Friday, September 08, 2006

பெண்களுக்கு மட்டும் ஏன் ஒரு பக்கம்..?!

ஆணும் பெண்ணும்..மனிதர்கள். மனித நாகரிகத்துக்கு உட்பட்டு..மனிதாபிமான எல்லைகளுக்குள்ள நின்று..ஆணும் சரி பெண்ணும் சரி தங்களுக்குரிய உரிமைகளை சமத்துவமாக அனுபவிக்கக் கூடிய திறன் உண்டு.

இருந்தும் இன்னும் பெண்களுக்கு என்று சில பிரத்தியேக சலுகைகளும்...வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றனவே.

உதாரணத்துக்கு...செக்ஸுவல் டிஸ்கிறிமினேசன் என்றால் பொதுவாக எல்லோர் மனங்களிலும் பெண் பாதிக்கப்பட்டுவிட்டாள் அல்லது பாதிக்கப்படுகிறாள் என்றுதான் நோக்கப்படும். அதில் ஓரளவு உண்மை இருக்கு என்றாலும்..அது முற்றிலுமான உண்மையல்ல..! இன்று பெண்களால் கூட ஆண்கள் தொந்தரவு செய்யப்படினம். வேலை செய்யும் இடங்களில் ஒரு ஆண் தற்செயலாக சிக்கிவிட்டால்...அவனை கேலிப் பேச்சுக்களால்..நோகடிப்பது முதல்..பலதையும் பெண்கள் செய்யினம். இதையே ஆண்கள் செய்துவிட்டால் அது பாராதூரமாக நோக்கப்படும். ரோச்சர்.. ஈவ்ரீசிங் என்றெல்லாம் பெயரிடப்படும்..! இதையெல்லாம் முறையிட இடமிருக்கும்..ஆனால்..ஆண்களுக்கு...??!

ஆண் என்பதற்காக சில வேலை வழங்குனர்கள் வேலை தரப் பின்னடிக்கும் நிலையும் இன்று எழுந்துள்ளது..! பெண்கள் தான் இந்த வேலைக்கு பொருத்தம் என்று அவர்கள் மனதளவில் தீர்மானித்து விட்டு பெண்களைத்தான் அமர்த்துகின்றனர்..! விமான பயண பதிவு மற்றும் ஒழுங்குகளைச் செய்யும் இடங்களில் பாருங்கள்..பெண்களைத்தான் அமர்த்தி இருக்கிறார்கள்..! இப்படியான இடங்களில் ஆண்களை விரல்விட்டு எண்ணலாம். வேலை கேட்டால் கூட நாங்கள் பெண்களைத்தான் பெரிதும் விரும்புறம் என்றீனம்..! (வி பிறிபர் லேடிஸ் ஸ்ராவ்)

அதுபோக.. பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எல்லாம் இப்போதும் பெண்களுக்கு என்று அவர்களின் பிரச்சனைகளை..குசும்புகளைச் சொல்ல பக்கம் இருக்குது. ஆண்கள் பிரச்சனைகளை புறக்கணிக்கப்படுகின்றன..அல்லது பொத்தாம் பொதுவா பேசப்பட்டு பலதோடு சிலதா மறைந்து போய் விடுகின்றன...! அவர்களுக்கு என்றும் ஒரு தனிப்பக்கத்தை உருவாக்க வேணும். அப்பதான் சமூகத்தில் உள்ள ஆண்களின் பிரச்சனைகளும்..தூலாம்பரமாக ஒரு பக்கத்தை அலங்கரிக்க..பெண்களால் ஆண்கள் படும் துன்பங்களும்..அவற்றைப் பெண்கள் கண்டுணர்ந்து தவிர்க்கவும் வழிபிறக்கும்..!

புரட்சி என்று பெண்களுக்காக பலமாற்றங்கள் வந்துள்ள நிலையிலும்..ஆண்களுக்கு என்று அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வழி செய்யப்படவில்லை. இதனால் பல ஆண்கள் நொந்து நூலாகிப் போகின்றனர். வீட்டிலும் சரி வெளியிலும் சரி..!

உலகெங்கும் ஆண்களின் கல்வி வளர்ச்சி..பரீட்சையில் சித்தி பெறும் வீதம் தொடர்ச்சியாகக் குறைவடைந்து செல்கிறது. பெண்களை விட பல சத வீதங்கள் குறைவடைந்திருக்கிறது. இது குறித்து எவரும் கவலைப்பட்டதுண்டா..???! இதே பெண்களுக்கு என்றால்..பெண்ணை படிக்க விடுகிறார்கள் இல்லை..அதற்கான காரணங்கள் என்ன என்று இத்தனைக்கும் பக்கம் பக்கமாக ஆராய்ந்து கொண்டிருப்பார்கள்..!

இப்போ எல்லாம் பல்கலைக்கழகங்களில் பல பாடத்துறைகளிலும் பெண்கள் தான் அதிகம். இதனால் இன்னும் ஒரு 20 ஆண்டுகளில் பெண்கள் தான் பல உயர்பதவிகளை அலங்கரிக்கப் போகின்றனர். இதனால் ஆண்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக பெண்களால் நடத்தப்படக் கூடிய சூழல் உண்டு.

நீங்கள் நினைக்கிறாப் போல இல்லை..! ஆண்கள் பெண்களின் வளர்ச்சியில் காட்டும் அக்கறை போல..பெண்கள் ஆண்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்டுபவர்களாக இல்லை. ஆண்கள் புறக்கணிப்படுவதை பெண்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. தங்கள் சுயநலத்துக்கும் சுயலாபத்துக்கும் சுகபோகத்துக்குமே பெண்கள் அதிகம் முன்னுரிமை கொடுக்கின்றனர். கேட்டால் அது எனது உரிமை எங்கின்றனர். ஆனால்..இதை ஆண் செய்தான் என்று வைச்சுக் கொள்ளுங்களேன்..பெண் புறக்கணிக்கப்படுகிறாள்..பெண்ணின் மீது ஆணுக்கு அக்கறையில்லை..அன்பில்லை...அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்றான் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள்..!

எனவே மாறிவரும் சமூகப் போக்கில் ஆண்களின் வளர்ச்சி என்பது பெண்களுக்கு நிகராக பெண்களின் வளர்ச்சிப் போக்குக்கு சமாந்தரமாக அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அது எந்த வகையிலும் வீழ்ச்சியடைய அனுமதிக்க முடியாது. அப்படி இல்லாத போது புறக்கணிப்புக்கள் மூலமாக.. பெண்மேலாதிக்கத்துக்குள் ஆண்கள் அடிமைப்படுத்தப்படக் கூட வாய்ப்பிருக்கிறது..! அந்த வகையிலும்..ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் புரிந்துணர்வுகளை அதிகரிக்கும் நோக்கோடும்..ஆண்களின் பிரச்சனைகளும் கருத்துக்களும்..விசேடமாக தனித்து இனங்காட்டப் படவும்..பெண்களின் ஒத்துழைப்போடு..புரிந்துணர்வோடு..பரிகாரங்கள் தேடப்படவும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

சமூகத்தில் ஆண்களின் வீழ்ச்சி என்பது பெண்களின் எழுச்சி அல்ல..! ஆண்களின் வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த சமூகத்தினதும் வீழ்ச்சியாகவே நோக்கப்பட வேண்டும். பெண்களின் வீழ்ச்சி கடந்த காலங்களில் எப்படி சமூகத்தைப் பாதித்ததோ..அதே போல் ஆண்களின் வீழ்ச்சியும் சமூகத்தைப் பாதிக்கும். அது நடக்க முதலே ஆண்கள் தங்கள் உரிமைகளை திறமைகளை பெண்களுக்கு நிகராக பேண வேண்டியது அவசியமாகிறது. ஆண்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் இடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்..! பெண்களுக்கு என்று மட்டும் ஒரு பக்கம் வழங்கும் பத்திரிகைகளில் இருந்து அது ஆரம்பிக்கப்பட வேண்டும்..!

இது வெறும் கூக்குரலில்ல..சமூகத்தில் ஆண்களின் கல்வித்தரம் மோசமான வீழ்ச்சியைக் கண்டுவரும் நிலையில்...ஆண்கள் வேலைத்தளங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் நிலையில்...மேலும் ஆண்கள் மெளனிகளாக இப்பதில் அர்த்தமில்லை. அதேபோல்..பெண்களுக்கும் ஆண்களின் சமூகப் பிரச்சனைகளை இனங்காட்ட வேண்டிய தேவையும்..ஆண்களின் வளர்ச்சிக்கு அவர்களும் அவர்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டிய அவசியமும் எழுந்துள்ள சூழலில்..இது முக்கியமாகிறது..!

ஆதார இணைப்பு..ஆங்கில மொழி மூலம்

"Employment

Men in full-time employment work an average of 41.9 hours per week compared to women's 37.6 hours per week. More men than women work. However the unemployment rate for men at 14% is currently about three times the female rate.

Traditional industries that have employed men are being closed such as mining and ship building. Nothing is being done to restore the wealth creating manufacturing industry, which would employ men.

Men also take on jobs that are hard, dangerous, and dirty. Industrial injuries at work are overwhelmingly of men. It is very rare to see women working as street cleaners or refuse collectors. These are the so called glass cellar jobs i.e. jobs that women seem not to want
"

7 comments:

thiru said...

நண்பரே,

பெண்கள் சுயமாக சிந்திந்து, முடிவெடித்து செயல்பட அனுமதிக்கிறதா சமூகமும் குடும்பமும்?

நீர் ஆதாரமாக வழங்கிய இணையத்தளம் ஒரு ஆணாதிக்க சிந்தனை தளம். http://www.coeffic.demon.co.uk/index.htm

இதிலுள்ள செய்திகளும், புள்ளிவிபரங்களும் எவ்வளவு உண்மையானவை தெரியுமா? உண்மையில் ஆண்களை விட வேலையில்லா திண்டாட்டத்தில் அவதியுறுவது பெண்களே! இதை ஐ.நா அமைப்பு சொல்லியிருக்கிறது.

kuruvikal said...

நண்பரே உங்கள் வரவுக்கு நன்றிகள்..!

பெண்களுக்கு மட்டும் தான் சமூகப் பிரச்சனை என்ற அபிப்பிராயமே..ஆண்களுக்கு உள்ள சமூகப்பிரச்சனைகளை மறைக்கப்பட ஏதுவாகி விடுகிறது. ஆண் பெண் என்ற பாகுபாட்டுக்கு அப்பால் எல்லோரும் மனிதர்கள் என்ற அந்தப் பொதுமைப்பாட்டின் கீழ் சமூகம் ஆண் பெண் இருவரினதும் சமூகவியல் பிரச்சனைகளை அணுக வேண்டுமே தவிர..ஆண்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்பதை நிச்சயமாக இலகுவாக தட்டிக் கழித்துவிட முடியாது.

குறித்த இணையத்தளம் தருவது பிரித்தானிய தேசத்தில் உள்ள புள்ளி விபரங்களை. ஒரு வளர்ந்த தேசத்திலேயே இப்படி பிரச்சனைகள் ஆண்களுக்கு இருக்கும் போது..இன்னும் உலகில் வெளிவராமல் எவ்வளவு இருக்கோ என்பது...சிந்திக்கப்பட வேண்டிய அம்சம்..!

பெண்கள் மீதான அதீத அக்கறையில் ஆண்கள் புறக்கணிக்கப்படுவது சாதாரணமாக எடுக்கப்படுகின்றது என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. ஆண்களின் கருத்துக்கள் வீட்டிலும் சரி வெளியிலும் சரி பெண்களால் அதிகம் கூர்ந்து நோக்கப்படுவதாகத் தெரியவில்லை. அந்த வகையில் ஆண்களுக்கும் சமூகப்பிரச்சனைகள் இருக்கு என்பதை பெண்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தேவையும்..அதன்பால் பெண்களின் புரிந்துணர்வும்..ஒத்துழைப்பும் பெறப்பட வேண்டியதும் அவசியமாகிறது. ஆணும் பெண்ணும்..இணைந்ததே மனித சமூகம்..! ஒன்றின்றி மற்றதில்லை..!

தொடர்ந்து உங்கள் அனைவரினதும் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.!

குருவிகள்.

kuruvikal said...

இவ்வாக்கம் குறித்த உங்கள் விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..!

குருவிகள்..!

kuruvikal said...

உங்கள் பதிவுக்கு நன்றி வைசா.

பெண்களின் பிரச்சனைகளுக்கு சமூகத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் போல..ஆண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். பாகுபாடுகளற்ற ஆண் பெண் சமூகவியல் உரிமைச் சமத்துவமே மனித இனத்தில் சீரிய வளர்ச்சிக்கு அவசியம்..! பெண்களின் ஆதிக்க உணர்வோ..ஆண்களின் ஆதிக்க உணர்வோ..ஒருவரை ஒருவர் தனித்து உயர்ந்தவர் என்று நோக்குதலோ..ஒருவரை ஒருவர் புறக்கணிப்பதோ..அல்லது ஒருவரின் தேவைகளை மற்றவர் நிராகரிப்பதோ..புறக்கணிப்பதோ...சமூகத்தில் ஆண் பெண் பாகுபாட்டினால்..சமூகத்துள் விரிசல்கள்..பலவீனங்கள்..குடும்பப் பிரச்சனைகள் வாயிலாக ஊற்றெடுக்கவே உதவும்..இது மனித இன வளர்ச்சிப் போக்கையும்..இருப்பையும் பாதிக்கச் செய்யலாம்..! எனவே இது தொடர்பில் சமூகத்தில் சரியான விழிப்புணர்வைக் கொண்டுவருவதும்..அதன்படி சமூக நடத்தைகளை மாற்றி அமைப்பதும்..அதற்கு பழக்கப்படுத்துவதும்..அவசியமாகிறது..!

குருவிகள்..!

நளாயினி said...

என்ன குருவியள் இதை இன்னும் விடுறபாடா இல்லைப்போலை. நல்லாத்தான் நொந்த நூலாகிறியள் ...

kuruvikal said...

உலகின் பார்வைகள் பல விதமக்கா. உங்கள் பார்வை ஒருவிதம்.. எனது பார்வை இன்னொரு விதம்.. இப்படி.. பார்வைகள் மனிதருக்கு மனிதர் பல விதம்.

நளாயினி said...

தேன்வந்து பாயுது காற்றினிலே. கனவா நனவா. நம்பவே முடியேலை. குருவியிடமிருந்து இப்படி ஒரு பதிலா..