மறுத்தமை.
6. பெண்களின் கர்ப்பம் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கூறி.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி தமிழர்களின் இன விருத்திக்கு சாவு மணி அடிக்க முனைந்தமை.
7. தமிழ் மக்களின் உயர்ந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் ஒருவனுக்கு - ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை சிதைக்கவல்ல கருத்துக்களை "பெண் விடுதலை" என்று காட்டியபடி தமிழர்கள் மத்தியில் சமூக விரோத, மனித இன விரோத கருத்துக்களை விதைத்து.. விலங்குத்தனமான, எழுந்தமானமான ஆண் - பெண் பாலியல் புணர்வை வழியுறுத்தி.. தமிழ் சமூகத்தின் இருப்பையே கொடிய பால்வினை நோய்களைப் பரப்பி.. அழிக்க முயன்றமை.
8. தமிழ் மொழியின் தொன்மை.. இலக்கணக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இலக்கியங்கள் மீதும்.. தமிழ் இலக்கண, இலக்கிய கர்த்தாக்கள் மீதும் பார்பர்ன.. இந்துத்துவ.. சாதிய சாயங்களைப் பூசியமை.
9. பிராமணர்கள் மீது எதிர்ப்பென்று தமிழர்களிடையே பிராமண வர்க்க இருப்பையும்.. ஏனையவர்களை அவர்களுக்கு எதிராகவும் தூண்டி சமூக வன்முறைத்தனமான நிலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டமை. அதன் தொடர்ச்சியாக மறைமுகமாக சாதிய இருப்பை தமிழகத்தில் தக்க வைத்தமை. அதைக் கொண்டு தமிழகத்தில் சமூகப் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பிரித்தாண்டு.. சாதிய அரசியலுக்கு வித்திட்டமை. தமிழர்களிடையே தமிழின ஒற்றுமையை இல்லாமல் செய்தமை.
10. தனது திராவிடக் கொள்கையின் கீழ் தமிழகத்தின் தோற்றம்.. இருப்பு என்பதை.. இல்லாமல் செய்து தமிழர்களை திராவிடர்களாக்கி.. அவர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திராவிட அடையாளங்களாகக் காட்டி.. தமிழினத்தினதும் அதன் தேசியத்தினதும் இருப்பை.. அழிக்கும் வகையில் சமூகத்தில் மேற்குலக சமூக விரோத சிந்தனைகளை பகுத்தறிவு என்ற பெயரில்..கட்டவிழ்த்து விட்டமை.
உண்மையாக தமிழர்களுக்கும்.. ஒட்டுமொத்த மனித இனத்துக்குக்கும் அவசியமான அறிவியலை தமிழகத்தில் வளர்க்கவோ இனங்காட்டவோ முனையாமை.
இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் ஏனைய மத ஆதிக்கங்களினால் சிதைந்து கொண்டிருந்த தமிழழிவை ஊக்குவித்து.. சைவத்தால் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழியின் வளர்ச்சியை இல்லாமல் செய்ய முற்பட்டமை.
"தமிழ் தேசிய விரோதி ஈ வெ ராவை இனங்காண்போம்" என்ற விழிப்புணர்வை முன்வைத்து.. சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக இப்பதிவு இடப்படுகிறது
Monday, October 08, 2007
பெரியார் ஒரு தமிழ் இன விரோதி - ஆதாரங்கள் 10
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
Vayasaana kaalathulayum...chinna ponna kannalam katti...morality illatha...ivana..naanga ellam Periyaan....appadithaan koopiduvom....inime Periyaan...apadi podunga...Periyar nu mariyathai ellam vandam...
ஹைய்யா! ஆதாரம் கிடைச்சிருச்சு....
ஆதாரம் கிடைச்சிருச்சு.... வாங்க நம்ம தலையிலயே நாம் மண் அள்ளிப் போட்டு விளையாடுவோமா? ஹைய்யா! ஹைய்யா!
பகுத்தறிவற்ற வெற்றுத் தமிழ் தேசியம் பேசி வீணாகாதீர்கள்!
நல்லாச் சொன்னீர்கள். பெரியார் புகழ்பாடுபவர்கள் வாசிக்க வேண்டிய விடயம்.
குருவிகள் அய்யா,
எனக்கென்னவோ தாடிக்காரன் சொன்னபடி இந்த திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தமிழ் கும்பல் பகுத்தறிவற்ற மூர்க்க கும்பல் என்று தான் தோன்றுகிறது.இல்லையென்றால் இந்த தாடிக்கார அயோக்யனை தமிழர் தந்தை என்று சொல்லிக்கொண்டு திரிவார்களா?
பாலா
பகுத்தறிவு என்று எதனை வரையறுக்கிறீர்கள்.. எந்த வகையில்..
காரணம் அறிவியல் உலகம் மனிதனையே பகுத்தறியும் அற்றலுள்ள விலங்காகவே இனங்காண்கிறது.
சும்மா பகுத்தறிவு என்று.. இந்துக் கடவுள்கள் மீதும் பிராமணர்கள் மீதும் தமிழ் மொழிமீதும்.. இலக்கியங்கள் மீதும் இலக்கணகர்த்தாக்கள் மீதும் காழ்புணர்ச்சிகளைக் கொட்டுவது தானா ஈ வெ ராமசாமியின் பகுத்தறிவு.
அப்படியென்றால் அதை ஒன்றே குப்பையில் போடுங்கள்.
ஈழத்தில் இந்தப் பகுத்தறிவு பேசாமலே மக்கள் பகுத்தறிவோட இருக்கிறார்கள். உலகில் பல நாடுகளில் இருக்கிறார்கள்.. ஏன் தமிழர்கள் மட்டும் இன்னும் கன்னடனின் பின்னால் அலைகிறார்கள்.
பெண் விடுதலையை பாரதி இனங்காட்டவில்லையா..??! சமூக விடுதலையைக் காட்டவில்லையா..??! அதேவேளை அவன் தமிழ் மீதும் பற்றுறுதி கொண்டிருக்கவில்லையா.. இப்படிப் பல தலைவர்கள்.
அவர்கள் சொன்னவை பகுத்தறிவில்லையா.. ஆக ஈ வெ ராமசாமி கொட்டிய காழ்புணர்சிகள் தான் பகுத்தறிவா..?!
முதலில் நீங்கள் வரையறுத்துள்ள பகுத்தறிவுக்கு வரைவிலக்கணம் செய்யுங்கள். பின்னர் பேசலாம் மிகுதி.
அதுதான் மக்களுக்கு கருத்துக்கள் சென்றடைய சரியான வழிவகையில் முயற்சிப்பதாகும்.
உங்கள் அனைவரினதும் கருத்துக்களுக்கு நன்றி.
80% of ur statements are true
நன்றிகள் சதுக்க பூதம் உங்கள் கணிப்பு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த ஆதாரங்கள் பல தரப்பட்ட ஆக்கங்கள் விமர்சங்களில் இருந்து இளையோரால் தொகுக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் சிந்திக்க வேண்டும் சுயமாக என்ற நோக்கில்.
மக்களை இன்னொருவரின் கருத்தால் வழிநடத்துவதிலும்.. மக்கள் காலத்துக்கு ஏற்ப தாமாக சிந்திக்க திசைப்படுத்தப்படுதலே மக்களின் இனத்துவப் பரிமானங்கள் உலகில் இனங்காட்டப்படவும் மக்கள் வளர்ச்சிப் பாதை நோக்கிப் பயணிக்கவும் வகை செய்யும்.
பகுத்தறிவென்று எவரோ கொட்டிய 60 ஆண்டு காலப் பழமைகளை காவித் திரிவதில் எந்தப் பயனும் ஏற்பட்டதாக இல்லை. அதற்கு மாறாக அறிவியல் வளர்ச்சியே மனிதனை மக்களை நாகரிக உச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு இந்தப் "பகுத்தறிவு" எந்த வகையில் உதவுகிறது. மாறாக சமூகச் சீரழிவுகளை வளர்த்து மக்கள் அறிவியல் மயமாவதைக் கூட தடுக்க முயல்கிறது. அவர்களின் எண்ணங்களை குறுகிய வட்டத்துக்குள் சுழலச் செய்து.. சிலரின் தேவைகளை பூர்த்தி செய்ய காலங்காலமாக அனுமதிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் தமிழக மக்கள் மத்தியில்.
பெரியார் இல்லையென்றால் தமிழ் செத்திருக்கும் .
context புரியாமால் எழுதியுள்ளிர்கள்,அவரது வார்த்தைகள் கால அளவையால் அளக்கப்பட்டு புரிதல் வேண்டும்.
ஈ வெ ராமசாமியை ஒரு பெரிய சமூகவியலாளராக என்னால் இனங்காண முடியவில்லை.
கள்ளைக் குடிக்காதே தென்னையைத் தறி என்றவர் பிற்பாடு கள்ளச் சாராயத்தை தடுக்க கள்ளைக் குடி எங்கிறார். இப்படிப்பட்ட ஒருவரின் கருத்தில் ஆழம் இருந்திருக்கும் என்று நினைக்கவில்லை.
மாறாக நாம் தாம் அவற்றில் ஆழம் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி மக்களை மேய்த்துக் கொண்டிருக்கிறோம் காலம் காலமாக. அந்த நிலை மாறி மக்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வழிகாட்டல்கள் செய்யப்பட வேண்டும்.
அதையே சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் செய்ய விளைகின்றோம்.
நாம் அநாவசியமாக ஈ வெ ராமசாமிக்கி அளிக்கும் முக்கியத்துவத்தை தவிர்த்து இக்கால தமிழகத்துக்கும் தமிழ் இனத்துக்கும் எது அல்லது எவை அவசியமோ அதையே முன்னிலைப்படுத்தச் சொல்கின்றோம்.
மக்கள் 60 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையைக் கடந்து 21ம் நூற்றாண்டில் 22இன் வளர்ச்சியை எப்படித் தீர்மானிப்பது என்று சிந்திக்க வேண்டிய நிலையில் நிற்கின்றனர். அதற்கு அறிவியல் தான் உதவ முடியும். சமூக விழுமியங்கள் தான் மக்களை ஒழுக்கமுள்ள நிலைக்குள் வைத்து இதைச் சாதிக்க உதவும்.
உங்கள் பலரினதும் பல தரப்பட்ட விமர்சனங்கள் நன்றியோடு வரவேற்கப்படுகின்றன.
நன்றாக எழுதியுள்ளீர்கள். இதனைப் பார்த்தாவது உண்மையைப் புரிந்து கொள்ளட்டும், அந்தப் பகுத்தறியும் தன்மையில்லாதவர்கள்.
பின்னூட்டல் பதிவுகளால் தங்கள் விமர்சனங்களை இட்டவர்களுக்கு நன்றிகள்.
தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
தமிழ்மண விதிக்கமைய மட்டுறுத்தல் பரிசோதனைக்கு உட்பட்ட பின்னர் அவை எவ்வித தயக்கமுமின்றி இங்கு அளிக்கப்படும்.
நன்றிகள்.
பெரியார் மாதிரி சீர்திருத்தவாதியை தவறாகப் பேசாதீர்கள். மற்றவர்களுக்கு சொன்னதை தானே நிறைவேற்றிக் காட்டினார் அக்கிழவர்.
70 வயதுக்கு மேல் திருமணம் செய்தாயிற்று. பெண்ணுக்கு வயது 30 - களில். கிழவரால் என்ன சுகம் தர இயலும்? திருமணம் என்னவோ சொத்தை இயக்கத்துக்காகக் கட்டிக் காப்பதற்கென்றுதான் நடந்தது. ஆகவே பெரியார் அவர்கள் மணியம்மைக்கு வீரமணியை ஏற்பாடு செய்வித்தார் என்று தெரிகிறது. இது ஒன்றும் நம்ப முடியாதது அல்ல. அது பெரியாரின் நேர்மையையே காட்டுகிறது.
பெண்ணும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என அவர் ஏற்கனவே கூறியதுதானே? அது சம்பந்தமாக அவர் மனைவி நாகம்மையிடம் செல்லலாமா என ஒருவர் கூட்டத்தில் கேட்டதற்கு, "இப்பவே வாங்க, நாகம்மை கிட்ட அழச்சிட்டு போறன். அவங்க கொடுக்கறதை ரெண்டு பேருமே வாங்கி வருவோம்" என்றும் பெரியார்தானே கூறினார்?
ஆக இதில் ஒன்றும் தவறில்லை. பெரியார் நேர்மையாளரே. அவர் பெயர் வாழ்க.
பெரியார்தாசன்
அய்யா குருவி இப்ப இது அல்ல பிரச்சனை பெரியார் பெயரை சொல்லி யார் பெரியார் அதாவது பெரியவர் ஆகிறதெண்டு தான் பிரச்சனை முடிஞ்சா அதுக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கோ
அட அதுவா இணையத்தில் எல்லாரும் ஈ வெ ராமசாமிட இடத்தை நிரப்ப போட்டி போடினம்.. ம்ம் நடக்கட்டுக்கட்டும். எல்லாம் அரசியலுக்கும்.. புகழுக்கும் தான் போல. தமிழன் விழிக்கும் வரை.. இவையும் தொடர்வினம்.
எனியும் மக்களை ஏய்க்க அனுமதிக்கக் கூடாது. அவர்களை சுயமா சிந்திக்க தூண்ட வேண்டும்.
நன்றி உங்கள் அனைவரினதும் கருத்துக்களுக்கு.
நல்ல பதிவு. ஈவேரா தமிழ் சமூகத்திற்கும், தமிழ் மொழிக்கும் துரோகி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
'திராவிட' என்ற சொல் காலனிய ஆரிய-திராவிட இனவாதத்தை உருவாக்கிய கால்டுவெல் பாதிரியால் திரிக்கப் பட்டது. அதனால் மூளைச் சலவை செய்யப் பட்ட ஈவெரா அதை ஏற்றுக் கொண்டார். அவ்வளவே.
இந்தச் சொல்லின் உருவாக்கம் -
தமிழ - த்ரமிள - த்ரமிட - த்ரவிட.
தமிழ் என்பதன் ப்ராகிருத, சம்ஸ்கிருதத் திரிபே இந்தச் சொல். அதனால் திரவிட என்பது தமிழருக்கு எதிர்மறையான ஒரு பதம் அல்ல.
பாருங்கைய்யா...தாடிக்கார கிழவன் செத்தபிறகும் உம்மைப் போன்ற தொடை நடுங்கிகளையெல்லாம் புலம்ப வெச்சிட்டிருக்கான் பாரும்....அந்த பொக்கை வாய் கிழவனுக்கு ஜே....
கதிரவன்
நன்றி ஜடாயு.
"திராவிடம்" என்ற பதம் தமிழின் பிறமொழித் திரிபாகி வந்திருக்கலாம்.
ஆனால் இன்று "திராவிடம்" என்பது தமிழ் இனத்தின் தனித்திருப்பை மறைக்கச் செய்ய பயன்படுகிறது.
"திராவிட" மொழிப்பாகுபாடு என்பது தமிழ் மொழியினதும் இனத்தினதும் தொன்மைக்கு விடப்பட்ட மிகப் பெரிய சவால்.
தமிழகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் இல்லை. ஆனால் திராவிடக் கட்சிகள் உள்ளன. பிற தென்னிந்திய மாநிலத்தவரும் தம்மை "திராவிடர்" என்று வரையறுத்துக் கொண்டாலும்.. அவர்கள் மொழி ரீதியா கட்சி ரீதியா அதனை வெளிப்படுத்தாது தமது மொழி தனித்துவத்தை இனத்தனித்துவத்தை தக்க வைக்க முயல்கின்றனர்.
பெயரிடுதலில் இருந்து அனைத்திலும் ஆந்திரக்காரர்களை.. கன்னடர்களை.. கேரளத்தவர்களை அடையாளம் காணலாம். ஆனால் தமிழர்களுக்கு அப்படி ஒரு அடையாளமேயில்லாமலே போய் விட்டது.
தமிழ் மன்னர்களின் சாம்பிராச்சிய வீழ்ச்சியின் பின்னர் தமிழர்களுக்கான நிலம் என்பது இந்திய உபகண்டத்தில் இந்தியத் தேசியத்தால் சூறையாடப்பட்டுள்ளது. எனது கருத்து இந்திய தேசியத்துக்கு எதிரானதல்ல. ஆனால் இந்திய தேசியம் தமிழர்களின் நில இருப்பை பறித்து.. அல்லது பிரித்து வழங்கி.. தமிழர்களின் பாரம்பரிய நில அடையாளத்தைக் குறுகச் செய்துள்ளது.
உலகில் இன ரீதியான பன்முகத்தன்மை ஐநாவால் கூட அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் இந்திய தேசியத்தை ஏற்று இந்தியாவில் வாழ விரும்பினும்.. மற்றைய இன மக்கள் போல தனி அடையாளங்களை தமிழ் தேசிய இனம் என்ற வகையில் பரிகரிக்க வேண்டியவர்களாக.. தமிழ் தேசிய இனம் என்ற அடிப்படையில் சாதி மதம் மாவட்டம் கோட்டம் என்ற சமூக மர்றும் நிர்வாகப் பிரிவினைகளுக்கு அப்பால் மொழித்தனித்துவம் காத்து விளங்க வேண்டும் என்பது முக்கியமானதாகும்.
தமிழர்கள் ஆங்கிலம் படிக்கட்டும். பிறமொழிகள் படிக்கட்டும். ஆனால் தமிழ் படிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒரு மனிதன் 8 மொழிகளை தாராளமாகக் கற்கக் கூடிய நிலையில் இருக்கிறான். ஆனால் ஒரு மனிதன் இன்ன இனக்குழுமத்தைச் சேர்ந்தவன் என்பதை அடையாளப்படுத்த அவனின் தாய் மொழிதான் பிரதானமானது. தமிழர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும்.. ஏன் ஹிந்தியும் படிக்கட்டும். ஆனால் தமிழை புறக்கணிக்க அனுமதிக்கக் கூடாது. அதேபோல் தமிழ் மொழியின் புராதனம் கெடாத வகையில் அது நவீன உலகுக்கு ஏற்ப தன்னுள் புதிய சீர்திருத்தங்களையும் கலைச் சொற்களையும் உயர் தொழில்நுட்ப வடிவங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தோடே தமிழர்களின் மொழி ஆற்றல்கள் ஆய்வுகள் வடிவமைப்புக்கள் நின்று விடுமானால் தமிழ் அநாதையாகி.. அழிந்து.. தமிழின அழிப்பு என்பது உலகில் இலகுவானதாகிவிடும்.
இது எமது இன நில இழப்பை.. அடையாள இழப்பை விரும்பி நிற்பவர்களுக்கு எதிர்காலத்தில் வசதியான நிலையை தோற்றுவித்திக் கொடுத்துவிடும்.
மொழியின் தொன்மையை.. அதன் இலக்கணக் கட்டமைப்பை.. பழிப்பது.. இலக்கணகர்த்தாக்கள் மீது பார்பர்னிய.. இந்துத்துவ சாயங்கள் பூசி காழ்ப்புணர்சி பாடிக் கொண்டு மொழியை புறக்கணிப்பது.. மொழியின் இருப்பை அழிக்கும் சதிகாரச் செயலாகவே நோக்கப்பட வேண்டும்.
பார்பர்னியத்தை இனங்காண்பதும் தவிர்ப்பதும் இலகு. ஆனால் மொழியின் இருப்பை இழந்து விடுவோம் என்றால்.. எதிர்காலத்தில் எமது தமிழினத்தின் இருப்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
ஐநா கூட எச்சரிக்கிறது பல மொழிகள் உலகில் வழக்கிழந்து கொண்டிருக்கின்றன என்று. அதற்கு ஆங்கில மொழி மோகமும் ஆங்கில மொழி அறிவியல் உலகில் செல்வாக்குச் செய்வதும் தொடர்பாடலில் செல்வாக்குச் செய்வதும் ஆங்கில மொழி உலகம் பொருளாதார அரசியல் இராணுவ பலமிக்கதாக இருப்பதும் முக்கியமான காரணி.
உயிரினங்கள் பல வகை. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனித்துவத்தோடு இந்த உலகில் கூட்டாக வாழ்கின்றன. அதேபோல் தான் மனிதர்களாக பேதங்கள் களைந்து ஒன்றிணையும் நாம்.. தனித்துவங்களை இழந்துதான் அதைச் சாதிக்க வேண்டும் என்றில்லை. தமிழன் என்ற தனித்துவத்தைக் காத்த படி.. நில இருப்பை.. பாரம்பரியத்தை அடையாளப்படுத்தியபடி.. நவீனத்தை தேவைக்கு ஏற்ப உள்வாங்கிய படி பிற மனிதர்களோடு மனிதத்தின் அடிப்படையில் கரங்கோர்த்து வாழ வேண்டும் இந்த உலகில்.
திராவிடம் என்ற கற்பனைக் கோணி மூட்டைக்குள் தமிழர்களையும் தமிழையும் அவர்களின் பாரம்பரியத்தையும் நிலத்தையும் அடக்கி.. தமிழர்களின் தனித்துவ இருப்பை பிற தேசியங்களால் சிதைப்பதை.. மதவாதத்தை.. சாதியத்தை உச்சரித்து தமிழர்களை பிளவுபடுத்தி பிரித்தாண்டு அரசியல் செய்வதை தமிழர்கள் தங்கள் தனி இனத்துவம் கருதி அனுமதிக்கக் கூடாது. தமிழ் தேசியத்தைக் காக்க இந்த வேறுபாடுகளை தூக்கி எறிந்துவிட்டு ஒரே கூரையின் கீழ் நெருங்கி வர வேண்டும்.
தமிழர்கள் நாம் எமது இனத்தின் வரலாற்று இருப்பைப் பற்றி நவீன அறிவியல் கொண்டு ஆய்வுகள் செய்து அதை பூரணப்படுத்த வேண்டிய நேரத்தில் யாரோ ஒரு கன்னடரின் பேச்சுக்கு செவிமடுத்து பார்பர்ன எதிர்ப்பு இந்து எதிர்ப்பு என்று தமிழர்களிடையேயே பிரிவினைகளை ஆழப்படுத்திக் கொண்டிருப்பது தமிழர்களையும் அவர்களின் நிலப்பிரிப்பையும் சாதித்து தங்களைப் பலப்படுத்த விரும்பும் சக்திகளுக்கு உதவுவதாகிவிடுகிறது. இது தமிழின அழிப்பை நாமே செய்யத் தூண்டுவதாகி விடுகிறது.
ஈழத்தமிழனையும் தென்னிந்திய பூர்வாகத்தமிழனையும் இன்று பிரிக்கும் சக்தி என்றால் அது இந்திய தேசியமும்.. திராவிட இருப்பும் தான். இவை எப்போ முளைத்தன. ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் பின்னரும். இவை எமது இனங்களின் தனித்துவ இருப்பை பறித்து இனங்களிடையே மோதலைத் தூண்டி.. தங்கள் பிராந்திய ஆதிக்கத்தை நிலைநாட்டுதல் என்ற மேற்குலக அரசியல் பொருளாதாரக் கொள்கையின் பின்னணியில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட சூழலால் தான்.
ஈழத்தமிழனும்.. தமிழகத் தமிழனும் இன்று ஒன்றிணைந்து தமிழன் தமிழ் தேசியத்தை நிலைநாட்டி இருந்தால் இந்திய தேசியமும்.. சிங்கள தேசியமும்.. சர்வதேசமும் எம் முன் மரியாதை செய்து நின்றிருக்கும். ஆனால்.. எம்மைப் பிரித்தாளும் தந்திரத்தை ஈ வெ ராமசாமி போன்ற பிராமண.. இந்து.. எதிர்ப்புக் கோசங்களை கொண்ட சமூக பிரிவினைச் சக்திகளை இயங்க அனுமதித்து அவர்களைப் பெரியமனிதர்களாக்கி எமது சமூகத்தைக் கூறுபோட்டு.. பகுத்தறிவு வாதி.. பகுத்தறிவற்றவாதி என்று மோதவிட்டு.. பலவீனப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் 75%க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். ரஷ்சியாவில் அப்படி. ஜேர்மனியில் அப்படி. இத்தாலியில் அப்படி. அவர்கள் மத எதிர்ப்பு.. மதப் பிரிவினை என்று எதையாவது முழங்கி தங்கள் சமூகங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனரா இல்லை. ஏற்றுக் கொண்ட மதக் கொள்கைகளை மனிதனை சமூக வாழ்வியலுக்குள் நிலை நிறுத்த பயன்படுத்திக் கொண்டு அறிவியலை வளர்த்து பொருளாதார சமூக முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர்.
நாமோ.. நீ பகுத்தறிவுவாதி நான் பகுத்தறிவற்றவாதி என்று மாறி மாறி சிலைகளுக்கு கல்லால் அடிக்கும் பகுத்தறிவற்ற மனிதருக்கு 1%தத்துக்கும் உதவாத செயலைச் செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழர்களிடையேயே.. நீ பார்பர்ன பிராமணன்.. நான்.. தலித்து என்று பிரிவினைகளை எதிர்ப்பது என்பதன் மூலம் அடையாளப்படுத்தி ஆழப்படுத்தி தந்திரமாக மோதவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழர்களும் தமிழர் நிலமும் பொருளாதார மற்றும் அரசியல் மேம்பாட்டையும் போது அறிவியல் தமிழர்கள் மத்தியில் பெருகும் போது இந்த வேறுபாடுகள் களையப்பட்டு விடும். மேற்குநாடுகளிலும் பணக்காரன் ஏழை என்ற பிரிவினைகள் இருந்தன. தொழில் ரீதியான பிரிவினைகள் இருந்தன. ஆனால் சட்டங்கள் மூலமும் எல்லோருக்கும் அடிப்படை பொருளாதார வசதி அளித்தல் என்ற அரசாங்க உதவித் திட்டங்கள் மூலமும் அவை களையப்பட்டன.
ஏன் இதை இந்த பகுத்தறிவுவாதங்களை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு.. திராவிடம் என்ற சொற்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் கட்சிகளை கலைத்துவிட்டு.. தமிழ் தேசியம் என்ற இருப்பின் கீழ் தமிழர்கள் மத்தியில் தமிழ் நாட்டில்.. ஒரு வளமான தமிழ் சமூகத்தை உருவாக்க முடியாது.
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான்.. ஈ வெ ராமசாமியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பகுத்தறிவு அணி பிரித்து கல்லெறியப் போறம்..????! சிந்தியுங்கள்.
அன்பின் குருவிகாள் நல்லதொரு பயன் தரு செடியொன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.எங்கள் தலையில் நாங்களே மண்ணள்ளிப் போடும் காரியம் முடிந்ததும் நட்டு வைத்து அழகு பார்க்கலாம்.
Wonderful article on DK fostering imperialism.
At the same time we should ensure social justice.
ஈழநாதன் நிச்சயமா ஈ வெ ராமசாமியை தமிழ் சமூகம் புறக்கணித்து விடுவதால் அதற்குள் ஒற்றுமை மிளிர்ந்து தமிழ் தேசியம் வளர்க்கப்படுமே அன்றி.. அவரைக் காட்டி சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தி அரசியல் நடத்துவது ஒழியும். மக்களை மதம் மற்றும் சாதிய வழியில் தூண்டி மோதவிட்டு பிரிவினைகளை ஆழப்படுத்தி அடுத்த நூற்றாண்டுக்கும் பகுத்தறிவென்று கோவில் சிலைகளுக்கு கல்லெறிதலை சொல்லிக் கொடுத்தலாவது நிச்சயம் இல்லாமல் போகும்.
அறிவியல் இந்தியாவை சந்திரனுக்கு அழைத்துச் செல்ல உள்ள நிலையில்.. பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் இன்னும் கோவில் விக்கிரகங்களுக்கு கல்லாலடித்தலைச் செய்தல் தானா.. தமிழகத்துக்கு அவசியம்..???!
சிந்தியுங்கள். தமிழக கிராமிய மக்களுக்கு அறிவியலை ஊட்டுங்கள். கோவில்கள் அனைத்திலும் இலவசப் பள்ளிகள் அமையுங்கள் பகுதிநேரமாக என்றாலும். செய்வினமா இந்தப் பகுத்தறிவுவாதிகள். இல்லவே இல்லை. மாறாக.. கோவில் சிலைகளுக்கு கல்லால் அடிக்கவும் பிராமணர்களை ஒழிக்கவும் கோசம் போட்டு சமூகப் பிரிவினைகளை வளர்க்கவும்.. தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழலைப் பேணி சாதி அரசியல் நடத்தவுமே இவர்கள் இந்தக் கோசத்தைப் பாவிக்கப் போகின்றனர். அதுதான் கடந்த 70- 80 வருடங்களாக நடந்தும் வருகிறது.
அயலில் சொந்த இரத்தம் ஈழத்தமிழன் மடியும் போதும் கூட கொலைகார அரசுகளுக்கு எதிராக ஒரு எதிர்ப்புக் குரலை கொடுக்க முடியாது.. வட இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் துன்பியலை அடுத்து அவரை தங்கள் தலைவன் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களிடம் எங்கே தமிழுணர்வும் தமிழின உணர்வும் தமிழ் தேசிய உணர்வும் போனது..??! ஈழத்தில் எத்தனையோ கொலைக்களங்களை திறந்த ஒருவரை தங்கள் தலைவன் என்று போற்றி கொண்டிருக்கும் தமிழகம் ஏன் ஈழத்தில் தன் சொந்தத் தமிழினம் சிங்கள மற்றும் இந்திய தேசிய பிராந்திய சக்திகளால் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதையிட்டு ஒரு உணர்வும் இன்றி இருக்கிறது. இதன் அபாயத்தையாவது அது உணர்கிறதா..??! இல்லை.
காரணம்.. அது திராவிட மூச்சுக்குள் தமிழின உணர்வை சாகடித்துவிட்டு தூங்கிக் கொண்டிப்பதால் கூட இருக்கலாம். அதற்கான வித்தை இட்டவர் இந்த ஈ வெ ராமசாமி உட்பட்ட சில குள்ளநரிச் சுயநல அரசியல்வாதிகளே..!
தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வு வலுவிழந்து போனதுதான் ஈழத்தில் தமிழர்களை சிங்களப் பேரினவாதிகளும் இந்திய தேசிய மத்திய ஆளும் வர்க்கமும் கொன்று குவிக்க ஏதுவானது. இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழகம் உறங்கப் போகிறது. தன்மீது கொலை வாள் விழும் வரையா..??!
பெரியாரை வைச்சு பிழைப்பு நடத்திறவங்க விடுவாங்கையா. ஓடிற நாய்க்கு கல்லால் அடிச்சாத்தாப்பா தமிழ் நாட்டில வீரன். பகுத்தறிவு.
Please read a book named "திராவிடத்தால் வீழ்ந்தோம்" by Guna. That book explained the impact of dravidanism on tamilnadu.
If you see the history of tamilnadu, after 15th century, telugu,maratti,kannada ruled tamilnadu and they grabbed lands from local tamils and redistributed to their people.Lots of zamindars,palayakararkal etc are developed with their people.Most of the wealth is transferred to them. "Dravidanism" is the way to maintain their superiority in tamilnadu. Brahmins socailly suppressed tamils but these dravidians economically supressed tamils
ஏலவே இதெல்லாம் விவாதிக்கப்பட்டுவிட்டது. மீளவும் செல்லடிக்க வேணாம். இப்படி எழுதுவதுதான் விளம்பர மோகம் என்றாகிப்போனது.
இதற்கு என் பதிவில் பதில் உள்ளது வாய்ப்பு இருந்தால் பார்க்க..
http://jamalantamil.blogspot.com/2007/09/blog-post_09.html#links
உங்கள் கருத்த முரண்பாடானது என்பதற்கு ஒரே ஒரு சான்று.. பெரியார் பிறக்காத தேசங்கள் அல்லது நாடுகளான ஈழம் மற்றும் தமிழகம் தவிர பிற மாநிலங்கள் எந்த அளவில் பகுத்தறிவிலும் பிறவற்றிலும் முன்னெறிவிட்டது என்கிற விபரத்தை தந்தால் நாங்களும் உணர்ந்தகொள்ள ஏதுவாகும். ஐயனைப் பின்பற்றி கல்லெறியலாம்தானே..
பெரியார் சுயமரியாதை தன்மானம் குறித்து அதிகம் பேசியவர். அது குறித்து அடுத்த செல்லடியை எதிர் நோக்கலாமா?
ஈழம் என்கிற கருத்துருவத்தில் சைவம் என்பது ஒரு உள்ளடக்கமாக ஆகிவிட்டால் அது வரலாற்றில் பெரிய சோகமாக மாறிவிடும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
மாலன் அவர்களே..
சுயமரியாதை தன்மானம் என்று எவற்றை வரையறுத்தார் பெரியார். இதனால் தமிழர்களும் தமிழகமும் பெற்ற கல்வி அறிவூட்டல் என்ன..??! பொருளாதார நன்மை என்ன..??!
தமிழ் தேசிய உணர்வை இது எந்த வகையில் வளர்த்தது..??! ஏன் திராவிடத்தை தமிழகம் முதன்மைப் படுத்துகிறது..??! இதற்குள் தான் தமிழன் என்பவனின் இனத்துவ சுயமரியாதையும் தன்மானமும் அடங்கி இருக்கிறதா..??! அப்படி என்றால் எந்த வகையில்..??!
இந்த சுயமரியாதையும் தன்மானமும் 21ம் நூற்றாண்டில் தமிழர்களை தயார்படுத்தி 22ம் நூற்றாண்டில் எப்படி செயற்பட வைக்கப் போகிறது உலக அரங்கில்...??! இதற்கு தமிழகத்தின் பங்கு என்ன..??!
ஈழத்தில் தமிழ் தேசிய உணர்வோடு.. ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்க ஏன் தமிழகம் தயங்க வேண்டும்..??! இதற்கும் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் ஏதாவது தொடர்பை காண்பித்திருக்கிறதா தமிழகம்..??!
தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் தானா..??!
ஓரிரண்டு குரல்களைத் தவிர ஏனைய தமிழ்மக்களின் குரல் ஏன் நசுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தமிழீழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறது..??! இன்னும் இந்திய தேசியத்துக்கு அடிபணிந்து தானே உள்ளது தமிழகம். அப்படி இருக்க.. இந்த சுயமரியாதையும் தன்மானமும் எதைக் குறித்து எழுந்து நிற்கிறது. தமிழர்களின் திராவிட அடையாளம் குறித்தும் பார்பர்ன பிராமண இந்து சமய எதிர்ப்பு குறித்து மட்டும் தானா..?!
ஏன் தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் இதர மதங்களை நோக்கி மக்களை அன்போடு வழி அனுப்பி வைக்கும் போது எங்கே போகின்றது இந்தச் சுயமரியாதையும் தன்மானமும் பகுத்தறிவும். அது ஏன் இந்து சமயத்தை மட்டும் கண்டவுடன் இவை விழித்துக் கொள்கின்றன. மற்றைய மதங்களை ஏன் மென்போக்கோடு அணுகுகிறது.
பகுத்தறிவுவாதிகள் எவராவது இறந்த மனிதன் ஜேசு உயிர்த்ததற்கு சான்று கேட்டிருக்கின்றனரா..??! அல்லா எங்கிருக்கிறார்.. அவருக்கு என்ன உருவம் என்பதற்கு சான்று கேட்டுள்ளனரா..??!
அதுவேன் பகுத்தறிவு இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகள் சமயம் மட்டும் சார்ந்து தானா எழுந்துள்ளது. வேறு வகைகளில் இல்லையா. ஏன் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளில் மூடநம்பிக்கைகள் இல்லையா..??! மத நம்பிக்கைகள் இல்லையா..??! அவர்கள் ஏன் அறிவியலை ஊட்டுகிறார்கள்.. பகுத்தறிவு என்பதையும் சுயமரியாதை என்பதையும் தன்மானம் என்பதையும் உச்சரிச்சுக் கொண்டு மத எதிர்ப்பை சமூக எதிர்ப்பைச் செய்யவில்லை..???!
இப்படி பல தொடரான வினாக்களுக்கு நீங்கள் விடை கூறத் தயாரா..??! சுயமரியாதை.. தன்மானம்.. பகுத்தறிவு என்பதன் பெயரால் தமிழகத்தில் இதுகால் வரை சாதித்தது என்ன..??!
சாதி ஒழிக்கப்பட்டதா..??! சாதிச் சான்றிதழ்கள் வழங்குதலை அரசு தடுத்ததா..??! சட்டத்தின் முன் சகலரும் சமன் என்பதை அரசு நடைமுறைப்படுத்தியதா..??! மக்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வுநிலையைப் போக்கி எல்லோருக்கும் எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததா..??! எல்லோருக்கும் கல்வி அறிவூட்டல் செய்ததா..??! அறிவியல் கல்வியை வழங்கியதா..?! மொழி சீர்திருந்தகளை செய்து தமிழை அடுத்த நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க தயார் செய்ததா..??! இல்ல ஆங்கிலத்தைப் படித்தால் போதும் என்றிருக்கிறதா..??! ஜப்பானியர்களும் சீனர்களும் ரஷ்சியர்கள் சொந்த மொழியில் தானே அறிவியலை கற்கின்றனர். ஏன் தமிழை அந்த நிலைக்கு முன்னகர்த்த முயற்சிக்கவில்லை..??! ஆங்கிலம் தான் அறிவியல் என்ற மாயை ஏன் வளர்க்கப்பட வேண்டும். ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு படிப்பது என்பது வேறு.. ஆங்கில நூல்கள் சொல்லும் அறிவியல் என்பதைப் பெறுவது வேறு.. தாய் மொழியை இகழ்வதும்.. அதன் இருப்பைக் கேலி செய்வதும் மிக மோசமான இனவிரோதச் செயற்பாடு.
பழம்பெரும் மொழிகலான கிரேக்கம்.. லத்தீன் இன்னும் அறிவியல் உலகில் அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றன. யாரும் அவற்றை காட்டுமிராண்டி மொழி என்று கழித்துவைத்துள்ளனரா..??! ஏன் தமிழின் சிறப்பை தொன்மையை அது தொலைத்து தமிழன் என்ற இன இருப்புக்கான மொழியடையாளத்தை தமிழர்கள் இழக்கச் செய்ய வேண்டும்..??! இதுதான் தமிழர்களுக்கு ஊட்டப்படும் பகுத்தறிவா..??!
ஏன் பார்பர்னக் கோட்பாடுகளைக் கொண்ட மக்களை இழிவு படுத்தி விரோதிக்க வேண்டும். அவர்களையும் அரவணைத்துக் கொண்டு தமிழர்களை ஏன் ஒற்றுமைப்படுத்தக் கூடாது. அவர்களோடு சிநேகித பூர்வமாக விடயங்களை கலந்தாலோசித்து சீர்திருத்தங்களை ஏன் கொண்டு வர முயலக் கூடாது. இப்படிச் செய்வதால் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் பகுத்தறிவுக்கும் எந்த வகையில் இழுக்கு ஏற்படும்..???!
சொல்லுங்கள் மாலன்.. விளக்கம் இருந்தால்.
நீங்கள் முந்திப் பேசி இருக்கலாம் விவாதித்திருக்கலாம். நாம் அந்தத் திசையில் இல்லை நாம் வேறோர் தளத்தில் நின்று இதை அணுகிக் கொண்டிருக்கின்றோம்..!
சைவம் காலனித்துவ காலத்தில் தமிழ் மொழியின் இருப்பை காக்கவில்லை என்று சொல்ல முடியுமா உங்களால்..???! சைவத்தின் பங்கை அதில் நீங்கள் முற்றாக நிராகரிப்பீர்களா..??!
தமிழர்களுக்கு மதப் பாரம்பரியமே இல்லை என்பீர்களா..??! ஐநா கூட ஒரு இனத்துக்கான மத அடையாளத்தை அங்கீகரித்திருக்கும் நிலையில்.. நீங்கள் எப்படி மக்களின் மத நம்பிக்கைகளை பகுத்தறிவு வற்ற நிலை என்பீர்கள்.
அறிவியல் உலகமும் மத நம்பிக்கையும் ஒரே தளத்திலா இயங்குகிறது. அப்படி என்றால் அமெரிக்கா கிறிஸ்தவ மத நம்பிக்கைகளூடு எப்படி அறிவியல் உலகின் உச்சத்தை அடைந்தது. ரஷ்சியா எப்படி அடைந்தது. இஸ்ரேல் எப்படி அடைந்தது..???! அவர்கள் பகுத்தறிவற்றவர்களா..??! ஆக பண்பான மொழியில் கூட மக்களை விழித்துக் கருத்துரைக்க நாதியற்ற ஈ வெ ராமசாமி என்ற கன்னடர்தானே பகுத்தறிவு மனிதன்..??!
ஏன் பாரதி போன்ற தமிழ் தலைவர்கள்.. பெண் விடுதலையை போதிக்கவில்லையா... சமூக விடுதலையைச் சொல்லேல்லையா..??! எல்லா மக்களும் ஏற்கும் படி சொல்லேல்லையா..??! ஏன் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் இல்லையா தமிழகத்தைப் பொறுத்தவரை..??!
ஏன் தமிழரின் அடையாளத்தை அடகு வைத்து திராவிடத்தை புகுத்திய ஈ வெ ராமசாமி பகுத்தறிவுவாதியாக இனங்காணப்பட வேண்டும்.
மனிதன் நாகரிக அறிவை விட்டு விலங்குகள் போல புணர்ந்து வாழுதல் தானா மனித சமூகத்துக்கு பாதுகாப்பானது.. திருமணம் பெண்களுக்கு அவசியமில்லை.. பிள்ளை பெறுவது கேடு என்றால்.. மனித இனம் உலகில் எப்படி நிலைத்திருக்கும்..???! அடிப்படை உயிரியல் அறிவு கூட இல்லாத ஒரு முட்டாள் தனமான வாதத்தை பகுத்தறிவு என்று காட்டுவது வெட்கமாக இல்லையா..??! இதனால் மக்கள் என்ன அறிவூட்டலைப் பெறப் போகின்றனர்..???!
நாகரிகம் தொலைத்த ஈ வெ எதிர்பார்த்த காட்டுமிராண்டிகளா தமிழர்களை ஆக்குவதுதான் பகுத்தறிவின் நோக்கமா..??!
/மாலன் அவர்களே../
போச்சுடா!!
குருவி கள் எழுத்துக்கூட்டினால் உப்பிடித்தான் வாசிக்குமோ? :-)
//-/மாலன் அவர்களே../
போச்சுடா!!
குருவி கள் எழுத்துக்கூட்டினால் உப்பிடித்தான் வாசிக்குமோ? :-)-//
ஜமாலன் என்பதில் "ஜ" தமிழ் எழுதல்ல என்பதால் தவிர்த்தேன்.
மாலன் என்ற இன்னொருவர் வலைப்பூவில் இருக்கிறார் என்பதை அறிவதால்... ஜமாலன் என்றே எடுத்துக் கொள்ளுங்களேன்.
நன்றி பெயரிலி.
//உங்கள் கருத்து முரண்பாடானது என்பதற்கு ஒரே ஒரு சான்று.. பெரியார் பிறக்காத தேசங்கள் அல்லது நாடுகளான ஈழம் மற்றும் தமிழகம் தவிர பிற மாநிலங்கள் எந்த அளவில் பகுத்தறிவிலும் பிறவற்றிலும் முன்னெறிவிட்டது என்கிற விபரத்தை தந்தால் நாங்களும் உணர்ந்தகொள்ள ஏதுவாகும். //
1. மேற்கன்ட எனது கெள்விகளுக்கு பதில் எதிர் கேள்விகள் அல்ல.
2. பெரும்பாலான உங்கள் கேள்விகளுக்கு ஏற்கனவே பதிலும் விவாதமும் எனது பதிவிலும் அதன் பின்னோட்டத்திலும் உள்ளது.
3. சைவம் குறித்த விவாதம் திசைதிருப்பலாகும். தமிழுக்கு சைவம் செய்திருக்கும் திருப்பணிகளை நான் மறுக்கவில்லை. ஒரு கருத்தியலுக்கோ சித்தாந்தத்திற்கோ தரும் அதிக அழுத்தம் என்பது அதனை பாசிசமாக மாற்றிவிடும் என்பதுதான்.
4. பெரியாரை உண்மையில் போற்றி பிடித்தக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.
5. பெரியார் கன்னடியர் என்பதற்காக கன்னடர்களுக்கு சாதகமாக என்ன செய்தார்?
6. திராவிடம் என்கிற கருத்தாக்கம் தமிழ் உணர்வுக்கு எதிரானது என்பதையும் அவ்வுணர்வு கொண்டவர்கள் தமிழ்உணர்வுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள் என்று உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?
7. ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவை திராவிடம் என்று நீங்கள் புறந்தள்ளும் தி.க. மற்றும் தி.மு.க.-தான் என்பதை மறுத்தவிட முடியுமா?
8. கருப்பை குறித்த பெரியாரின் கருத்துக்களை ஒரு இன அழிப்பாக நீங்கள் காணுவதால், தமிழக மக்கள் தொகை பெரியார் பாதிப்பால் 4 கோடியிலிருந்த 7 கோடியை நெருங்குவது இனக்குறைப்பா?
9. தமிழக மக்கள் அனைவரும் பகுத்தறிவுச் சுடரில் மூழ்கித் திளைத்ததின் விளைவாக தமிழகத்தில் உள்ள முப்பது முக்கோடி தேவர்களும் கடவுளர்களும் காலவாதியாகி நாட்டை விட்டு வெளிறேயிவிட்டனரா? அல்லது எல்லா கோவில்களும் பூட்டப்பட்டு விட்டனவா?
10. பெரியாரியத்தால் தமிழக பொருளாதாரம் எப்படி நசிந்து போனது என்று காட்டமுடியுமா?
11. சாதிகள் ஒழியாததற்கு காரணம் பெரியாரா? அல்லது கடவுள்களா? பெரியார் வெறுமனே 10-ஆண்டுகளுக்கு முன் வந்தவர்தான் அணாதி காலந்தொட்டு கடவுள்களால் ஆளப்பட்ட தமிழகத்தில் ஏன் சாதி ஒழியவில்லை.. அல்லது நீங்கள் கூறும் எந்த சுபிட்சமும் வரவில்லை?
12. பெரியாருக்கு முன்பு ஏன் தமிழ் உண்ர்வு முகிழவில்லை? பெரியாருக்கு முன்பே தமிழ்நாடே இல்லை என்பதாவது தெரியுமா? பெரியார் இயக்கம் ஆரம்பித்தபோது நான்கு மாநிலங்களும் சென்னை மாகாணம் அல்லது மெடராஸ் பிரசிடென்ஸியாக இருந்ததாவது தெரியுமா?
13. இனஉணர்வு என்பது நவீன சமூகத்தின் அதாவது 19-ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு என்பதாவது தெரியுமா?
14. காலணீய எதிர்ப்பு போரின் விளைவாக உருவானவையே தேசிய இயக்கங்கள். தேசிய இயக்கங்களின் காலகட்டமே பெரியாரியம் தோன்றிய கட்டம். பெரியாரியம் அடிப்படையில் தமிழ் தேசிய உணர்வின் விளைவாகத்தான் உருவானது வளர்ந்தது. அது இல்லாமல் எப்படி தமிழக்த்தில் தமிழர்கள் மத்தியில் வளர்ந்திருக்க முடியும்.
15. தமிழப் பிரச்சனையில் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் செயலல்படுவதாகவும், எல்லா தமிழர்களும் தமிழீழத்தை ஆதரிக்கிறார்கள் என்றும் உங்களால் கூறமுடியுமா? தமிழகமும் அப்படித்தான் எல்லோரும் ஆதரிப்பது என்பது சாத்தியமில்லை. ஆதரிப்பவாகள்தான் இயங்கக்கூடியவர்களாக உள்ளார்கள். அவர்கள் என்றும் தமீழீழத்தை ஆதரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஒரு ஒடுக்கப்பட்டவன் இன்னொரு ஒடுக்கப்பட்டவனக்கு விடுதலை வாங்கி தரமுடியுமா? தமிழக தமிழர்கள் இந்திப் பெருந்தேசியத்தால் ஒடுக்கப்படும்போது எப்படி அவர்கள் குரல் முன்னெடுக்கப்படும்? தமிழர்களின் ஒழிப்பது பெருந்தேசிய வெறி என்கிற வடிவில் வரும் பெருமுதலாளித்தவ பாரிய சந்தைக்கான பேராசையே?
போகட்டும்... நீண்டு கொண்டே போகிறது. பெரியார் எதனால் தமிழை விமர்சித்தாரோ அதற்கு சரியான சான்றாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் மொழி என்கிற பெயரால் ஒரு பாசிச கருத்துருவத்தை ஆதரிக்கக்கூடாது என்பதால்தான் தமிழ் என்கிற புணிதத்தை உடைத்தார். பெரியார் சரியாககவே இருந்துள்ளார் என்பதையே உங்கள் பதிவும் அதன் ஆதரவுக் குரல்களும் காட்டுகின்றன. மதமும் கடவுளுளும் தனிமனித உரிமை என்பதே எனது நிலைப்பாடு. இந்த உரிமை மட்டும்தான் அதிகாரம் மனமுவந்து ஒரு தனிமனிதன் தேர்ந்து கொள்ள அனுமதித்திருப்பதால் அந்த சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை. அதற்காக.. பெரியாரின் வரலாற்ற முக்கியத்துவத்தை மறுப்பது தமிழ் மதம் சாதி இன்னபிற பெயர்களால் நம்மை நாமே தற்கொலைப் பாதைக்கு இட்டுச் செல்வதாகும். இறுதியாக 3000-ஆண்டுகள் இந்நாட்டை ஆதிக்கம் செய்த பிராமணர்களால் நீங்கள் கூறிய அனைத்தையும் சாதிக்க முடிந்ததா?? என்பதையும் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் தனித் தமிழீழத்திற்காகவும் எத்தனை பிராமணர்கள் குரல்கொடுத்து வீதிக்கு வந்து போராடினர் என்பதையும் வெளியிட முடியுமா?
தமிழக மக்கள் தொகையில் பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களைவிட மதஉணர்வு கொண்டவர்களே அதிகம்.அப்படியிருக்க இதென்ன அரண்டவன் கண்ணுக்க இருண்டதெல்லாம் பேயா? அல்லது பேரச்சத்தின் பிதற்றலா?
பெயரைவைத்து சல்லி அடிக்க வேண்டாம். நான் 82-களில் வந்த மாலனின் திசைகளின் பாதிப்பில் பத்திரிக்கை எழுத்திற்கு வந்ததாலும் நின்றபோன திசைகள் பத்திரிக்கையை கையெழுத்தப் பத்திரிக்கையாக நடத்தியபோது ஆசிரியர் என்ற இடத்தில் போட ஒருரு பெயராக மாலனின் பெயரை இனணத்து ஜமாலன் என்று போட்டுக் கொண்டேன். அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் மாலனை இருண்டொருமுறை சந்தித்திரக்கிறேன் அப்பொழது என்பதைத்தவீர தொடர்புகள் அறுகிவிட்டன். அப்பெயரே எழுத்துலகில் அறிமுகமாகிவிட்டதாலும் பெயருக்கு அதீத முக்கியத்தவம் இல்லை என்பதாலும் அதை பிறகு மாற்றவில்லை.
அலுப்பூட்டும் இப்பின்னோட்டத்தை எழுத தூண்டியதற்கு நன்றி.
உங்களின் முக்கியமான கேள்விகளை மட்டும் கருத்தில் கொண்டு என்னால் முடிந்த பதிலைத் தருகின்றேன்..
"5. பெரியார் கன்னடியர் என்பதற்காக கன்னடர்களுக்கு சாதகமாக என்ன செய்தார்?"
திராவிடம் என்ற அகண்ட கோணிக்குள் அடக்கி தமிழர்களின் தமிழின உணர்வை.. தேசிய உணர்வை அழித்ததும் தனித் தமிழ்நாடு உருவாவதற்கு எதிரான கருத்துக்களை விதைத்ததும்.. தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு என்பதன் மூலமான சாதியப் பிளவுகளை ஆழப்படுத்தியதும்.. மொத்தத்தில் தமிழகத்தை சமூக அளவில் பலவீன நிலையில் வைத்திருந்ததும் தான் கர்நாடகம் இன்று முதன்மை கொண்டிருக்க உதவியுள்ளது..!
கன்னடர்களிடம் அடி வாங்கும் வரை திராவிடப் போர்வைக்குள் குளிர்காய்ந்து கொண்டிருந்த தமிழர்கள்.. அடி வாங்கியதும்.. வள்ளுவர் சிலையை உடைத்த போதும்.. அதை உணரத்தலைப்பட்டனர் என்பதை யாரும் மறுக்க முடியுமா...??!
"6. திராவிடம் என்கிற கருத்தாக்கம் தமிழ் உணர்வுக்கு எதிரானது என்பதையும் அவ்வுணர்வு கொண்டவர்கள் தமிழ்உணர்வுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள் என்று உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?"
திராவிடம் என்பது என்ன..??! அதன் இருப்புக்கான வரலாற்றுச் சான்றுகள் என்ன..??! தமிழர்களுக்கும் திராவிடத்துக்கும் என்ன தொடர்பு..??! திராவிடமில்லாத தமிழின அடையாளம் என்ற ஒன்றில்லையா..???!
திராவிடம் தமிழ் தேசிய அடையாளங்களை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறதே தமிழகத்தில்.. அதை உணர்ந்த பின்னும் இப்படி ஒரு வினா எழுப்புதல் தகுமா..??!
நவீன வரலாறுகள் ஆரிய திராவிடக் கோட்பாடுகளை நிராகரித்து நிற்கும் நிலையில் தமிழர்களின் வரலாற்றை எந்தக் கோணிப்பைக்குள் தேடுவது..??!
திராவிடம் என்பது தமிழர்களைச் சூழ்ந்துள்ள ஒரு மாயைத் திரை. அது தமிழர்களின் தனித்துவத்தை தின்று அழித்துக் கொண்டிருக்கும் ஒரு பட்டுப்புழு.
தமிழர்கள் தமிழ் தேசிய உணர்வை இழந்து திராவிடத்துக்குள் மயங்கிக் கிடப்பதே திராவவிடத்தின் தீமையை உணர்த்துகிறது. திராவிட உலகென்று தமிழர்களின் தாய் நிலம் பிரிக்கப்பட்டு துண்டாடப்பட்டுள்ளதே அது கூடவா புலப்படவில்லை உங்களுக்கு..??!
"7. ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவை திராவிடம் என்று நீங்கள் புறந்தள்ளும் தி.க. மற்றும் தி.மு.க.-தான் என்பதை மறுத்தவிட முடியுமா?"
திமுக தனது அரசியல் கருதி குரல் கொடுத்தது. ஈழத்தில் இந்தியப் படைகளின் அட்டூழியங்களைத் தடுக்க முடிந்ததா..?! சிறீலங்கா அரசுக்கு உதவுவதை தடுக்க முடிந்ததா..??! ஏன் மனிதாபிமான உதவிகளை அப்பாவி ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பத்தான் முடிந்ததா..??!
ஐநா பொதுச்செயலரே உதவி தேவை என்று 1995 யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது வேண்டுகோள் விடுக்க.. தமிழக அரசு திராவிடக் கட்சி அரசு என்ன உதவியைக் கொண்டோடி வந்தது..??!
உதவி விடுதலைப்புலிகளுக்கல்ல. ஐநா தமிழ் மக்களுக்காகக் கோரியது..??! என்ன செய்தார்கள். அறிக்கை விடுவதெல்லாம் ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்ய என்பதை தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகளை பரிகரித்த முறையில் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகளுக்கு வதிவிட உரிமை வழங்கி பாதுகாக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் திறந்த வெளிச் சிறைகளில் அடத்து வைத்து சந்தேகத்தோடு "சிலோன் காரன்" என்று நடத்துகின்றனர். இதுதான் தமிழன் என்ற உணர்வின் வெளிப்பாடா. அல்ல. இது திராவிடன் என்ற மாயையின் வெளிப்பாடு. தமிழ் உணர்வும்.. தமிழ் தேசிய உணர்வும் இரூந்திருந்தால்.. மண்டபம் அகதி முகாம் தேவைப்பட்டிருக்காது. ஒவ்வொரு ஈழத்தமிழனும் தமிழக தமிழர்களின் விருந்தினராகி இருப்பர். அந்த நிலை எங்கே போனது.. யாரால்..???!
"8. கருப்பை குறித்த பெரியாரின் கருத்துக்களை ஒரு இன அழிப்பாக நீங்கள் காணுவதால், தமிழக மக்கள் தொகை பெரியார் பாதிப்பால் 4 கோடியிலிருந்த 7 கோடியை நெருங்குவது இனக்குறைப்பா?"
பெரியார் தமிழகத்தில் செல்லாக் காசாகி பல ஆண்டுகள் கடந்தாயிற்று. பெரியார் கருத்துக்களை காவுவதாகச் சொல்லும் தலைவர்களே சாதிக் கட்சிகள் அமைக்கவும் கூட்டணி போடவும் செய்துள்ளனர்.
கோயில்களை அமைத்து வருவாய் பார்க்கின்றனர்.
ஆனால் உலகில் மனித இனத்தின் உயிரியல் கூறான பெண்ணினதும் அவளின் கருப்பையினதும் பெறுமதியை உணராது.. அதன் இயற்கைப் பண்பை உணராது.. பெண்களை வெறும் விலங்குணர்ச்சி நிலையில் கருதி.. திருமணம் என்ற சடங்கு நிலை நாகரிகத்துக்கு முற்பட்ட மனித நிலைக்கு தமிழர்களைத் தள்ளிட நினைத்து அதன் மூலம் தமிழின இருப்பை அழிப்பதைக் கருத்தில் கொண்ட பெரியாரைத் தான் அவரின் கருப்பை மற்றும் திருமணம் தொடர்பான கூற்றில் காண்கிறேன்.
மேற்குநாடுகளில் கூட குடும்பப் பிரிவினைகளைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேளையில்.. குடும்பங்களை சீர்குலைக்கவல்ல இப்படியான கருத்துருவாக்கம் சமூகவியலடிப்படையில் தேவையா..??! கொண்டு போய் குப்பையில் போடுங்கள். அதை தமிழக மக்கள் நிராகரித்த போதே பெரியாரின் உளறல்கள் இறந்துவிடத் தொடங்கிவிட்டன அதைத்தான் இந்த சனத்தொகை அதிகரிப்பு காட்டுகிறது. தமிழர்கள் முட்டாள் அல்ல என்பதை பெரியார் உணர்ந்திருப்பார்.. தான் நினைத்ததுக்கு மாறாக அவர்கள் கருங்காலிகள் அல்ல.. மனிதர்கள் என்று அடையாளம் கண்டிருப்பார்.
"9. தமிழக மக்கள் அனைவரும் பகுத்தறிவுச் சுடரில் மூழ்கித் திளைத்ததின் விளைவாக தமிழகத்தில் உள்ள முப்பது முக்கோடி தேவர்களும் கடவுளர்களும் காலவாதியாகி நாட்டை விட்டு வெளிறேயிவிட்டனரா? அல்லது எல்லா கோவில்களும் பூட்டப்பட்டு விட்டனவா?"
பகுத்தறிவுக்கும்.. கோயில் வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு..??! மேற்குலகெங்கும் தேவாலயங்கள் இருக்கின்றன.. அரபுலகெங்கும் மசூதிகள் இருக்கின்றன.. அவர்கள் பகுத்தறிவற்றவர்கள் எங்கிறீர்களா..??! கோவிலில் தியானம் செய்வது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விடயமா..??!
பெரியாரின் பகுத்தறிவை மக்கள் ஏற்கவில்லை என்பதைத்தான் கோவில்களின் பெருக்கமும்.. சனத்தொகை அதிகரிப்பும், சாதியக் கட்சிகளின் இருப்பும்.. சாதிச் சான்றிதழ்களும் காட்டுகின்றனவே. பிறகெதற்கு.. பெரியாரை இன்னும் இணையங்களில் திரைப்படங்களில் காவித்திரிகிறார்கள். வியாபாரத்துக்கும் விளம்பரத்துக்கும் புகழுக்குமா..??!
"10. பெரியாரியத்தால் தமிழக பொருளாதாரம் எப்படி நசிந்து போனது என்று காட்டமுடியுமா?"
பெரியாரால் தான் தமிழக பொருளாதாரம் மிளிரத் தொடங்கியது என்பதைக் காட்ட முடியுமா..??! மத்திய அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தமிழகத்திலும் செல்வாக்குச் செய்தது.
பெரியார் தானே சொல்லிட்டாரே.. வடநாட்டான் பிரதமராவதா..??! இந்திய அரசியல் அமைப்பு தேவையில்லை.. நீதிமன்றங்கள் தேவையில்லை என்று. பிறகெதற்கு இன்னும் இந்திய சட்டத்துக்கு அமைவாக சத்தியப்பிரமாணம் செய்து மாநில ஆட்சி நடத்துகின்றனர். பிரிந்து போக வேண்டியதுதானே பெரியார் கொள்கைப்படி... திராவிட நாடாக அன்றி தமிழ்நாடாக. இதெல்லாம் நடந்திருந்தால்.. பெரியார் தமிழர்களுக்கு உதவினார் என்று சொல்லி வாதிடலாம். ஆனால்.. பேச்சும் செயலும்.. தமிழ் விரோதப் போக்கை வளர்க்க விரிவாக்கத்தான் உதவியுள்ளது.
"11. சாதிகள் ஒழியாததற்கு காரணம் பெரியாரா? அல்லது கடவுள்களா? பெரியார் வெறுமனே 10-ஆண்டுகளுக்கு முன் வந்தவர்தான் அணாதி காலந்தொட்டு கடவுள்களால் ஆளப்பட்ட தமிழகத்தில் ஏன் சாதி ஒழியவில்லை.. அல்லது நீங்கள் கூறும் எந்த சுபிட்சமும் வரவில்லை?"
பெரியார் என்று சொல்லலாம். கடவுள் அல்ல. கடவுளை வணக்குபவன் உலகெங்கும் உள்ளான். அங்கெல்லாம் சாதி உண்டா..??! மனித சமூகப் பிரிவினையின் தளங்கள் பொருளாதாரத்தை மையப்படுத்தியே எழுந்துள்ளன. தொழில் என்பது உயிர் வாழ்தலுக்கான பொருளாதாரத்தை ஈட்டல் என்பதை முதன்மையாகக் கொண்டது. தொழிலடிப்படையில் தான் சாதி என்ற சமூகப் பிரிவினை எழுந்தது. கடவுள் சார்ந்து அல்ல. கடவுள் சார்ந்து மதப் பிரிவினைகள் தான் முளைத்தன. அவை இலகுவாக களையப்பட்டும் உள்ளன. அயர்லாந்தில் கிறிஸ்தவர்களுக்கிடையேயும் மதப் பிரிவுகள் இருந்தன.. ஈராக்கில் பாகிஸ்தானில் முஸ்லீம்களிடையே இருக்கின்றன.. அப்படி இந்துக்கள் மத்தியில் இருந்த பிரிவினைகள் இன்று பல தளங்களில் வழக்கொழிந்துள்ளன. இந்துக்கடவுள்கள் உறவுக்காரர்களாக காட்டப்படுகின்றனர். கடவுள் இருக்கிறானா இல்லையா என்பதல்ல முக்கியம். மக்களின் மனங்களில் அந்த கடவுள் என்ற மனிதக் கருத்துருவாக்கத்தின் தாக்கம் செய்யும் விளைவுகள்.. அது மனிதனின் சமூக வாழ்வில் அவனை வழிநடத்திச் செல்லும் பண்புகள் அதன் செயற்திறன் என்பவை முக்கியமானவை. கடவுள் என்ற ஒரு பயமின்றேல்.. இன்று உள்ள சட்டங்கள் போதாது மனிதனைக் கட்டுப்படுத்த. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா..??! கடவுள் என்ற கருத்துருவாக்கத்துக்குப் பயந்தே பல தீய விடயங்களை மனிதன் செய்யாமல் இருக்கிறான். இதை படிப்பறிவற்ற மக்களுக்கு அறிவியலால் ஊட்ட முடியுமா..??! முடியாது.
மக்கள் எல்லோருக்கும் கல்வியும் அறிவியல் அறிவும் பொருளாதார சமத்துவமும் கிடைக்க வகை செய்கின்ற போது... சமூக ஏற்றத் தாழ்வுகள் என்பது அகலும். அதற்கு வகை செய்வதை விடுத்து "பகுத்தறிவு.. இந்து எதிர்ப்பு.. பிராமணப் பழிப்பு" இவற்றால் சாதித்தது என்ன..??! மக்களை மேலும் மேலும் பிளவுபடுத்தி அரசியல் செய்தது மட்டும் தான். இதைத்தான் பெரியார் தமிழர்களிடம் விரும்பினார். தமிழர்களும் செய்து கொண்டுள்ளனர். இது மோசமான தமிழ் தமிழின விரோத சிந்தனையின் செயற்பாட்டு வடிவம் என்பதை நீங்கள் உணரவில்லையா..?!
"12. பெரியாருக்கு முன்பு ஏன் தமிழ் உண்ர்வு முகிழவில்லை? பெரியாருக்கு முன்பே தமிழ்நாடே இல்லை என்பதாவது தெரியுமா? பெரியார் இயக்கம் ஆரம்பித்தபோது நான்கு மாநிலங்களும் சென்னை மாகாணம் அல்லது மெடராஸ் பிரசிடென்ஸியாக இருந்ததாவது தெரியுமா?"
ஏன் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சியில்.. தமிழினம் செழிப்புற்று இருக்கவில்லையோ..??! தமிழனுக்கு என்று நாடு படை கொடி மதம் மொழி கலாசாரம் பண்பாடு மனித விழுமியம் என்றெல்லாம் இருக்கல்லையோ..??!
நீங்கள் இப்படி ஒரு வினாவைத் தொடுக்க வைத்ததே இந்தத் திராவிடம் என்ற மாயைக் கருத்துருவாக்கத்தின் விளைவுதான். இதை இனங்காட்டுவதுதான் எனது இந்தப் பதிவின் நோக்கமுமே. நன்றி இந்த வினவலுக்கு.
"13. இனஉணர்வு என்பது நவீன சமூகத்தின் அதாவது 19-ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு என்பதாவது தெரியுமா?"
நாம் 21 இல் இருந்து கொண்டும்.. இன்னும் அந்ந உணர்விழந்து நிற்கிறோமே. எமது தமிழினத்தின் வரலாற்றுச் சான்றை அறிவியல் கொண்டும் அகல்வாராய்ச்சி கொண்டும் தேடல் செய்யாலம்.. திராவிடத்துக்குள் ஏன் பதுங்கி இருக்க வேண்டும். இன உணர்வுருவாக்கத்தின் பின்னாவது திராவிட மாயைவிட்டு ஏன் தமிழகத் தமிழர்கள் வெளிவரவில்லை.
தமிழகத்தில் உள்ள தமிழர்களில் சில பகுதிகளில் இன்று வேற்று மாநில பூர்வீகத் தமிழ் மொழி பேசுவ்வோரே தமிழர்களாக தங்களை இனங்காட்டி வாழ்கின்றனர். அதற்கு காரணமும்.. இந்தத் திராவிடம் தான். தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளங்களை சிறுகச் சிறுக அழித்து வருவதையே அல்லது மறந்து போவதையே இது காட்டுகிறது.
"14. காலணீய எதிர்ப்பு போரின் விளைவாக உருவானவையே தேசிய இயக்கங்கள். தேசிய இயக்கங்களின் காலகட்டமே பெரியாரியம் தோன்றிய கட்டம். பெரியாரியம் அடிப்படையில் தமிழ் தேசிய உணர்வின் விளைவாகத்தான் உருவானது வளர்ந்தது. அது இல்லாமல் எப்படி தமிழக்த்தில் தமிழர்கள் மத்தியில் வளர்ந்திருக்க முடியும்."
இந்தியத் தேசிய இயக்கங்கள் இந்திய தேசிய விடுதலையை மையப்படுத்தி எழுந்தன. பெரியார் என்ற ஈ வெ ராமசாமியின் உளறலிசும் "திராவிடம்" என்ற மாயை அடிப்படையில் எழுந்தது. இந்திய தேசியம் பேசிய வட இந்தியர்கள் ஆரியத்தை தூக்கிப் பிடிக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது ஆரியம் என்ற மாயையின் பலவீனம். ஆனால் திராவிட மாயையை தமிழர்களுள் புகுத்தி தமிழ் தேசியத்தை அடையாளம் காட்ட மறுத்ததே பெரியார் என்ற உளறலிசக்காரர்தான் என்ற அது மிகையல்ல.
"15. தமிழப் பிரச்சனையில் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் செயலல்படுவதாகவும், எல்லா தமிழர்களும் தமிழீழத்தை ஆதரிக்கிறார்கள் என்றும் உங்களால் கூறமுடியுமா? தமிழகமும் அப்படித்தான் எல்லோரும் ஆதரிப்பது என்பது சாத்தியமில்லை. ஆதரிப்பவாகள்தான் இயங்கக்கூடியவர்களாக உள்ளார்கள். அவர்கள் என்றும் தமீழீழத்தை ஆதரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஒரு ஒடுக்கப்பட்டவன் இன்னொரு ஒடுக்கப்பட்டவனக்கு விடுதலை வாங்கி தரமுடியுமா? தமிழக தமிழர்கள் இந்திப் பெருந்தேசியத்தால் ஒடுக்கப்படும்போது எப்படி அவர்கள் குரல் முன்னெடுக்கப்படும்? தமிழர்களின் ஒழிப்பது பெருந்தேசிய வெறி என்கிற வடிவில் வரும் பெருமுதலாளித்தவ பாரிய சந்தைக்கான பேராசையே?"
தமிழர்கள் தமிழ் தேசியத்தை இந்திய தேசியத்தை வலியுறுத்திய போதே வலியுறுத்தி வந்திருந்தால் இன்று இந்திய தேசியத்துக்குள் திராவிடக் கோணிப்பைக்குள் பதுங்கி இருக்க வேண்டிய நிலை வந்திருக்குமா..??! ஈழத்தில் தமிழன் அழிவதை அழிக்கப்படுவதை கண்டும் காணாமலும் இருந்து கொண்டு.. இந்தியத் தேசியத் தலைவரை எங்கள் தலைவர் என்று கொண்டு " எங்கள் தலைவரைக் கொன்றிட்டாங்கள்" என்ற மாயைப் பிதற்றலோடு வாழும் தமிழர்கள் உருவாவதைத் தடுத்திருக்கலாம் அல்லவா.
திராவிட கட்சிகளால் ஏன் தமிழ் தேசியத்துக்காகக் குரல் கொடுக்க முடியவில்லை..??! தமிழர்கள் என்பதை உதட்டளவில் உச்சரிப்பதுதானா திராவிடம் அனுமதித்துள்ளது.
இந்தியப் பெரும் தேசியத்துக்குள்ளும் திராவிட மாயைக்குள்ளும் தமிழகத்தில் தமிழ் தேசியம் அடங்கிப் போயுள்ளது. அதை இந்திய தேசியமும்..சர்வதேசமும்.. சிங்கள பெளத்த பேரினவாதமும் பாவித்து தமிழினத்தின் இருப்பையே அழிக்க முனைந்து கொண்டிருக்கின்றன. சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு தமிழர்களின் பலவீனம் தான் பலமாகியுள்ளது. அதற்கு திராவிடம் என்ற மாயைக் கோணிக்குள் குறட்டை விடும் தமிழகத் தமிழர்களும் தான் உதவியளிக்கின்றனர்.
இந்திய உபகண்டத்தில் தமிழன் நாடும் படையும் மக்களும் கொண்டிருந்த நிலை போய்.. இந்தியத் தேசியத்துள்.. திராவிட மாயைக்குள் தமிழன் பதுங்கி இருந்து காலமோட்ட வேண்டிய நிலைதான் தமிழர்களைப் பலிக்கடாவாக்கி உலகம் தனது பிராந்திய மற்றும் சர்வதேச ஆதிக்க வலைப்பின்னலை பூர்த்தி செய்ய இடமளிக்கிறது. இதையாவது தமிழகத்தில் உள்ள தமிழர்கள் உணர்வார்களா..??!
தமிழர்களின் தமிழ் தேசிய உணர்வின் பலம் எந்த வகையில அவசியமென்பதையும்.. அது வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் உணர்வார்களா..??!
குருவிகள்,
இந்திய தேசியத்தையும் அதை ஆட்டுவிப்பவர்கள் யாரென்பதையும் புரிந்து தான் இந்த பதிவை எழுதியுள்ளீர்களா? ஈழத்தமிழர்களின் எதிரிகள் யார் என்பதை முதலில் அடையாளம் கண்ட பின்னர் உங்கள் அட்டை கத்திகளை வீசுங்கள். பெரியா மீதான இந்த கேள்விகள் ஒன்றும் புதியவை அல்ல. இதே பரப்புரையை எழுப்பியவர் பெங்களூர் குணா என்பவர். சில வாரங்களுக்கு முன்னர் இதே கேள்விகள் வலைப்பதிவில் எழுப்பப்பட்டு பதிலும் தரப்பட்டது. உங்களது பதிவும், பின்னூட்டங்களும் முரண்பாடுகளாகவே இருக்கையில் எந்த கேள்விக்கு பதில் சொல்வது? இருப்பினும் பெரியாரிடமிருந்தே சில மேற்கோள்களை தருகிறேன்.
"வெள்ளையர் நம்மை அரசியலில் ஆளுகிறார் என்றால்,
அதற்காவது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அதாவது, இந்தச்
சூழ்ச்சியால் நாம் தமிழர்கள் - திராவிடர்கள் பல்வேறு சமயமாகவும்,
பல்வேறு மேல்-கீழ் சாதி வகுப்புகளாகவும், பல்வேறு
லட்சியமுடையவர்களாகவும் ஆக்கப்பட்டு, கல்வி இல்லாமல், தன்முயற்சி
இல்லாமல் நசுக்கப்பட்டு விட்டபடியால், கத்தி, துப்பாக்கி
உள்ளவருக்கெல்லாம் பயந்து, அடிமையாகி, ஆரியரால் நம் நாட்டிற்கு
கூட்டி வரப்படுபவருக்கெல்லாம் குடி ஆகி அல்லல்பட்டு வருகிறோம்.
ஆனால், கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிமை கூட
இல்லாத இந்த ஆரியர்களுக்கு, அரசியல், சமூக இயல், சமய இயல்,
பொருளாதார இயல், ஞான இயல் முதலாகியவைகளுக்கெல்லாம் நாம்
உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க
வேண்டாமா என்று உங்களைக் கேட்கிறேன். அல்லது நம் நிலை
தமிழ்நாடு தோன்றியதுமுதல், தமிழர் தோன்றியது முதல், இப்படித்தான்
இருந்ததா என்று கேட்கிறேன்"
இது பெரியார் சொன்னவை. தமிழனுக்கு எதிரியாக பெரியார் திராவிடம் பேசினாரா என்பதை சிந்திக்க திறனுள்ளவர்கள் சிந்திக்க இவை உதவும்.
"தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும்,
தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான், தமிழன்
தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும்,
ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.
இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து
என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும்,
கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன்
என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும்
உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில்
உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.
இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாகக் காணப்படுவதில்
ஆச்சரியமில்லை. அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப்
பரிகசிப்பவர்கள்போல் நடிப்பதில் அதிசயமில்லை. ஆனாலும்,
அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை."
இதுவும் பெரியார் சொன்னவை தான். சிந்திக்க திறனுடைவர்களுக்கு இவையும் உதவக்கூடும்.
//“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும்,
இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள்
ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை”.
இது சர்-ஜேம்°மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம்
67டி-யில் இருக்கிறது//
"திராவிடர் ஆரியர் உண்மை" என்ற வெளியீட்டில் தந்தை பெரியார் காட்டிய மேற்கோள் இது. பெரியார் நடத்திய போராட்டங்களின் அனைத்து சூழலையும் புறந்தள்ளிவிட்டு புலம்பும் நிலை கண்டு பரிதாபமே எழுகிறது.
"அறியாமை பேரானந்தம்" இந்த பேரானந்ததித்தில் நீங்காமல் திளைக்க வாழ்த்துக்கள்!
திரு அவர்களே..
உங்களுக்கும் எமக்கும் உள்ள முரண்பாடு.. திராவிடம் மூலம் தமிழர்களை அடையாளம் காணுதல் என்ற வகையில் தான் உள்ளது.
தமிழர்கள் மத ரீதியா கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.. ஏன் இஸ்லாமாக இருக்கிறார்கள்.. அதையெல்லாம் சுலபமாக மறந்துவிட்டு.. இந்து மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள் மீதுதான் பெரியாரின் கவனம் திரும்பியது.. காரணம் என்ன..??!
கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தமிழர்களிடையேயும் சாதிப் பிரிவுகள் உண்டு. இல்லை எங்கிறீர்களா.. அப்படி பார்க்கின்ற போது.. இந்து என்பதை மட்டும் நோக்கித் தாக்குவது ஏன்..???!
உண்மையான தமிழ் சமூக அக்கறை உள்ளவரா பெரியார் என்ற ஈ வெ ராமசாமி இருந்திருந்தால் திராவிட வாதத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்களின் தேசிய வாதத்தை இந்திய தேசியத்துக்கு முன்னால் நிலை நிறுத்தி இருக்க வேண்டும்.
மா பொ சி போன்றவர்கள் தனித் தமிழ்நாடு.. தமிழராட்சி என்பவற்றை முன்மொழிந்த போது அதை நீங்கள் கூறும் தமிழர்கள் மீது அக்கறையிருந்த பெரியார் ஏன் ஆதரித்து நிற்கவில்லை..??!
மதங்களை இனக்கோட்பாட்டுக்குள் கலப்படம் செய்யாதீர்கள். மதங்கள் மனிதனுடைய நாகரிக வளர்ச்சியின் ஒரு காலத்தில் ஆதிக்கம் செய்தவைதான். இன்று அந்த நிலை உலகெங்கும் அருகி.. அறிவியல் தான் ஆதிக்கம் செய்கிறது. இதற்காக யாரும் மதங்களுக்கு எதிராக துப்பாக்கி தூக்கிக் கொண்டு திரியவில்லை.
அறிவியல் மூலம் மக்களின் கேள்விகளுக்கு பதிலிறுக்கின்ற போது மதங்கள் காட்டும் மூட நம்பிக்கைகள் இனங்காணப்பட்டு கைவிடப்பட சமூகத்துக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்கள் நிலைத்துவிடுகின்றன.
இந்துமதமும் அதற்கு விதிவிலக்கல்ல. முன்னொரு காலத்தில் வைஸ்ணவம் சைவம் என்று அடிபட்டவர்கள் இன்று அந்த நிலையிலின்றும் மாறுபட்டு இல்லையா..???!
கருத்தியல் உலகும் அறிவியல் உலகும் மனிதப் பரினாம வளர்ச்சியோடு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மனிதனின் கருத்துருவாக்கதால் உருவான மதமும் அதன் நிலைகளை மாற்றிக் கொள்ளும்.
எனவே அடிப்படையில் கல்வி மற்றும் அறிவியல் அறிவுதான் மக்களுக்கு அவசியம்.
இனம் என்ற அடையாளப்படுத்தலுக்கு திராவிடம் என்ற போர்வை தமிழர்களுக்கு அவசியமில்லை. தமிழர்களுக்கு என்று தனித்துவமான பாரம்பரிய கலாசாரம் நிலம் மொழி பண்பாடு என்று இனத்துவ அம்சங்கள் உள்ளன. அவற்றை திராவிடத்துக்கு வெளியில் நின்று நாம் இனங்காண்பதும்.. அதைக் கொண்டு தமிழினத்தின் தேசிய இருப்பை பாதுகாப்பதும் அவசியமாகும். அதற்கு திராவிடம் தடையாகவே இருக்கிறது. இருக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை.
ஈழத்தில் திராவிட கட்சிகளோ.. குரலோ ஆதிக்கம் செய்யாதபடியால் தான்.. ஈழமக்களால் அவர்களின் தமிழினத்துக்கான தேசிய அடையாளத்தை இனங்காண முடிந்தது.
மதங்களை வேறொரு தளத்தில் வைத்துக் கொண்டு சமூக விடுதலைக்கும் தேச விடுதலைக்கும் பாடுபட முடிந்தது.
ஏன் தமிழகம் அந்த நிலைக்கு வர முடியவில்லை. இந்திய தேசியத்துள் அவர்கள் வாழ விரும்பினும்.. தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்திக் கொண்டு வாழலாம் தானே. ஏன் திராவிடப் போர்வை போர்த்திக்க வேண்டும் என்பதுதான் எனது வினா..??!
தமிழர்களுக்கு திராவிடப் போர்வையை போர்த்திய ஈ வெ ராமசாமி போன்றவர்கள் தமிழர்களுக்குள்ளேயே எதிரிகளாக இந்துக்களையும் பார்பர்ன கோட்பாடுகளை கொண்ட தமிழர்களையும் மோதவிட்டு.. தமிழ் சமூகத்தை பலவீனப்படுத்தியதும்.. பிராமணத்தை ஒழி என்று சாதியத்தை அடிப்படையாக வைத்து சமூகத்தை பிரித்தாண்டதுவுமே தமிழகம் பல நிலைகளில் பிந்தங்கி.. தமிழ் தேசியத்தின் தேவையறியாமல்.. திராவிட மாயைக்குள் வாழ நேரிட்டுள்ளது என்பதையே நாங்கள் கூறுகின்றோம்.
நாம் பார்பர்னக் கோட்பாடுகளுக்கோ இந்துமதத்துக்கோ.. ஆதரவு என்ற நிலையில் நோக்கவில்லை. பார்பர்னக் கோட்பாடுகளை காவுவதற்காக தமிழர்களை தமிழர்களே அடித்துக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி..??!
ஏன் இந்தப் பார்பர்னக் கோட்பாட்டையும் பகுத்தறிவுக் கோட்பாட்டையும் ஒருங்கே கைவிடச் செய்ய மக்களை அறிவியல் கொண்டு கல்வி அறிவுகொண்டு பொருளாதார சமத்துவம் கொண்டு தமிழ் தேசியம் கொண்டு அணுகக் கூடாது..??!
திராவிடம் என்பது தமிழர்களின் இன இருப்பின் தனித்துவத்தை பாதிக்க புகுத்தப்பட்டுள்ள ஒன்று. அதை முதலில் தூக்கி எறிந்துவிட்டு.. அதற்குள் புதைபட்டுப் போயுள்ள தமிழர்களின் அடையாளங்களை தனித்து இனங்காட்டிக் கொண்டு தமிழர்கள் தமிழ் தேசிய அடையாளங்களோடு இந்திய தேசியத்துக்குள் வாழ்வதே தமிழர்களின் தேசிய உரிமையை இந்திய தேசியம் உணரவும் மதிப்பளிக்கவும் செய்யும். அது சர்வதேச அளவில் தமிழ் தேசியத்தின் இருப்பை பல மடங்கு பலமாக்கும்.
இதற்குப் பெரியாரின் சமூகக் குரோத நோக்கோடு அமைந்த உளறலிசும் எனித் தேவையில்லை என்பதே எமது கருத்து.
kuruvikal .....ninga sonathu unmai tamilnadil பகுத்தறிவென்று samil seilaikku serruppal adippathu..sami seilaikku kallal erivathu..indu mathythai kevalama thiduvathu..pusarikalai parppanan endu kevalama thiduvathu ..ethu than evarkaludaijaபகுத்தறிவென்று melum பெரியார் seithyathu mukkijamana vidajam oru inaththukkul oru samookaththai(biramin)muthal ethiri aakkinaar.tamilanukkulleje oru ethirijai uruvaakinaar(biramin)
நன்றி தமிழன் உங்கள் கருத்தையும் பதிந்து கொண்டதற்கு.
தோழரே,
பெரியார் பற்றி தங்கள் புரிதல் தவறாக உள்ளதாக நினைக்கிறேன். நிறைய தேடிப்படித்துவிட்டு விவாதத்தைத் தொடரவும்.
வாழ்த்துக்கள்!!
தீண்டாமை என்றால் என்ன? என்று தங்களுக்கு தெரியுமா? அதைத் தாங்கள் அனுபவித்தது உண்டா? முதலில் இந்துவாக இல்லாமல், ஒரு மனிதனாக இந்த சிந்தியுங்கள்.
குட்டிப் பிசாசு மற்றும் அனோனிமஸ்.. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஈ வெ ராமசாமி நாயக்கர் என்ற கன்னடத்தவர் பற்றி எனக்கு வேண்டியளவு அறிந்துவிட்டுத்தான் எழுதவே ஆரம்பித்தேன்.
தீண்டாமை என்பது ஒரு வழக்கம். அதை மாற்றுவதற்கு.. பிராமண அழிப்பு என்பது எந்த வகையில் எல்லாம் உதவும் என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.
கடவுள் சிலை அழிப்பு எந்த வகையில் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
தீண்டாமை என்பதை நீங்கள் சாதியடிப்படையில் பார்க்கிறீர்கள். ஆனால் உண்மையில் அது பொருளாதார அடிப்படையில் எழுந்திருக்கிறது.
செல்வந்தனான ஒரு பிற்படுத்தப்பட்டவன் உயர்ந்த நிலைக்கு வந்ததும் எப்படி மதிக்கப்படுகிறான். அங்கு தீண்டாமை இயல்பாகக் கலைகிறது.
மக்கள் எல்லோரும் பொருளாதார ஒப்ரிமல் உயர்வு நிலை அடைகின்ற போது இந்த தீண்டாமைகள் என்பது இயல்பாக இல்லாமல் போகும்.
மேற்குலக நாடுகளில் பாருங்கள். தீண்டாமை என்ற சொல்லே அரிது. நிற வேறுபாட்டில் அமைந்ததைத் தவிர. காரணம் மக்களின் பொருளாதார மேம்பாடும்.. பொருளாதார சம தராதர நிலையுமே.
இதற்கு ஈ வெ ராமசாமியின் உளறல்கள் எங்கனம் உதவும் என்று கூறுங்கள் பார்க்கலாம்.
ஈ வெயின் கொள்கைகளை தமிழ் நாடு தாண்டியே மக்கள் கருத்தில் கொள்ள பிரியப்படாத போது.. தமிழர்களுக்கு மட்டும் ஏன் ஈ வெ ரா அரசியல்..???!
Post a Comment