Sunday, February 05, 2006

சாதிகள் இல்லையடி பாப்பா.. உயர்வு தாழ்வு சொல்வது பாவம்.



பாரினில் தமிழன்
தான் ஓர் இனம்..!
மனுக்குல உண்மைகள்
மறந்தும் சிலர்
பார்ப்பர்ணியம் உச்சரித்தே
சாதிக்கத் துடிக்கிறார்
இன்னும் தமிழருள் பிரிவினைகள்..!
பெரியார் ஓதாமல்
ஓதிவைத்தான் வேற்றுமைகள்
சிறுமைகள் காட்டி
மதத்தால் ஒதுக்கி
பேசியது என்னவோ
"வேண்டாம் பிரிவினை"..!
உதாரணம் சொல்ல
ஒரு அம்பேத்கார்
யாரவர்..??!
கேள்விகள் முளைக்க
விடைகள் வரும்
"ஒடுக்கப்பட்டவர்"
இப்படித்தான் இன்னும்
அடையாளம் காவுகிறார் தந்திரமாய்..!

இன்னது இல்லையென்று
அத்தனையும் உச்சரிச்சு
மறைமுகமாய் அனைத்தும் காட்டி
சாதிக்க நிற்கின்றார் சிலர்..!
போடும் கோஷம் என்னவோ
"வேண்டாம் ஒழிப்போம்"..!
கேவலம்...
வேஷங்கள் கலைக்கா
கோமாளிகள் தாமென்ற
உண்மை உணரவில்லை அவரும்..!

தமிழனவன் திராவிடன்
தென்னகம் அவன் வாழ்நிலம்
வஞ்சிக்க வந்த அந்நியம் கண்டு
ஆரியம் திராவிடம் வகுந்து
கொண்ட வீரம் தொலைத்து
மருண்டதேனோ..?!
பிரிவினைகள் பாகுபாடுகள்
தந்ததென்று
இன்னும் வரலாறு வரைவதேனோ..?!
மறந்திட வேண்டியவை
மறுபடி வரலாற்றில்
மதிக்கப்படவும் வேண்டுமோ...?!
பார் இன்னும்
பார்ப்பர்ணியம் உச்சரிக்கும்
கூட்டம் இருக்குது...
பெரியார் வழியில்
வந்த சிறுமைகள் அவை
வாய் கிழிய உச்சரிப்பது
இன்னும் என்னவோ
வேற்றுமை தான்..!

பேடிகள்
இந்தக் குள்ளநரிகள்
கையறுத்து
அழிப்போம் மீளப்பதியும்
தந்திரச் சான்றுகள்..!
திராவிட உலகில்
தமிழன் ஓர் மனித இனம்
அதுவே உண்மை...
சாதித்து நின்று
கரம் கோர்ப்போம் ஓரணியில்
மற்றதுகள் மறுப்போம்..!

வடிவங்கள் மாறினும்
புரட்சியாய் தோன்றிலும்
பலரும் போதிப்பது என்னவோ
ஏற்றமும் தாழ்வும்..!
வேண்டாம் அது
இக்குஞ்சுகள் போல
தமிழரும் மனிதராகி
சமத்துவம் காணுவோம்
நமக்குள்ளேயே...!
வேண்டாத உச்சரிப்புகள்
தவிர்ப்போம்...
மறந்தவை மரிக்கட்டும்..
நிரந்தரமாய்..!

3 comments:

Anonymous said...

சூப்பர் கட்டுரை தல.
உப்பிடியே தொடர்ந்து எழுதினா "ஒஸ்கார்" விருது கிடைக்கும்.

Anonymous said...

கட்டுரையா???? தல. ஒஸ்கார் வேணாமாம் தமிழர்கள் இனியாவது உருப்படியா சிந்திகட்டும் என்றார் விடயம் சொன்னவர்.

kuruvikal said...

வணக்கம் தல மற்றும் அனோனிமஸ்...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஒஸ்காருக்காகவோ விருதுக்காகவோ வெற்றுப் புகழ்சிக்காகவோ அன்றி..வேறுபாடுகளின் மூலம் மேலும் வேண்டாத வேறுபாடுகள் வளர்க்கப்படுதலை சுட்டிக்காட்டுதலே எழுத்தின் நோக்கம்..அவை நிச்சயம் தமிழர் சமூகத்தைப் பலப்படுத்தாது..!

நன்றி.